Wednesday 30 September 2020

 01.10.2020    // மிக மிக அவசரம்//

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2019 -2020  ஆம் கல்வியாண்டில் LKG   முதல் 12 ஆம் வகுப்பு வரை  30.09.2019 நிலவரப்படி மற்றும் 2020 - 2021  ஆம் கல்வியாண்டில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி கல்வி பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று பிற்பகல் 04.00 மணிக்குள்  தனி நபர் மூலம் 2 நகல்களில் இவ்வலுவலக ஆ2 பிரிவில்   ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

 30.09.2020  // மிக மிக அவசரம் //

அனைத்து அரசு / அரசுஉதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிக்கல்வி- 2021 -2022  ஆம் கல்வியாண்டிற்கான 6 முதல் 12 வகுப்பு வரை தமிழ்வழி , ஆங்கில வழி மற்றும் சிறுபான்மை மொழிகளுக்கான விலையில்லா பாட நூல்களின் உத்தேசத் தேவைப்பட்டியல் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 05.010.2020 அன்று இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ATTACHMENT1  ATTACHMENT2  ATTACHMENT3 ATTACHMENT4 ATTACHMENT5    ATTACHMENT6  ATTACHMENT7 ATTACHMENT8 

 30.09.2020    // காதி சிறப்பு சலுகை //

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 


பார்வையில் காணும் மாவட்ட ஆட்சியர் அவர்களின்  கடிதத்தின் படி எதிர்வரும் 02.10.2020 அன்று நடைபெறும் காந்தி ஜெயந்தி விழாவில் தீபாவளி பண்டிகை மற்றும் காந்தி ஜெயந்தி விழாக்களை முன்னிட்டு காதி சிறப்பு விற்பனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்படுகிறது. 30%  தள்ளுபடி விற்பனை  அறிவிக்கப்பட்டுள்ளது.  அரசு ஊழியர்கள் கடன் அடிப்படையில் காதி பொருட்களை அவர்கள் ஒருமாத அடிப்படை ஊதியத்திற்கு மிகாமல் 10 மாத தவனை அடிப்படையில் வழங்கப்படுகிறது.இதனை  அனைத்து ஆசிரியர்களும்  மற்றும்  பணியாளர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

30.09.2020      // மிக மிக அவசரம் //  தனி கவனம் // திருத்தம் //

 அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

சிறப்பு ஊக்கத்தொகை – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை – மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டது – முழுமையான விவரங்கள் பதிவு செய்யப்படாதது – இணைப்பிலுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு EMIS ல் பதிவு செய்துவிட்டு இணைப்பில் உள்ள இதுவரை பதிவு செய்யாத பள்ளிகள் விடுபட்ட கலங்களை பூர்த்தி செய்து  இன்று மதியம் 02.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com) அனுப்பிவைக்குமாறு அனைத்து அரசு /  அரசு நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT - 1,  ATTACHMENT - 2   ATTACHMENT - 3

குறிப்பு:

1. khzt®fë‹ t§» fz¡F nrä¥ò fz¡F v©, MICR Code, IFSC Code, Bank Name, Branch Name, Student Studied at Govt. / Aided / partly aided / unaided (10, 11 and 12 Std)

2. khzt® gæ‹w tF¥ò / ÃçÎ muR ãÂÍjé bg‰wjh mšyJ RaãÂæš eilbgW»wjh v‹w étu¤ij Remark v‹w fy¤Âš F¿¥Ãl nt©L«. (muR ãÂÍjé bgW« gŸëfŸ k£L«)


Tuesday 29 September 2020

 29.09.2020    

இணைப்பில் உள்ள  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளுக்கு இணங்க இணைப்பில் உள்ள இளநிலை உதவியாளர்களை  இன்று பிற்பகல்  (29.09.2020) விடுவித்து  இவ்வலுவலகத்தில் 30.09.2020 அன்று முற்பகல் முதல் மாற்றுப்பணியில்  சேர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 


Monday 28 September 2020

28.09.2020

அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

சிறப்பு ஊக்கத்தொகை – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை – மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டது – முழுமையான விவரங்கள் பதிவு செய்யப்படாதது – இணைப்பிலுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு விடுபட்ட கலங்களை பூர்த்தி செய்து  நாளை காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com) அனுப்பிவைக்குமாறு அனைத்து அரசு /  அரசு நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1,  ATTACHMENT - 2  ATTACHMENT - 3

