Tuesday 30 November 2021

 01.12.2021  // தனிகவனம்//

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி மற்றும் சுயநிதி பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

ஆதிதிராவிடர் நலம் - 2017 -18 முதல் 2020 -2021 க்கான  பிரீ மெட்ரிக் மற்றும்  போஸ்ட் மெட்ரிக்  - தணிக்கைக்கான  ஆவணங்கள் தயார் நிலையில் வைத்தல் -  9 ஆம்  வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவிகளுக்கு  SC/ST  க்கான கல்வி உதவித்தொகை 2017 -2018  முதல் 2020-2021 ஆம் ஆண்டில் பிரீமெட்ரிக் மற்றும்  போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை பெற்றதற்கான தணிக்கை விரைவில் மேற்கொள்ள இருப்பதால் அனைத்து வகை பள்ளிகளும் கீழ் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை தயார் நிலையில் வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

பராமரிக்க வேண்டிய ஆவணங்கள்

1. விண்ணப்பப்படிவம்

2. சாதிச் சான்று

3. வருமானச் சான்று

4.மாணவர்களின் வங்கி புத்தக நகல்

5.ஆதார் நகல் 

6.பள்ளி தலைமையாசிரியர் இணையதளத்தில் விண்ணப்பித்ததற்கான  பதிவிறக்கம் (proceedings copy / sanction copy )

இணைப்பு1 இணைப்பு2

Monday 29 November 2021

 29.11.2021        //தேர்வுகள்// 

அனைத்து உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளி / மெட்ரிக் பள்ளி/ ஆங்கிலோ இந்தியன் பள்ளி / சிபிஎஸ்சி மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு,

தேசிய திறனாய்வு தேர்வு (NTS) விண்ணப்பித்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக 12.11.2021 பிற்பகல் முதல் 27.11. 2021 வரை பதிவேற்றம் செய்யலாம் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தது தற்போது தொடர் மழையின் காரணமாக பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 30.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப் படாது என்பதை தெரிவிக்கலாகிறது. இணைப்பு

Thursday 25 November 2021

 25.11.2021      // மிக அவசரம் //

அனைத்து அரசு /நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தலைமையாசிரியர்களின் முன்னுரிமை நிர்ணயம் செய்யும் பொருட்டு இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து நாளை 26.11.2021 பிற்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் (deotpt2015@gmail.com) முகவரிக்கு  அனுப்பிவிட்டு அதன் நகலினை நாளை 26.11.2021 பிற்பகல் 03.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

 25.11.2021                 மிக மிக அவசரம்,  //தேர்தல் அவசரம்//

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மாவட்டக் கல்வி அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தேர்தல் படிவங்களை இன்று இரவுக்குள் ONLINE இல் பதிவேற்றம் செய்யுமாறு ELECTION  PA  அவர்களிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பணியை  விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்விஅலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday 24 November 2021

 24.11.2021       // அவசரம் //

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு  விலையில்லா நலத்திட்டங்கள் மாணவ மாணவியர்களுக்கு பெற்று வழங்கப்பட்டதற்கான பயனீட்டுச் சான்றினை  பூர்த்தி செய்து 10.11.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில்  ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது ஆனால் இதுநாள் வரை கீழ்கண்ட பள்ளிகள் ஒப்படைக்கப்படவில்லை எனவே 24.11.2021 மாலை 04.00 மணிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு


1. அ.மே.நி.பள்ளி, மிட்டூர்.

2. உபைபாஸ் பெண்கள் மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

3.உஸ்மானியா மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

4. அ.(பெண்கள்) உ.நி.பள்ளி, மிட்டூர்.

5. அ.உ.நி.பள்ளி, கோணப்பட்டு.

6. அ.உ.நி.பள்ளி, அசோக் நகர்.

 24.11.2021                 //தேர்வுகள்//தனி கவனம்

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஊரகத் திறனாய்வு தேர்வு ( TRUST EXAMINATION) JANUARY 2022 -  நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள்  இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி வழிமுறைகளை பின்பற்றி 09.12.2021 முதல் 20.12.2021 வரை பதிவேற்றம் செய்யுமாறு   கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு-1 இணைப்பு - 2 இணைப்பு - 3

 24.11.2021

அனைத்து  அரசு  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில்  உள்ள ONLINE  படிவத்தில் தங்கள் பணிபுரியும்  உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணியாளர் விவரங்களை பூர்த்தி செய்து இன்று மாலை 04.00 மணிக்குள்  அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET

