Friday 27 November 2020

 27/11/2020

அனைத்து அரசு / அரசு நிதியுதவி / நகராட்சி/ மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு 

மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகள் 9 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவிகளுக்கு  இணைப்பில் காணும் போட்டிகள்  01.12.2020 காலை 10.00 மணி முதல் வேலூர் மாவட்ட திட்ட அலுவலகம் , காந்தி நகர் , காட்பாடியில் நடைபெறும் .  போட்டிகள் ONLINE  மூலம் நடைபெறுவதால் பங்கேற்பாளர்கள் தங்களின் படைப்புகளை குறுந்தகட்டில்(CD) பதிவு செய்து  01.12.2020 அன்று காலை 10.00 மணிக்குள் மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைத்து தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT ATTACHMENT

 27/11/2020 // மிக மிக அவசரம் //

அனைத்து   வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

நிவர் புயல் காரணமாக பள்ளி  கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை இணைப்பில் உள்ள ஆன் லைன் சீட்டில்  உடன் இன்று 3.00 மணிக்குள்  உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ON LINE SHEET 

Thursday 26 November 2020

 27/11/2020   // மிக மிக அவசரம் //

அனைத்து அரசு  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

தங்கள் பள்ளிகளில் கடந்த இரண்டு நாட்களில் நிவர் புயலின் தாக்கத்தால் பள்ளி சுற்றுச்சுவர் , பள்ளிக்கட்டிடங்கள் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருப்பின் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக மூன்று நகல்களில் சேதப் பகுதியின் புகைப்படத்துடன் இன்று நண்பகல் 01.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ4 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மாவட்ட ஆட்சியருக்கு  அறிக்கை பணிந்து அனுப்ப உள்ளதால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

Tuesday 24 November 2020

 24.11.2020   

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு

அண்ணா விருது - அரசு ஊழியர்கள் வீர தீர செயல் புரிந்திருந்தால் அவர்களின் பெயர் உரிய படிவத்தில் வீர தீர செயல் புரிந்தமைக்கான சான்றுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மூன்று நகல்களில் இவ்வலுவலகத்தில் 25.11.2020 மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும் இன்மை அறிக்கை எனில் deotpt2015@gmail.com  என்ற முகவரிக்கு மின்னஞ்சல் 25.11.2020 காலை 11.00 மணிக்குள் அனுப்புமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT1  ATTACHMENT 2 

Monday 23 November 2020

 24/11/2020  //NTSE தேர்வுகள் //

அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்களின்   கவனத்திற்கு 

2020 - 2021   டிசம்பர் 27 இல் நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத்தேர்விற்கு  பத்தாம் வகுப்பு மாணாக்கர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் 25.11.2020 பிற்பகல் முதல் 04.12.2020 வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போது இணைப்பில் காணும் அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை முழுமையாக படித்து செயல்படும்மாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT. NEW SCHOOL REG METHOD 

குறிப்பு . 1 விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் காலம் . 25.11.2020   - 04.12.2020

                    2 . விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கடைசி நாள். 04.12.2020 

      3 . SUMMARY  REPORT / FEES RECEIPT - ஐ உதவி  இயக்குநர் அலுவலகத்தில்  ஒப்படைக்கவேண்டி கடைசி நாள். 10.12.2020 

 23/11/2020     // NTSE  தேர்வுகள் //

அனைத்து வகை  அரசு /  நிதியுதவி / மெட்ரிக்  / சி.பி.எஸ்.சி  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயிலும்  மாணாக்கர்களுக்கு  தேசிய திறனாய்வுத்தேர்விற்கு (NTSE)  21.11.2020 முதல் 30.11.2020 வரை WWW.dge.tn.gov  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து இணைப்பில் காணும் அரசு தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள் படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாணாக்கர்களை தேர்விற்கு தயார்படுத்தும்மாறு அனைத்து வகை அரசு /  நிதியுதவி / மெட்ரிக்  / சி.பி.எஸ்.சி  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NOTIFICATION  .APPLICATION  .ATTACHMENT .