 28.09.2020  

அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின்  கவனத்திற்கு 

2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான  1 ஆம் வகுப்பில் புதியதாக சேரும் மாணவர்கள் விவரங்களை EMIS  ல் பதிவு செய்யப்படவேண்டும் . மேலும் ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் 6,9,11 மற்றும் பிற வகுப்புகளில் 2020 -2021  ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரங்கள் ( COMMON POOL - லிருந்து எடுத்து உரிய பள்ளி பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பதிவு விவரங்களை EMIS - ல் பதிவு செய்தால் மட்டும் துல்லியமாக மாணவர்கள் எண்ணிக்கை விவரம் அறிய இயலும் எனவே  இப்பணியில் எந்த ஒரு மாணவர் பெயரும் விடுபடாமல் முழுமையாக EMIS ல் பதிவு செய்து இப்பணி முடிவுற்ற விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 

 28.09.2020

 அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

  உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் குறித்த வழிமுறைகள் இணைப்பில் காணும் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் உரிய நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது. ATTACHMENT 

   28.09.2020    // தனிகவனம்// //இடமாற்றம் அறிவிப்பு //

  சிறுபான்மையினர் நலம்  -  சிறுபான்மையின மதத்தை சார்ந்த தகுதியான மாணவ / மாணவியர்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை பெற வேண்டி இன்னும் NSP(NATIONAL SCHOLARSHIP PORTAL) இணையத்தில் INSTITUTION KYC (REGISTRATION ) முடிக்கப்படாமல் உள்ள இணைப்பில் கண்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 29.09.2020 திருப்பத்தூர் (ஆதியூர்) பொதிகை பொறியியல் கல்லூரியில்  காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை நடக்கும்  இணைப்பில் உள்ள விவரப்படி முகாமில் கலந்துக்கொண்டு இப்பணியை முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

மேலும் கீழ்கண்ட பள்ளிகளில் இருந்து கணினி ஆசிரியர் மற்றும் நன்றாக கணினி இயக்க தெரிந்த அலுவலக பணியாளர்களை  பணியிலிருந்து விடுவித்து அனுப்ப கீழ்கண்ட பள்ளி தாளாளர் மற்றும்  முதல்வர்கள்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

1 . வேதா  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,டி.வீரப்பள்ளி.

2 . வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தோரணம்பதி.

3 . VRV மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்.

4 . கிரின்லேண்ட் மெட்ரிக் பள்ளி ,புதுப்பேட்டை.

5. CS  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெயபுரம்.

6 . யூனிவர்சல்  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை.

7. JTMS மெட்ரிக் பள்ளி, ஊசிநாட்டான்வட்டம்.

8. INFANT JESUS மெட்ரிக் பள்ளி, ஜோலார்பேட்டை.

9. St. CHARLES மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. திருப்பத்தூர்

10. டான்  பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.

11 . CSI  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.

12 விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆதியூர்.

 இணைப்பு1

இணைப்பு 2 

 குறிப்பு . முகாமிற்கு வரும் போது தலைமை ஆசிரியரின்  2 பாஸ்போட் சைஸ்  போட்டோ மற்றும் ஆதார் அட்டை 2  நகல்  எடுத்து வரவும் 

  28.09.2020    // தனிகவனம்// //இடமாற்றம் அறிவிப்பு //

  சிறுபான்மையினர் நலம்  -  சிறுபான்மையின மதத்தை சார்ந்த தகுதியான மாணவ / மாணவியர்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை பெற வேண்டி இன்னும் NSP(NATIONAL SCHOLARSHIP PORTAL) இணையத்தில் INSTITUTION KYC (REGISTRATION ) முடிக்கப்படாமல் உள்ள இணைப்பில் கண்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 29.09.2020 திருப்பத்தூர் (ஆதியூர்) பொதிகை பொறியியல் கல்லூரியில்  காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை நடக்கும்  இணைப்பில் உள்ள விவரப்படி முகாமில் கலந்துக்கொண்டு இப்பணியை முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இணைப்பு1

