11.03.2022 // நினைவூட்டல் - 1// மிக மிக அவசரம் //
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2021 – 2022 ஆம் கல்வியாண்டு - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்தும், சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம் பெற்றும் இதுவரை சமர்ப்பிக்காமல் உள்ள பள்ளிகள் நாளை 11.03.2022 அன்று முற்பகல் 11.00 மணிக்குள் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட்டு அதன் 3 நகலினை இவ்வலுவலக அ5 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2, ATTACHMENT - 3
குறிப்பு: -
மேலும், SC/ST கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வழங்கியவர்களுள் கீழ்கண்ட பள்ளிகள் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு MS-EXCEL SHEET இல் பூர்த்திசெய்த தகவல்களை நாளை காலை 11.00 மணிக்குள் அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.