Tuesday 23 November 2021

 23.11.2021                       நினைவூட்டல் - 1  // மிக மிக அவசரம் //

அனைத்து வகை  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு அமைச்சுப்பணி - பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர் அடிப்படை பயிற்சி பெற பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்கள் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 23.11.2021 இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deottr@nic.in)   அனுப்பிவிட்டு   அதன் நகலினை தனிநபர் மூலம்  மாவட்டக் கல்வி அலுவலகத்தில்  அ1 பிரிவில் சமர்ப்பிக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Monday 22 November 2021

 23.11.2021  

அனைத்து வகை  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு அமைச்சுப்பணி - பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர் அடிப்படை பயிற்சி பெற பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்கள் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 23.11.2021 இன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில்  அ1 பிரிவில் சமர்ப்பிக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 22.11.2021       // மிக மிக அவசரம் // 

அனைத்து வகை  அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழக அரசின் நிதித்துறையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கி கணக்குகள் மற்றும் இருப்புத்தொகைகள் பற்றிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே  இணைப்பில் கண்ட படிவங்களை சரியாக பூர்த்தி செய்து 3 நகல்களில் இவ்வலுவலக ஆ1 பிரிவில் நாளை 23.11.2021 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deottr@nic.in) அனுப்பிவிட்டு Hard Copy யை தனிநபர் மூலமாக ஒப்படைக்குமாறு இணைப்பில் கண்ட பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் தனித்தனி படிவங்களை பயன்படுத்துமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு  படிவம்-1,  படிவம் - 2,  படிவம் - 3. 


நகல்: 

முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு பணிந்தனுப்பலாகிறது.

 

22.11.2021              மிக மிக அவசரம் – தனிகவனம் –

அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு –

பழங்குடியினர் நலம் - நரிக்குறவர், பழங்குடியினர், இருளர் மற்றும் இதர பழங்குடியின விளம்பு நிலை மக்களின குழந்தைகளின் விவரங்கள்  இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து  நாளை 23.11.2021 காலை 10.00 மணிக்குள்  இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் இரு நகல்களை தனி நபர் மூலம்  இவ்வலுவலகத்தில் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Sunday 21 November 2021

 22.11.2021

அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மழை நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகள் தொடர்பாக - இணைப்பில் கண்டுள்ள ONLINE  படிவத்தை இன்று  காலை 11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET

Friday 19 November 2021

20.11.2021   (திருத்தப்பட்டது)  // மிக அவசரம் //

அனைத்து வகை  அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழக அரசின் நிதித்துறையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கி கணக்குகள் மற்றும் இருப்புத்தொகைகள் பற்றிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே  இணைப்பில் கண்ட படிவங்களை பூர்த்தி செய்து 3 நகல்களில் இவ்வலுவலக ஆ1 பிரிவில் இன்று 20.11.2021 பிறபகல் 03.00 மணிக்குள் தனிநபர் மூலமாக ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் தனித்தனி படிவங்களை பயன்படுத்துமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவம்-1,  படிவம் - 2,  படிவம் - 3. 



19.11.2021  // தேர்வுகள் // அவசரம்// தனிகவனம்//

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு, EMIS இல்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்கள்  மற்றும் விவரங்களை பதிவு செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ளவாறு தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மாணவர்கள் விவரங்களையும் EMIS PORTAL இல் சென்று சரிபார்த்து, திருத்தம் செய்யும் பணியினை மேற்கொள்ளுதல் வேண்டும். மேலும், பெயர்பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால், இப்பணியினை தலைமை ஆசிரியர் தமது நேரடி கவனத்தில் மிகுந்த பொறுப்புடனும், சிரத்தையுடனும், மேற்கொள்ள வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட மாணாக்கர்களின் விவரங்களில் தவறுகள் ஏதும் ஏற்படின் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும்.மேலும், பதிவேற்றம் செய்த விவரங்களை சரிபார்த்து, இடைநிலை மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு தேவைப்படும் கூடுதல் விவரங்களான மொழிப்பாட விலக்கு, செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள், விருப்ப மொழிப் பாடத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் போன்ற பணிகளை அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மேற்கொள்வதற்கான செய்திகள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இணைப்பு

Thursday 18 November 2021

19.11.2021   

அனைத்து வகை  அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழக அரசின் நிதித்துறையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கி கணக்குகள் மற்றும் இருப்புத்தொகைகள் பற்றிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே  இணைப்பில் கண்ட படிவங்களை பூர்த்தி செய்து 3 நகல்களில் இவ்வலுவலக ஆ1 பிரிவில் 20.11.2021 காலை 11.00 மணிக்குள் தனிநபர் மூலமாக ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவம்-1,  படிவம் - 2,  படிவம் - 3. 