இணைப்பு 2 

மேலும் வேலூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தின் மூலமாக இம்முகாம் திட்டமிட்டுள்ளதாலும், இதுவே கடைசி வாய்ப்பு என குறிப்பிடப்பட்டுள்ளதாலும் இணைப்பில் கண்டுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களும் தவறாமல் கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

28.09.2020 அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு,


மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் FIT INDIA MOVEMENT சார்பாக அனைத்து பள்ளி உடற்கல்வி இயக்குநர் /ஆசிரியர்களும் இணைப்பில் உள்ள கடித அறிவுரைகளை பின்பற்றி போட்டிகளை நடத்திட அறிவுறுத்துமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2

Saturday 26 September 2020

  26.09.2020  அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தேசிய பசுமைப் படை (NATIONAL GREEN CORPS - NGC)  - ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கு ஒரு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் (NGC COORDINATOR) நியமனம் செய்யும்பொருட்டு தங்கள் பள்ளியில் பணிபுரியும் விருப்பமுள்ள தகுதிவாய்ந்த முதுகலை அறிவியல் ஆசிரியர் (BOTNY BACKGROUND WITH COMPUTER KNOWLEDGE ) உள்ள ஒருவரை  தேர்வு செய்து இணைப்பில் கண்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதத்தின் அறிவுரையை பின்பற்றி படிவத்தில் பூர்த்தி செய்து கையொப்பத்துடன் 01.10.2020 க்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT  

 26.09.2020    // தனிகவனம்//

  சிறுபான்மையினர் நலம்  -  சிறுபான்மையின மதத்தை சார்ந்த தகுதியான மாணவ / மாணவியர்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை பெற வேண்டி இன்னும் NSP(NATIONAL SCHOLARSHIP PORTAL) இணையத்தில் INSTITUTION KYC (REGISTRATION ) முடிக்கப்படாமல் உள்ள இணைப்பில் கண்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 29.09.2020 திருப்பத்தூர் மீனாட்சி அரசு (பெண்கள்) மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை நடக்கும்  இணைப்பில் உள்ள விவரப்படி முகாமில் கலந்துக்கொண்டு இப்பணியை முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இணைப்பு1

இணைப்பு 2 

மேலும் வேலூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தின் மூலமாக இம்முகாம் திட்டமிட்டுள்ளதாலும், இதுவே கடைசி வாய்ப்பு என குறிப்பிடப்பட்டுள்ளதாலும் இணைப்பில் கண்டுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களும் தவறாமல் கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Friday 25 September 2020

 25.09.2020  //  கடைசி நினைவூட்டல் //

அனைத்து அரசு / அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

NMMS - உதவித்தொகை   - 2009 - 2010 ( NMMS தேர்வு ஆண்டு 2008) முதல் 2017 - 2018 ( NMMS தேர்வு ஆண்டு 2016 ) வரை இணைய வழியில் அல்லாமல் Offline  இல் விண்ணப்பித்து இதுவரை NMMS  உதவித்தொகை வழங்கப்படாமல் விடுப்பட்ட மாணவ / மாணவியர்களின் சரியான தகவல்களை நடைமுறையில் உள்ள வங்கிகணக்கு விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து  26.09.2020 காலை 11.00 மணிக்குள் deotpt2015@gmail.com  என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிவைக்குமாறு சார்ந்த  பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

மேலும் 2018 -2019 மற்றும் 2019-2020 ஆம் கல்வியாண்டுகளில் சில காரணங்களினால் Online - ல்  Fresh Application  போடாமல் விடுப்பட்ட மாணவ / மாணவிகளின் விவரங்களையும் மேற்படி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   படிவம் 


 25.09.2020    

அனைத்து  மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு 

2021-2022  ஆம் கல்வியாண்டிற்கு  மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, குஜராத்தி, இந்தி, பிரஞ்சு மற்றும் அரபி ஆகிய பாடநூல்கள் தேவையுள்ள பள்ளிகள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி  செய்து இரு நகல்களில்  29.09.2020 அன்று மாலைக்குள் இவ்வலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் தேவையில்லாத பட்சத்தில் இன்மை அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

