Wednesday 30 June 2021

01.07.2021     // தனி கவனம்//

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

E-SR Update 09.07.2021  அன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பணிப்பதிவேட்டினை Update செய்யாத தலைமை ஆசிரியர்கள் அலுவலகத்தில் பணிப்பதிவேட்டினை பெற்று E-SR Update  உரிய நேரத்திற்குள் முடித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பணிப்பதிவேடு பெற்று சென்ற தலைமை ஆசிரியர்கள் E-SR  பணி முடித்திருப்பின் திரும்ப அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 30.06.2021  

அனைத்து அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்களின் கவனத்திற்கு 

எதிர் வரும் 06.07.2021 முதல் 10.07.2021 வரை திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் 2019 -2020  மற்றும் 2020 -2021 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் பொருட்டு தேர்ச்சி பதிவேடு மற்றும் சேர்க்கை நீக்கல் பதிவேடுகளை (A,B,C&D பதிவேடு உட்பட) முழுமையாக பூர்த்தி செய்து ஒப்புதல் பெற தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

குறிப்பு . இடம் , பங்கேற்கும் பள்ளிகளின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் 

Monday 28 June 2021

 28.06.2021            //மிக அவசரம் //

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி பெற வேண்டி பணிவரன்முறை செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத பணியாளர்கள் விவரம் இணைப்பில் கண்ட படிவத்தினை பூர்த்தி செய்து  நாளை காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக  அ1 பிரிவில் 2 நகல்களில் நேரில் சமர்ப்பிக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இணைப்பு - 1 இணைப்பு-2 

குறிப்பு:  பெயர் விடுபட்டு பின்னர் கண்டறியப்பட்டால் அதற்கு சார்ந்த பணியாளர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரே பொறுப்பு ஆகும் 

 28.06.2021  

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

இணைப்பில் உள்ள கடிதங்களின் படி பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள ஆன் லைன்  படிவத்தில்  (29.06.2021 ) அன்று மாலை 5.00 மணிக்குள்  உள்ளீடு செய்ய   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET

இணைப்பு  

குறிப்பு . இன்மை அறிக்கை  எனினும்  ஆன் லைன் படிவத்தில் உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Sunday 27 June 2021

 28.06.2021     அனைத்து அரசு நிதியுதவி  பள்ளித் தாளாளர் மற்றும்  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்    கவனத்திற்கு,

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் நிதியுதவி பெறும் பள்ளிகள் சார்பான 2020 - 2021 புள்ளியியல் கையேடு தயாரிப்பதால் இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து 29.06.2021 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ2 பிரிவில்  நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு நிதியுதவி  பள்ளித் தாளாளர் மற்றும்  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 


Wednesday 23 June 2021

 24.06.2021        //அவசரம் // தனிகவனம் //

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்ற அனைத்து வகை (SSA, RMSA, கட்டிடம், PTA, தனிகட்டணம்)  வங்கி கணக்கு விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆன் லைன் படிவத்தில் இன்று (24.06.2021) 2.00 மணிக்குள்  உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்  வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் 31.03.2021 அன்றைய நிலவரப்படி இருப்பு உள்ள பக்கத்தின் புகைப்பட நகலுடன் இணைத்து  24.06.2021  பிற்பகல்  03.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்கண்ட விவரங்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்   அவசரமாக கோரியுள்ளதால் தனிகவனம் செலுத்தி எவ்வித காலதாமதமும்  இன்றி செயல்பட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது                    ONLINE SHEET 

குறிப்பு . எந்த காரணத்தை கொண்டும் ஆன் லைன் படிவத்தில் விவரங்களை மட்டும் உள்ளீடு செய்யுவும்  DELETE  செய்யவேண்டாம்

எற்கனவே உள்ளீடு செய்த பள்ளிகள் அனைத்தும் மீண்டும் உள்ளீடு செய்யுமாறு  அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.  

 23.06.2021        //அவசரம் // தனிகவனம் //

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்ற அனைத்து வகை (SSA, RMSA, கட்டிடம், PTA, தனிகட்டணம்)  வங்கி கணக்கு விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் முழு வடிவில் பூர்த்தி செய்து வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் 31.03.2021 அன்றைய நிலவரப்படி இருப்பு உள்ள பக்கத்தின் புகைப்பட நகலுடன் இனைத்து நாளை 24.06.2021  முற்பகல்  11.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்கண்ட விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அவசரமாக கோரியுள்ளதால் தனிகவனம் செலுத்தி எவ்வித காலதாமதமும்  இன்றி செயல்பட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கம் தெரிவிக்கலாகிறது. இணைப்பு   

Friday 18 June 2021

 18.06.2021  // கொரோனா நிவாரண நிதி ஒரு நாள் ஊதியம் பிடித்தம் //

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று (கோவிட் 19) பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களது ஒருநாள்  அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான உதியத்தினை வழங்க விரும்பும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்  அதற்கான தங்களது விருப்பத்தினை சம்பந்தப்பட்ட ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு எழுத்து பூர்வமாக அளிக்க வேண்டும் 

    மேலும் JUNE 2021   நிகர ஊதியத்தினை அடிப்படையாக கொண்டு  IFHRMS ல் உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி பணியாளர்களின் ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தினை பிடித்தம் செய்ய  அனைத்து வகை தலைமையாசிர்களும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு 

Wednesday 16 June 2021

 16.06.2021

 அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

 கருவூல கணக்குத்துறை ஆணையர் அவர்களின் VIDEO CONFERENCE செய்தியின் படி பணிப்பதிவேடு - E-Service Register IFHRMS  ல் 18.06.2021 க்கு முன் முடிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு1 

Sunday 13 June 2021

 14.06.2021- தேர்வுகள் - தனிகவனம். 

    அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

        2020-2021 கல்வியாண்டில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாக்கர்களின் பொதுத் தேர்வு பெயர்ப் பட்டியலினை (NR) 14.06.2021 அன்று பிற்பகல் முதல் 17.06.2021 மாலை 4.00 மணி வரை  உள்ள நாட்களில் DGE வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களை கவனமாக சரிபார்த்து, பின்னர் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் பள்ளி அளவிலேயே தங்களுக்கு வழங்கப்பட்ட User ID & Password - ஐ கொண்டு திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Thursday 10 June 2021

 10.06.2021

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 

செய்முறை தேர்வு ஏப்ரல் 2021  - மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறை  பொதுத்தேர்விற்கான உழைப்பூதியத் தொகை (ECS)  மின்னணு பரிவர்த்தன முறையில் தலைமையாசிரியர் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கலாகிறது-

இணைப்பு 1 இணைப்பு 2 

Tuesday 8 June 2021

 08.06.2021  அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளின் படி அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தேசிய நல்லாசிரியர் விருது - 2021 பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 20.06.2021 - க்குள் உரிய இணையதள முகவரியில் நேரிடையாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு -1 இணைப்பு -2, இணைப்பு -3