Sunday 22 November 2020

 23.11.2020    அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிப்பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம் செய்ய உள்ளதால் கந்திலி மற்றும் திருப்பத்தூர் ஒன்றியப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலை 10 முதல் மாலை 5.00 மணி வரை பெற்றுக் கொள்ள தயார் நிலையில் இருக்க தெரவிக்கலாகிறது.  

 

 23.11.2020  அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் கழக 5% தொகை செலுத்தாத இணைப்பில் உள்ள பள்ளிகள் 24.11.2020 க்குள் தொகை செலுத்துமாறு தெரிவிக்கலாகிறது. செயல்முறைகளின்படி 24.11.2020 க்குள் செலுத்தாத பள்ளிகள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு பெயர் பட்டியலினை பரிந்துரை செய்யப்படவுள்ளது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.  இணைப்பு 

Friday 20 November 2020

 20.11.2020

Childrens Day special  - Releasing Story telling video series on You Tube   in the month of November    ATTACHMENT-1,  ATTACHMENT - 2,  ATTACHMENT - 3 

20.11.2020 

EAT RIGHT CREATIVITY CHALLENGE is conducting from 16th October to 16th December  to encourage the creativity talent of school children. All Matriculation school Principals are Instructed to follow the enclosed guidelines for necessary action.  ATTACHMENT-1, ATTACHMENT - 2, ATTACHMENT - 3 




Thursday 19 November 2020

 20.11.2020   அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 

வரவு செலவு திட்டம் - 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் மின் கட்டண நிதி ஒதுக்கீடு கூடுதல் தேவைப் பட்டியல் கோருதல் 2020-2021 ஆம் நிதியாண்டில் மின்கட்டணம் பெற்ற / பெறாத  தலைமை ஆசிரியர்கள் 31.03.2021 வரையிலான கூடுதல் மின் கட்டணம் தேவைப் பட்டியலை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 23.11.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு


 19.11.2020      நினைவூட்டல் - 2   // மிக அவசரம் // திருத்தம் //

   
அனைத்து  அரசு  உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு 


   2020-2021 ஆம் ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற  பெண்  குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கேட்பு பட்டியல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.11.2020 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்பட்டது.  ஆனால் இந்நாள் வரை மிகக் குறைந்த அளவிலான பள்ளிகளிடமிருந்தே படிவங்கள் பெறப்பட்டது. இப்படிவங்களை மாவட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் அலுவலகத்திற்கு தொகுத்து அனுப்ப வேண்டியுள்ளதால் 19.11.2020 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் நேரில் 3 நகல்களில்  ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   Attachment 

குறிப்பு .

  1. மாணவிகளின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 72000/ மிகாமல்  இருக்கவேண்டும் 

    2 . கிராமபுற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு மட்டுமே ஊக்க தொகை  வழங்கப்படும் 

  3. சாதிசான்று நகல் மற்றும் வருமான சான்று தவறாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் 

 19.11.2020     // தனிகவனம் //

அனைத்து மெட்ரிக் பள்ளிகளின்  முதல்வர்கள்  மற்றும் தாளாளர்களின்  கவனத்திற்கு 

    மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் மற்றும் கழிவறைகள் சார்பான இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் இன்று (19.11.2020 )  மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

     இது வழக்கு சார்பான அறிக்கை என்பதால் தனிகவனம் செலுத்தி உள்ளீடு செய்யுமாறு மீளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ONLINE SHEET 

Wednesday 18 November 2020

 19.11.2020    // தேர்தல் //

 அனைத்து   வகை அரசு / அரசு நிதியுதவி  பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