 25.09.2020    //தனிகவனம்//

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 மத்திய கல்வி உதவி தொகை திட்டம் - பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம் (NSIGSE)  - 2012-2013, 2013-2014, 2014 - 2015 , 2015 - 2016  மற்றும் 2016-2017  ஆகிய  ஆண்டுகளில் 9 ஆம் வகுப்பு பயின்று தொடர்ந்து அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இத்திட்டத்திற்கு தகுதியான SC/ST  மாணவியர்களின் விவரங்கள் பெறப்பட்டு மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அம்மாணவியர்களை கண்டறிந்து  இணைப்பில் உள்ள படிவத்தில்  அம்மாணவியர்களின் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் பிரதி 4 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் 30.09.2020  க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT1   ATTACHMENT2     PROFORMA

Thursday 24 September 2020

 24.09.2020  //கடைசி நினைவூட்டல்//

ஆதி திராவிடர் நலம் – 2019 – 2020 ஆம் கல்வியாண்டிற்கான 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற SC/ST மாணவிகளுக்கு பெண்கல்வி உதவித் தொகை வழங்கியமைக்கான பயனீட்டு சான்று (Utilisation Certificate) மற்றும் பற்றொப்பம்      (Acquittance)  இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29.09.2020 அன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT

குறிப்பு :   29.09.2020  க்குள் சமர்ப்பிக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி 
தலைமை ஆசிரியர்களே வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல
 அலுவலகத்தில் விளக்கம் அளித்து சமர்ப்பிக்க நேரிடும் என திட்டவட்டமாக
 தெரிவிக்கலாகிறது

 24.09.2020   // மிக மிக அவசரம்//

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

போட்டிகள் - வனவிலங்கு வார விழா - அக்டோபர் 2020 முதல் வாரம் வனவிலங்கு வார விழா கொண்டாடுதல் சார்பாக மாணவர்களுக்கு இணைய வழியில் இணைப்பில் குறிப்பிட்டுள்ள போட்டிகளை நடத்தி இணைப்பில் உள்ள படிவத்தில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்குபெற்றவர்கள் விவரங்களை  தனி தனியே EXCEL SHEET - ல் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற முகவரிக்கு 25.09.2020 காலை 11.00 மணிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT1    ATTACHMENT2

 மேலும் ஓவிய  போட்டிகள் மற்றும் வினாடி வினா போட்டிகளின் படைப்புகள் மற்றும் விவரங்களையும் மின்னஞ்சலில் அனுப்பிவைக்குமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Wednesday 23 September 2020

 23.09.2020   // தனிகவனம்//

அனைத்து அரசு / அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

NMMS - உதவித்தொகை இணைப்பில் உள்ள கடிதங்களின் படி  - 2009 - 2010 ( NMMS தேர்வு ஆண்டு 2008) முதல் 2017 - 2018 ( NMMS தேர்வு ஆண்டு 2016 ) வரை இணைய வழியில் அல்லாமல் Offline  இல் விண்ணப்பித்து இதுவரை NMMS  உதவித்தொகை வழங்கப்படாமல் விடுப்பட்ட மாணவ / மாணவியர்களின் சரியான தகவல்களை நடைமுறையில் உள்ள வங்கிகணக்கு விவரங்களுடன் 25.09.2020 மாலை 05.00 மணிக்குள் deotpt2015@gmail.com  என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிவைக்குமாறு சார்ந்த  பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

மேலும் 2018 -2019 மற்றும் 2019-2020 ஆம் கல்வியாண்டுகளில் சில காரணங்களினால் Online - ல்  Fresh Application  போடாமல் விடுப்பட்ட மாணவ / மாணவிகளின் விவரங்களையும் மேற்படி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

ATTACHMENT1 ATTACHMENT2  ATTACHMENT3

 23.09.2020                                     

                        மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்தூர்

                                            ..எண். 1954/2/2020    நாள்.  23.09.2020


கீழ்கண்ட பள்ளிகள் இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள், சார்ந்த மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை நேரில் ஒப்படைக்குமாறு பள்ளி தாளாளர்கள் / செயளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிதியுதவி பெறும் பள்ளிகள்

1. புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி,  ஜோலார்பேட்டை.
2. உபைபாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
3. தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
4. டான்  போஸ்கோ மேல்நிலைப்பள்ளிஜோலார்பேட்டை.
5. மேரி இமாக்குலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
6. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
7. புனித சார்லஸ் மேல்நிலைப்பள்ளி அத்தனவுர்.   
8. அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளி திருப்பத்தூர்.
9. இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
10. TMS மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.