 19.11.2021   

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மாற்றுத்திறனாளிகள் நலன் - திருப்பத்தூர் மாவட்டம் - மத்திய அரசின் Rastriya Vayosri Yojana ( ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா) திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட தங்கள் பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கும் மற்றும் Assistance to Disabled Persons (ADIP) திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்குதல்  தொடர்பாக பயனாளிகள் தேர்வு மருத்துவ முகாம் நடைபெறுதல் தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக அனைவருக்கும் கல்வி சிறப்பாசிரியர்களை உரிய அப்பகுதி மாற்றுத்திறனாளிகளுடன் இணைப்பில் உள்ள பட்டியலின் படி முகாமில் பங்கேற்று  மருத்துவ முகாமிற்கு வர உதவி புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு-1  இணைப்பு - 2

 19.11.2021                //தேர்வுகள்//

அனைத்து அரசு /அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆகஸ்ட் - 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு உட்பட) தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை/மதிப்பெண் பட்டியல்களை 25.11.2021 வியாழக்கிழமை முதல், அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இணைப்பு

குறிப்பு: இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday 17 November 2021

 

18.11.2021    // தேர்வுகள்// 

அனைத்து  அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

செப்டம்பர் 2021,  பத்தாம் வகுப்பு  துணைத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் ( தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவுகளை 19.11.2021 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே  பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தான செய்தி குறிப்பு தங்கள் பகுதியில் உள்ள மாணாக்கர்களுக்கு  தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1 இணைப்பு - 2 

குறிப்பு:   இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 17.11.2021        // மிக அவசரம் //

அனைத்து அரசு / அரசு நிதியுதவி / சுயநிதி (மெட்ரிக் / சிபிஎஸ்இ) உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

மேற்காண் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாணவ / மாணவியர் எண்ணிக்கையை வருகைப்பதிவேட்டின் படி அசல் வருகைப்பதிவேட்டை முன்னிலைப்படுத்தி EMIS Portal - இல் ஒப்பிட்டு இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து ஆசிரியர் பயிற்றுநர்களிடம் சரிபார்த்து அவர்கள் ஒப்புதலுடன் இரு நகல்களில் இவ்வலுவலகத்தில் நாளை காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் தனி நபர் மூலம நேரடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 

17.11.2021              அவசரம் – தனிகவனம் –

அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு –

இணைப்பில் கண்ட படிவத்தினை பூர்த்தி செய்து  நாளை (18.11.2021)  காலை  11.00 மணிக்குள்  இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் இரு நகல்களை தனி நபர் மூலம்  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Tuesday 16 November 2021

 17.11.2021

அனைத்து அரசு /நிதியுதவி / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

குழந்தைகள் தினவிழா - 2021 நவம்பர்  14 ஆம் தினத்தன்று அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், பேச்சு, கட்டுரைப்போட்டிகள் பள்ளி அளவில் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்ட  அறிக்கையினை மூன்று நகல்களில் புகைப்படத்துடன்  17.11.2021 இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ4 பிரிவில்  சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு /நிதியுதவி / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Monday 15 November 2021

 15.11.2021       // அவசரம் //

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு  விலையில்லா நலத்திட்டங்கள் மாணவ மாணவியர்களுக்கு பெற்று வழங்கப்பட்டதற்கான பயனீட்டுச் சான்றினை  பூர்த்தி செய்து 10.11.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில்  ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது ஆனால் இதுநாள் வரை கீழ்கண்ட பள்ளிகள் ஒப்படைக்கப்படவில்லை எனவே 16.11.2021 மாலை 04.00 மணிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு

1. அ.மே.நி.பள்ளி, வெள்ளக்குட்டை.

2. அ.மே.நி.பள்ளி, மிட்டூர்.

3.அ.மே.நி.பள்ளி, மலைரெட்டியூர்.

4.அ.மே.நி.பள்ளி, பொன்னேரி.

5. அ.(ஆண்கள்) மே.நி.பள்ளி, ஜோலார்பேட்டை.

6. அ.மே.நி.பள்ளி, பெரியகண்ணாலப்பட்டி.

7. அ.மே.நி.பள்ளி, பேராம்பட்டு.