தேர்தல் - வாக்காளர்பட்டியல் சிறப்பு  சுருக்குமுறை திருத்தம் - 2021 - 049 ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி மற்றும்  - 050 திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர்  சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வது சார்பாக நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பள்ளியில் காலை 10.00 மணி முதல் மாலை  5.00 மணிவரை இணைப்பில் காணும் சார் ஆட்சியர் அவர்களின் செயல்முறை கடிதத்தின் படி  பணியில் இருந்து சிறப்பு முகாமை நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT 

  சிறப்பு முகாம்  நடத்த வேண்டி நாட்கள்.  21.11.2020,22.11.2020,12.12.2020 மற்றும் 13.12.2020 

 19.11.2020    அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

சிறுபான்மையினர் நலம் - MINORITY SCHOLARSHIP - பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையில் கல்விஉதவி தொகை திட்டம் 2020- 2021 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் - இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி சிறுபான்மையினர் மாணவ / மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30.11.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விடுப்பட்ட மாணவ / மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை பெற்று வழங்க FRESH ENTRY ல் பதிவு செய்து விட்டு அதன் அறிக்கையை திருப்பத்தூர் மாவட்ட மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பள்ளி நிலையில் ( INSTITUTE LEVEL)  -ல் VERIFICATION - (SCHOOL )- செய்து மாவட்ட அளவிற்கு ( DISTRICT LEVEL) பரிந்துரை  (WELFARE DEPT) செய்யுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.  இணைப்பு -1, இணைப்பு - 2, இணைப்பு - 3

 18.11.2020   

18.11.2020    அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிப்பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு நாளை முதல் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் விநியோகம் செய்ய உள்ளதால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலை 10 முதல் மாலை 5.00 மணி வரை பெற்றுக் கொள்ள தயார் நிலையில் இருக்க தெரவிக்கலாகிறது. ATTACHMENT

(ஆலங்காயம் மற்றும் சோலையார்பேட்டை ஒன்றியப் பள்ளிகள்) 

Tuesday 17 November 2020

 18.11.2020   அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு நாளை முதல் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் வழங்க உள்ளதால்  இணைப்பில் கண்ட  ONLINE  SHEET படிவத்தில் 6  முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவ/ மாணவியர்கள் எண்ணிக்கை விவரத்தினை உடனடியாக உள்ளீடு செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ONLINE SHEET 

 17.11.2020  அனைத்து அரசு / அரசு உதவிபெறும்  மேல்நிலைப்பள்ளித் தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு,


அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில்  12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவிகளுக்கு இணையவழியில்  CA (Chartered Accountants) FOUNDATION COACHING CLASS ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இணைப்பில் உள்ள செயல்முறை கடிதப்படி இப்பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் பதிவு செய்து பயன்பெற தங்கள் பள்ளி மாணவ /மாணவிகளுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 

 17.11.2020  // தனிகவனம் //

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்/ சமுக நலப்பள்ளிகள்/ சுயநிதி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

    மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் மற்றும் கழிவறைகள் சார்பான இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் இன்று (17.11.2020 )  மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

     இது வழக்கு சார்பான அறிக்கை என்பதால் தனிகவனம் செலுத்தி உள்ளீடு செய்யுமாறு மீளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

ONLINE SHEET 


 17.11.2020      நினைவூட்டல் - 1   // மிக அவசரம் // 

   
அனைத்து  அரசு  உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு 


   2020-2021 ஆம் ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற  பெண்  குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கேட்பு பட்டியல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.11.2020 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்பட்டது.  ஆனால் இந்நாள் வரை மிகக் குறைந்த அளவிலான பள்ளிகளிடமிருந்தே படிவங்கள் பெறப்பட்டது. இப்படிவங்களை மாவட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் அலுவலகத்திற்கு தொகுத்து அனுப்ப வேண்டியுள்ளதால் 19.11.2020 காலை 11 மணிக்குள் இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   Attachment 

குறிப்பு .