 23.09.2020 அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும்  முதல்வர்கள் கவனத்திற்கு, 


2020 - 2021 ஆம் ஆண்டுக்கான INSPIRE AWARD புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணையதள மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 ஆம் தேதி கடைசி தேதியாக குறிப்பிட்டுள்ளதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும் விண்ணப்பித்த பள்ளிகள் விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Link - ஐ  Click செய்து உள்ளீடு செய்யுமாறு  அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும்  முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யவும். https://forms.gle/MrGEUCtKrma3cVQU8


Tuesday 22 September 2020

 22.09.2020   // அவசரம் //

அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

இணைப்பில் காணும் படிவத்தில் கோரியுள்ள விவரங்களை பூர்த்தி செய்து இரு நகல்களில் மறு நினைவூட்டிற்கு இடமின்றி 23.09.2020 பிற்பகல் 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Monday 21 September 2020

 21.09.2020  // துணைத்தேர்வுகள் //

அனைத்து வகை  முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 

 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுகள் நடைபெறும் ஒவ்வொறு நாளும்  தேர்வு முடிவுற்றவுடன் வருகை புரிந்தோர் ( ABSENTEES ENTRY )  விவரங்களை பிற்பகல் 2.00 மணி முதல் 03.00 மணிக்குள்  WWW.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User Id  மற்றும் Password  ஐ பயன்படுத்தி பதிவேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  

குறிப்பு :- அரசு தேர்வுகள் இயக்குநரால் மொழிப்பாட விலக்கு சலுகை வழங்கப்பட்ட தேர்வர்களது விவரங்களை மட்டும் Language exemption  என இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்   என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  

Saturday 19 September 2020

 19.09.2020  // மிக மிக அவசரம் //

அனைத்து அரசு / நிதியுதவி பெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

MBC - 2019 - 2020  6 ஆம் வகுப்பு பயின்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்கத் தொகை வழங்க பள்ளிகளின் வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு பெயர்,  IFSC Code, MICR Code வங்கி பெயர் உள்ளிட்ட விவரங்கள் கோரப்பட்டது. ஆனால் கீழ் கண்டுள்ள பள்ளிகளின் வங்கி கணக்கு விவங்கள் வரப் பெறாததால், MBC  பெண்கல்வி ஊக்கத் தொகை வழங்க கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் மேற்கூறிய விவரங்கள் இன்று மாலை 5 மணிக்குள்  deottr@nic.in  என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு அதன் நகல் வங்கி புத்தக நகலுடன் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

1. அரசு உயர்நிலைப்பள்ளி வெங்களாபுரம்.

2. அரசு உயர்நிலைப்பள்ளி நிம்மியம்பட்டு.

3. அரசு மேல்நிலைப்பள்ளி புதுப்பேட்டை.

4. அரசு மேல்நிலைப்பள்ளி கொரட்டி.

5. அரசு மேல்நிலைப்பள்ளி  கசிநாயக்கன்பட்டி

6. அரசு மேல்நிலைப்பள்ளி பேராம்பட்டு

7. அரசு மேல்நிலைப்பள்ளி அத்தனாவூர்

8. அரசு மேல்நிலைப்பள்ளி கிரிசமுத்திரம்.

9. செயின்ட் சார்லஸ் மேல்நிலைப்பள்ளி அத்தனாவூர்.

 19.09.2020  // துணைத்தேர்வுகள் அவசரம் //

  செப்டம்பர் 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுகளில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் தேர்வு முடிந்தப்பின்னர் இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் மற்றும் ஆவணங்களை குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைப்படி அனுப்பிவைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

ATTCHMENT1, ATTACHMENT2   CSD SSLC FORM , CSD HSC FORM

Friday 18 September 2020

 19.09.2020    //  நினைவூட்டல் - 1 //

2019 -2020  ஆம் கல்வியாண்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு பயின்ற SC/ST/SCC  மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பயிற்சி தொடர்பாக வழங்கப்பட்ட பயிற்சி ஆணை மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை  ஆசிரியரால் வழங்கப்பட்ட வருகை சான்றின் அடிப்படையில் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக அ5 பிரிவில் 21.09.2020 மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