  1. மாணவிகளின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 72000/ மிகாமல்  இருக்கவேண்டும் 

    2 . கிராமபுற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு மட்டுமே ஊக்க தொகை  வழங்கப்படும் 

  3. சாதிசான்று நகல் மற்றும் வருமான சான்று தவறாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் 


Monday 16 November 2020

 17.11.2020  // தனிகவனம்//

அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

சிறுபான்மையினர் நலம் - MINORITY SCHOLARSHIP - பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையில் கல்விஉதவி தொகை திட்டம் 2020- 2021 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் - இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி சிறுபான்மையினர் மாணவ / மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30.11.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விடுப்பட்ட மாணவ / மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை பெற்று வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பள்ளி நிலையில் ( INSTITUTE LEVEL)  -ல் VERIFICATION - (SCHOOL )- செய்து மாவட்ட அளவிற்கு ( DISTRICT LEVEL) பரிந்துரை  (WELFARE DEPT) செய்யுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறதுஇணைப்பு  

 16.11.2020     //  தேர்வுகள் // 

செப்டம்பர் / அக்டோபர் - 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதி விடைத் தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 18.11.2020 அன்று முதல் WWW.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை  உள்ளீடு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத் தாட்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இணைப்பு


Thursday 12 November 2020

 12.11.2020 

செப்டம்பர் / அக்டோபர் - 2020  தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு மற்றும்  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களாக செயல்பட்ட தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் தேர்வெழுதிய தனித் தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை வேலூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தனி நபர் மூலம்  பெற்று  இணைப்பில் காணும் உதவி இயக்குநர் அவர்களின் கடிதத்தின் படி செயல்படுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு

Tuesday 10 November 2020

 11.11.2020  //   CPS MISSING CREDIT 2019 -2020 // தனிகவனம்//

 அனைத்து   அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2019 -2020  ஆம் கல்வியாண்டில் CPS MISSING CREDIT  நிலுவையில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் CPS MISSING CREDIT விவரத்தினை  இன்றே சரிசெய்து   அதன் அறிக்கையினை  திருப்பத்தூர் சார் கருவூலம் மற்றும் இவ்வலுவலகத்தில் சமர்பிக்குமாறு அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்ளுக்கும் தெரிவிக்கலாகிறது. ATTACHMENT  

 11/11/2020 

 அனைத்து   அரசு மற்றும் நிதியுதவி  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2020 - 2021 ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் பயிலும் 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள மாணவர்களின் விவரங்களை இன வாரியாக இணைப்பில் கண்டுள்ள ஆன் லைன் படிவத்தில் தனிகவனம் செலுத்தி  ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET 

 குறிப்பு . இவ்விவரங்களை மாவட்ட ஆட்சியருக்கு தொகுத்து அனுப்பவேண்டியுள்ளதால் தனி கவனம் செலுத்தி உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

 10/11/2020  //  தணிக்கை விவரம்// மிக மிக அவசரம்// 

தங்கள் பள்ளியில்  கடைசியாக நடைபெற்ற கோவை தணிக்கை தடைகள் சார்பான விவரத்தினை  இன்று  காலை 11.00 மணிக்குள்   இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தினை பூர்த்தி  செய்யுமாறு அனைத்து  அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ON LINE SHEET 

 10/11/2020  //  தணிக்கை விவரம்// மிக மிக அவசரம்// 

தங்கள் பள்ளியில்  கடைசியாக நடைபெற்ற கோவை தணிக்கை தடைகள் சார்பான விவரம் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து நாளை காலை 11.00 மணிக்குள்  இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து  அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Monday 9 November 2020

 10.11.2020   //தெர்மல் ஸ்கேனர்//


     கோவிட் - 19 தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு  பள்ளிகளுக்கு  07.11.2020 அன்று   தெர்மல் ஸ்கேனர் வழங்கப்பட்டது . அன்று விடுப்பட்ட  இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் மட்டும்  மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT 

Sunday 8 November 2020

  09/11/2020   // நினைவூட்டல் -1 //

மார்ச் 2020 - பொதுத்தேர்வு முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 

நடைபெற்று முடிந்த மார்ச் 2020 -  பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் தங்கள் தேர்வு மையத்தில் பயன்படுத்தப்படாத முகப்பு தாள்கள் மற்றும் நடைபெறாத தேர்வுகளின் விடைத்தாள்களுடன்  தைத்த முகப்பு தாளுடன் கூடிய முதன்மை விடைத்தாள்களை பாட வாரியாக கணக்கிட்டு இணைப்பில் கண்டுள்ள  உரிய படிவங்களில்  பூர்த்தி செய்து 11.11.2020 அன்று இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் தேர்வுத்துறை அலுவலரிடம் நேரில்  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT 

குறிப்பு . முதன்மை விடைத்தாள்களை ஒப்படைக்க தவறும் பட்சத்தில் வேலூர் அரசு  தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் .

 

 // தனி கவனம் //

09.11.2020      அனைத்துவகை அரசு / அரசு நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக்/மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, CBSE பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் உடனடி கவனத்திற்கு


பள்ளிகள் திறப்பது சார்பான பெற்றோர்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி  பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துகளை இணைப்பில் உள்ள ஆன்லைன்  படிவத்தில் பள்ளிகள் வாரியாக தனி தனி படிவத்தில் உள்ளீடு செய்யுமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ONLINE ATTACHMENT

(குறிப்பு: - ஆன்லைன் படிவத்தில் எவ்வித கலங்களையும் மாற்றம் செய்யாமல் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது)

Saturday 7 November 2020

 07.11.2020      அனைத்துவகை அரசு / அரசு நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக்/மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, CBSE பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் உடனடி கவனத்திற்கு


பள்ளிகள் திறப்பது சார்பான பெற்றோர்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி  பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துகளை இணைப்பில் உள்ள ஆன்லைன்  படிவத்தில் பள்ளிகள் வாரியாக தனி தனி படிவத்தில் உள்ளீடு செய்யுமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ONLINE ATTACHMENT

(குறிப்பு: - ஆன்லைன் படிவத்தில் எவ்வித கலங்களையும் மாற்றம் செய்யாமல் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது)

 07.11.2020 

அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு.

    பள்ளிகள் திறப்பது சார்பான பெற்றோர்களின் கருத்துக்கேட்பு கூட்டம் 09.11.2020 அன்று நடைபெறவுள்ளதால் கூட்டத்திற்கு வருகை தரும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு கூட்டத்திற்கு வருகை புரிபவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதற்கு தெர்மல் ஸ்கேனர் கருவிகள் 07.11.2020 சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது.  எனவே தெர்மல் ஸ்கேனர் கருவியை தனிநபர் மூலம் பெற்றுக் கொள்ளுமாறு அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 07.11.2020 அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு,

சிறு சேமிப்பு - பள்ளி மாணாக்கர்களுக்கு சிறு சேமிப்பு கணக்கு திட்டத்தை தபால் அலுவலகம் மூலமாக தொடங்கிட இணைப்பில் உள்ளபடி அறிவுறுத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Friday 6 November 2020

 06.11.2020  // மிக மிக அவசரம் //

 அனைத்து  அரசு / அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2018 - 2019 2019 -2020  ஆண்டிற்கான இலவச  விலையில்லா மடிக்கணினி மற்றும்  மிதிவண்டி சார்பான விவரங்களை இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் நாளை 11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET 

 06.11.2020   // மிக அவசரம் // தனி கவனம் //

இணைப்பில் கண்ட  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் மாற்றுப் பணியில் பணிபுரிய ஏதுவாக சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியாளர்களை பள்ளிப் பணியிலிருந்து உடன் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