19.09.2020      // நினைவூட்டல் -3 //

அனைத்து அரசு /அரசு நிதியுதவி உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

NMMSS - 2020 - 2021 கல்வியாண்டில் NMMSS உதவித் தொகை பெற இணைப்பில் உள்ள பள்ளி மாணவ /மாணவிகளின் விவரங்களை உடனடியாக NSP இணையதளத்தில் (Fresh Entry / Renewal) பதிவேற்றம் /புதுப்பித்தல் செய்து Institute Level - இல் சரிபாா்த்து Submit செய்து  அதன் Report - யை இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT

1NMMS Result - இல் உள்ள படியே விண்ணப்பத்திலும் பெயர் இருத்தல் வேண்டும்.

2. Scholarship என்ற கலத்தில் Prematric -  யையும்  Scheme Type என்ற கலத்தில் Scholarship  யையும் தேர்வு செய்ய வேண்டும். Father Occupation - இல் Other  என்று Select செய்ய வேண்டும்.

3. ஆதார் அட்டை மற்றும் NMMS Result  ஒரே மாதிரியான பெயர் இருந்தால் மட்டுமே ஆதார் அட்டை Upload செய்யப்பட வேண்டும். இல்லையெனில் Bank Pass Book Upload செய்தல் வேண்டும். 

4. Community - இல் Sc /St / General மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

5. Previous  year - 2020 & Competitive Exam Year - 2019  என Enter செய்ய வேண்டும்.

6.Renewal Application ஒரு போதும் Withdraw செய்தல் கூடாது. Correction இருந்தால் Defect  மட்டுமே கொடுக்க வேண்டும்.

 19.09.2020  // தேர்வுகள் அவசரம்//

நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுகள்  செப்டம்பர் 2020 -  குனிச்சி மேல்நிலைப்பள்ளி இளநிலை உதவியாளர் திரு. மாதையன் அவர்களை தேர்வு பணிக்கு லயன்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு  விடுவித்து அனுப்புமாறு சார்ந்த தலைமை ஆசிரியர் அவர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

Thursday 17 September 2020

 17.09.2020  // தேர்வுகள் அவசரம் //

அனைத்து  உயர் / மேல்நிலைப்பள்ளி  பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  / துறை அலுவலர்கள்./ அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின்  கவனத்திற்கு 

தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களில் 18.09.2020 காலை 10.00 மணிக்குள் முதன்மைக்கண்காணிப்பாளர்கள் , துறை அலுவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள். அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மைய்ங்களுக்கு சென்று பொறுப்பினை ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். 

 18.09.2020 அன்று  மதியம் 02.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

   இணைப்பில் கண்ட அறைக்கண்காணிப்பு ஆசிரியர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு, இணைப்பு,


 17.09.2020  // அவசரம்//

அனைத்து அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

2020  செப்டம்பர் மாதத்திற்கான ஊதிய பட்டியல் 19.09.2020 ஆம் தேதிக்குள் IFHRMS  இல் தயாரித்து சமர்பிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

Wednesday 16 September 2020

17.09.2020    // மிக மிக அவசரம் //

அனைத்து வகை அரசு / நிதியுதவி /மெட்ரிக் /நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் /தாளாளர்கள் கவனத்திற்கு,

2020 - 2021 ஆம் ஆண்டிற்குரிய INSPIRE AWARD புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருது பெற www.inspireawards-dst.gov.in என்ற இணையதள மூலம்  30.09.2020 க்குள் விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்கள் /தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
 16.09.2020   // தேர்வுகள் அவசரம் //
மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு  நடைபெற உள்ள தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அப்பள்ளியின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு, 
மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு  பொதுத் தேர்வு செய்முறைத் தேர்வுக்கு வருகை புரியாத / தேர்ச்சிப் பெறாத தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வினை நடத்தி, மதிப்பெண் பட்டியல்களை இணைப்பில் உள்ள அரசு தேர்வு இயக்குநரின் அறிவுரைப்படி செயல்படுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மதிப்பெண் நகலை தனிநபர் மூலம்  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT

 16.09.2020   // தேர்வுகள் அவசரம் //

10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு  நடைபெற உள்ள தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அப்பள்ளியின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு, 

 17.09.2020  மற்றும் 18.09.2020 ஆகிய இரு நாட்களில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு வருகை புரியாத / தேர்ச்சிப் பெறாத தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வினை நடத்தி, மதிப்பெண் பட்டியல்களை 19.09.2020 அன்று இவ்வலுவலகத்தில் தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT  

Tuesday 15 September 2020

 15.09.2020   // தேர்வுகள் அவசரம் //

 இணைப்பில் உள்ள சார்ந்த தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 


நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணை தேர்வுகள் செப்டம்பர் 2020 மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் சொல்வதை எழுதும் ( Scribe)  இணைப்பில் உள்ள ஆசிரியர்களை உடனடியாக  கோவிட் -19  பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 மேலும் அதன் அறிக்கையை  18.09.2020 அன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில்  சமர்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு 

 15.09.2020  அனைத்து அரசு  உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்ட ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளிகளுக்கான 31.08.2020 வரையிலான காலங்களுக்கு நிலுவையில் உள்ள 34 மின் இணைப்புகளுக்குட்பட்ட இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கான மின் கட்டண நிலுவைத் தொகையினை செலுத்த நடவடிக்கை மேற்கொண்டு  அதன் விவரத்தினை மேற்கண்ட மின்பகிர்மான வருவாய் பிரிவு /திருப்பத்தூர் அவர்களுக்கு அனுப்பி விட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு  சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. ATTACHMENT-1, ATTACHMENT - 2

Monday 14 September 2020

 15.09.2020 // மிக மிக  அவசரம்//

அனைத்து வகை   அரசு தொடக்க / நடுநிலை/ உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து  அரசு தொடக்க / நடுநிலை/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளும் தேர்தல் (POLLING STATION LOCATION) பார்வையிடும் பணிக்காக 15.09.2020 முதல் 30.09.2020 காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர்  மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் உத்தரவு  இணைப்பு 

 14.09.2020   // நினைவூட்டல் - 2 //

அனைத்து அரசு /அரசு நிதியுதவி உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

NMMSS - 2020 - 2021 கல்வியாண்டில் NMMSS உதவித் தொகை பெற இணைப்பில் உள்ள பள்ளி மாணவ /மாணவிகளின் விவரங்களை உடனடியாக NSP இணையதளத்தில் (Fresh Entry / Renewal) பதிவேற்றம் /புதுப்பித்தல் செய்து Institute Level - இல் சரிபாா்த்து Submit செய்து இப்பணியை விரைவாக முடிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT

1. NMMS Result - இல் உள்ள படியே விண்ணப்பத்திலும் பெயர் இருத்தல் வேண்டும்.

2. Scholarship என்ற கலத்தில் Prematric -  யையும்  Scheme Type என்ற கலத்தில் Scholarship  யையும் தேர்வு செய்ய வேண்டும்.

3. ஆதார் அட்டை மற்றும் NMMS Result  ஒரே மாதிரியான பெயர் இருந்தால் மட்டுமே ஆதார் அட்டை Upload செய்யப்பட வேண்டும். இல்லையெனில் Bank Pass Book Upload செய்தல் வேண்டும். 

4. Community - இல் Sc /St / General மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

5. Previous  year - 2020 & Competitive Exam Year - 2019  என Enter செய்ய வேண்டும்.

6.Renewal Application ஒரு போதும் Withdraw செய்தல் கூடாது. Correction இருந்தால் Defect  மட்டுமே கொடுக்க வேண்டும்.

 14.09.2020    // துணைத் தேர்வுகள் அவசரம் // HALL TICKET DOWNLOAD //

அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு - 

நடைபெற உள்ள செப்டம்பர் /அக்டோபர்  - 2020, மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தற்போது விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் மற்றும் மார்ச் - 2020 பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்திருந்த தனித் தேர்வர்களும் 15.09.2020 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை (HALL TICKET) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்  என தெரிவிக்கலாகிறது.  ATTACHMENT - 1, ATTACHMENT- 2

குறிப்பு: செய்முறைத் தேர்வு செய்ய வேண்டிய தனித் தேர்வர்கள், கருத்தியல் தேர்வு (Theory Exam) நடைபெறும் நாட்களுக்கு முன்னரே தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி செய்முறைத் தேர்வு நடைபெறும்  தேதி குறித்த விவரத்தை அறிந்து கொள்ள வேண்டும். 