 06.11.2020  அனைத்து வகை மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

2018 - 2019 ஆம் கல்வியாண்டின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 ன் கீழ் LKG முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரசால் பெற்று வழங்கப்பட்ட கல்வி கட்டணத் தொகை பெற்றுக் கொண்டமைக்கான விவரத்தை இணைப்பில் கண்ட ஒப்புகைச் சீட்டு படிவத்தில் ( Form 1 & Form 2 )  பூர்த்தி செய்து நாளை பிற்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

06.10.2020  - // மிக அவசரம் // 

   
அனைத்து  அரசு  உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு 


   2020-2021 ஆம் ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற  பெண்  குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ்   ஒருங்கிணைந்த கேட்பு பட்டியல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.11.2020 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் சாதிசான்று நகல் மற்றும் வருமான சான்று தவறாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் 

குறிப்பு . 1. மாணவிகளின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 72000/ மிகாமல்
                       இருக்கவேண்டும் 
             2 . கிராமபுற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு மட்டுமே ஊக்க தொகை
                     வழங்கப்படும் 

 06.11.2020  அனைத்து  அரசு  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்   கவனத்திற்கு, 

பண்டிகை முன்பணம் மற்றும் மின்கட்டணம் நிதி ஒதுக்கீடு

 2020 - 2021 ஆம் நிதியாண்டிற்கான பண்டிகை முன்பணம் மற்றும் மின் கட்டணம் நிதி ஒதுக்கீடு அந்தந்த பள்ளிகளுக்கு எதிரே குறிப்பிட்டுள்ள தொகையினை 31.03.2021 க்குள் செலவினம் மேற்கொள்ள தெரிவிக்கலாகிறது. ATTACHMENT - 1, ATTACHMENT - 2 

 06.11.2020   // தனி கவனம்//

அனைத்து அரசு / அரசு உதவி பெறும்  மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

 09.11.2020 அன்று திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட  பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்துதல் சார்பான  தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக அ2 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT ATTACHMENT 2   படிவம் 

Thursday 5 November 2020

 05.11.2020  

  மார்ச் 2020 - பொதுத்தேர்வு முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 

நடைபெற்று முடிந்த மார்ச் 2020 -  பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் தங்கள் தேர்வு மையத்தில் பயன்படுத்தப்படாத முகப்பு தாள்கள் மற்றும் நடைபெறாத தேர்வுகளின் விடைத்தாள்களுடன்  தைத்த முகப்பு தாளுடன் கூடிய முதன்மை விடைத்தாள்களை பாட வாரியாக கணக்கிட்டு இணைப்பில் கண்டுள்ள  உரிய படிவங்களில்  பூர்த்தி செய்து 11.11.2020 அன்று இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் தேர்வுத்துறை அலுவலரிடம் நேரில்  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

 05/11/2020  //  தனி கவனம் மிக மிக அவசரம் // 

  2020 - 2021  ஆம் கல்வியாண்டில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் பொருட்டு சத்துணவு   உண்ணும் மாணவர்களின் விவரங்கள்  இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் உடனடியாக 05/11/2020 இன்று மாலைக்குள்  ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள  உயர் / மேல்நிலைப்பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் தனிகவனம் செலுத்தி உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ONLINE SHEET 

குறிப்புஇது மாவட்ட ஆட்சியர்க்கு தொகுத்து அனுப்புவதால்  உடனடியாக  உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday 3 November 2020

 04.11.2020   

அனைத்து வகை  அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

நடைபெற்று முடிந்த மார்ச் 2020  பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளில்  மாற்றுத்திறனாளி தேர்வர்கள் சலுகை பெற்று தேர்வு எழுதியமைக்கான சான்றிதழ்  இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் இவ்வலுவலகத்தில்  அ3 பிரிவில்  தலைமை ஆசிரியர் முகப்பு கடிதத்துடன்    (04.11.2020) இன்று   பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