 14.09.2020   அனைத்து அரசு / நிதியுதவி பெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

ஆதிதிராவிடர் நலம் - பார்வையில் காணும் கடிதத்தின் படி கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் செலவினம் மேற்கொள்ள பெறப்பட்ட நிதியினை ஏதேனும் ஒரு காரணத்தினால் அரசு கணக்கில் அதே நிதியாண்டில் செலுத்தும் நேர்வுகளிலும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் செலுத்தும் நேர்வுகளிலும் இணைப்பில் குறிப்பிட்டுள்ள உரிய கணக்குத் தலைப்பின் கீழ் செலுத்துமாறு அனைத்து அரசு / நிதியுதவி பெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT -1, ATTACHMENT -2

14.09.2020                            

                                         மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்தூர்

                                            ..எண். 1814/2/2020    நாள்.  14.09.2020


கீழ்கண்ட பள்ளிகள் இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள், சார்ந்த மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை நேரில் ஒப்படைக்குமாறு பள்ளி தாளாளர்கள் / செயளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிதியுதவி பெறும் பள்ளிகள்

1. புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி,  ஜோலார்பேட்டை.
2. உபைபாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
3. தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
4. டான்  போஸ்கோ மேல்நிலைப்பள்ளிஜோலார்பேட்டை.
5. மேரி இமாக்குலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
6. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
7. புனித சார்லஸ் மேல்நிலைப்பள்ளி அத்தனவுர்.   
8. அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளி திருப்பத்தூர்.
9. இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
10. TMS மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.

Sunday 13 September 2020

 14.09.2020  -   பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - மார்ச் - 2020

அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு - 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர்பட்டியல் தயாரிக்க போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டும்,  சில பள்ளிகளிலிருந்து பெயர்பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ளக்  கோரிக்கைகள் பல வந்த வண்ணம் உள்ளன. எனவே இது போன்ற கோரிக்கைகள் தவிர்க்கும் வண்ணம் பள்ளி மாணவர்களின் பெயர் திருத்தங்கள் மேற்கொள்ளவும் மாணவர்கள் நலன் கருதி மதிப்பெண் சான்றிதழ்களில் எவ்வித திருத்தங்களும் ஏற்படாவண்ணம்  மதிப்பெண் சான்றிதழ் அச்சிடுவதற்கு ஏதுவாக  அனைத்து உயர்நிலை /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 14.09.2020 முதல் 15.09.2020 வரை  இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ்வாய்ப்பினை தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT

 

Wednesday 9 September 2020

 09.09.2020   

 இணைப்பில் உள்ள   பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 


ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ஊரக திறனாய்வு தேர்வு - செப்டம்பர் - 2016 ,செப்டம்பர் - 2017 ,செப்டம்பர் - 2018 மற்றும் செப்டம்பர் - 2019- ல் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ1000/- க்கான காசோலை இணைப்பில் கண்டுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு  10.09.2020 அன்று (காலை 9.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை) சார்ந்த ஆசிரியரைஅனுப்பி பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் வரும்போது பற்றொப்ப இரசீதுடன் வந்து பெற்று கொள்ள மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT 

Tuesday 8 September 2020

    09.09.2020                            

                                         மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்தூர்

                                            ..எண். 1529/2/2020    நாள்.  08.09.2020


கீழ்கண்ட பள்ளிகள் இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள், சார்ந்த மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை நேரில் ஒப்படைக்குமாறு பள்ளி தாளாளர்கள் / செயளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிதியுதவி பெறும் பள்ளிகள்

1. புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி,  ஜோலார்பேட்டை.
2. உபைபாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
3. தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
4. டான்  போஸ்கோ மேல்நிலைப்பள்ளிஜோலார்பேட்டை.
5. மேரி இமாக்குலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
6. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
7. புனித சார்லஸ் மேல்நிலைப்பள்ளி அத்தனவுர்.   
8. அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளி திருப்பத்தூர்.
9. இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
10. TMS மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.