 03.11.2020  // தனி கவனம் //  நினைவூட்டல் - 1 //

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2018 -2019,2019 - 2020 , 2020 - 2021  ஆம் கல்வியாண்டுகளில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள்  அலுவலக பணியாளர்கள் மற்றும் பணியின் போது  இறந்த தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள்  அலுவலக பணியாளர்கள் விவரம் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில்  03.11.2020 காலை 11.00 மணிக்குள் பூர்த்தி  செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது ஆனால் இன்னும் பல பள்ளிகள் பதிவிடவில்லை. இன்னும் காலதாமதம் செய்யாமல் இன்று 05.30  மணிக்குள் பதிவிடுமாறு  அனைத்து வகை தலைமை  ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

குறிப்பு . எவரும்  இல்லை எனில்  NIL  என  பதிவிடவும் .  ONLINE SHEET 


Monday 2 November 2020

03.11.2020       நினைவூட்டல் – 02     //  மிக அவசரம் //  தனிகவனம் //

அனைத்து வகை அரசு / நிதியுதவி /  மெட்ரிக் / சுயநிதி / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  முதல்வர்களின்  கவனத்திற்கு 

2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில்  இதுவரை பூர்த்தி  செய்யாமல்  உள்ள பள்ளிகள் தங்கள்  பள்ளி சார்பான விவரங்களை  இன்று  மாலை 5.00 மணிக்குள் பூர்த்தி  செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மீண்டும் மீண்டும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ONLINE SHEET

குறிப்பு:  படிவத்தை பூர்த்தி  செய்யாமல்  உள்ள பள்ளிகள் விவரம்  மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளதால் அதனை தவிர்க்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

 03/11/2020  

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளின் தலைமைஆசிரியர் / முதல்வர்களின் கவனத்திற்கு 

2019 -2020  ஆம் கல்வியாண்டில் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழக   சந்தா 5 சதவித தொகையை  செலுத்தாத பள்ளிகள் இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 1 . ATTACHMENT

 02.11.2020  // தனி கவனம் // 

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2018 -2019,2019 - 2020 , 2020 - 2021  ஆம் கல்வியாண்டுகளில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள்  அலுவலக பணியாளர்கள் மற்றும் பணியின் போது  இறந்த தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள்  அலுவலக பணியாளர்கள் விவரம் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில்  03.11.2020 காலை 11.00 மணிக்குள் பூர்த்தி  செய்ய  அனைத்து வகை தலைமை  ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

குறிப்பு . எவரும்  இல்லை எனில்  NIL  என  பதிவிடவும் .  ONLINE SHEET 


 நினைவூட்டல் - 02    அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

MBC -2019-2020  ஆம் கல்வியாண்டிற்கான 6 ஆம் வகுப்பு பயின்ற MBC மாணவிகளின் பெண்கல்வி ஊக்கத்தொகை NEFT மூலம் தலைமை ஆசிரியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இணைப்பில் உள்ள பள்ளி தலைமை  ஆசிரியர்கள் உரிய பயனாளி மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தி  விட்டு பயனீட்டு சான்று (UTILIZATION CERTIFICATE )  மற்றும் பற்றொப்பம் (ACQUITTANCE) 3 நகல்களில் நாளை காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT

மேலும் இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலக பற்றொப்ப புத்தகத்தில் கையொப்பமிட்டு செல்லுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT1. ATTACHMENT2    ACQUITTANCE

 02.11.2020   // தனி கவனம் //

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் குடிநீர் குழாய் இணைப்பு  மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி யிலிருந்து குடிநீர் இணைப்பு இல்லாத பள்ளிகள் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் பூர்த்தி செய்து 03.11.2020 காலை 11.00 மணிக்குள் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET 

Sunday 1 November 2020

 02.11.2020 அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர் / தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் - 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப 15.03.2020 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்குத் தகுதி பெற்றவர்களின் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல்  வெளியிடுதல் சார்ந்து  அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்தெரிவிக்கலாகிறது. ATTACHMENT- 1,    ATTACHMENT - 2