8.அ.மே.நி.பள்ளி, குரும்பேரி.

9. அ.(பெண்கள்) மே.நி.பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி.

10. ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி, விசமங்கலம். 

11. அ.(பெண்கள்) மே.நி.பள்ளி, மடவாளம்.

12. அ.(ஆண்கள்) மே.நி.பள்ளி, மடவாளம்.

13. தோமினிக் சாவியோ மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

14. மேரி இமாக்குலேட் மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

15. உபைபாஸ் பெண்கள் மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

16.டான்போஸ்கோ மே.நி.பள்ளி, ஜோலார்பேட்டை.

17.உஸ்மானியா மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

18.செயின்ட் சார்லஸ் மே.நி.பள்ளி, அத்தனாவூர்.

19. அ.ஆதிதிராவிடர் நல மே.நி.பள்ளி, ஆலங்காயம்.

20. அ.மே.நி.பள்ளி, கசிநாயக்கன்பட்டி.

21. வன மே.நி.பள்ளி, நெல்லிவாசல் நாடு.

22. அ.உ.நி.பள்ளி, கனவாய்புதூர்.

23. அ.(பெண்கள்) உ.நி.பள்ளி, மிட்டூர்.

24. அ.உ.நி.பள்ளி, கோணப்பட்டு.

25. அ.உ.நி.பள்ளி, நெக்குந்தி.

26. அ.உ.நி.பள்ளி, வெங்களாபுரம்.

27. அ.உ.நி.பள்ளி, ஆதியூர்.

28.அ.உ.நி.பள்ளி, செவ்வாத்தூர். 

29. அ.உ.நி.பள்ளி, அங்கநாதவலசை.

30. அ.ஆதிதிராவிடர் நலப்பள்ளி, ஜடையனூர்.

31. அ.உ.நி.பள்ளி, திம்மனாமுத்தூர். 

32. அ.உ.நி.பள்ளி, அண்ணான்டப்பட்டி.


 15.11.2021        // மிக அவசரம்//

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடம் சார்பான அரசாணை எண் விவரத்தினை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com)  அனுப்பிவிட்டு அதன் நகலினை  16.11.2021 மாலை  04.00 மணிக்குள்  இவ்வலுவலக  ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு



Sunday 14 November 2021

 15.11.2021  

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு  விலையில்லா நலத்திட்டங்கள் மாணவ மாணவியர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட ஒவ்வொரு நலத்திட்டத்திற்கும் புகைப்படச் சான்று தலா இரண்டினை கீழ்கண்ட பள்ளிகள் காலதாமதத்திற்கு இடமின்றி 10.11.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில்  ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது ஆனால் கீழ்கண்ட பள்ளிகள் இதுநாள் வரையில் வழங்கப்படவில்லை என்பதை தங்களுக்கு தெரிவிக்கலாகிறது.


1. அரசு உ.நி.பள்ளி, தோரணம்பதி.

2. அரசு உ.நி.பள்ளி, நெக்குந்தி.


Friday 12 November 2021


12.11.2021           //தேர்வுகள்//

அனைத்து வகை அரசு /அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,       

 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டு   2022 ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க உள்ள அனைத்து வகை தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் பெயர்களை பதிவு செய்து கொள்வது குறித்த செய்தி குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இச்செய்தி குறிப்பினை இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள்  இயக்குனர் அவர்களின் கடிதத்தற்கிணங்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

 12.11.2021   

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அரசு விலையில்லா நலத்திட்டங்கள் ( பாடநூல்கள், நோட்டுப்புத்தகம், சீருடைகள் (நான்கு இணை), புத்தகப்பை, காலேந்திகள் மற்றும் காலுறைகள், புவியியல் வரைபடம், கணிதஉபகரணப்பெட்டி, மலைவாழ் மாணாக்கர்களுக்கான மழைக்கோட்டு, ஆங்கிள் பூட், கம்பளி சட்டைவழங்கப்பட்டுள்ளன. இதில் ஏதேனும் பள்ளிகள் பெறப்படாமல் இருப்பின் அப்பள்ளிகள் 15.11.2021 அன்று மாவட்டக் கல்வி அலுவலகத்தை தொடர்புகொண்டு  தேவைப்படும் நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தகவலுக்காக, 

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு  பணிந்தனுப்பலாகிறது.

Thursday 11 November 2021

 11.11.2021   // அரசு நலத்திட்டம் // 

அனைத்து வகை அரசு /அரசு உதவி பெறும் /உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

 தமிழக அரசின் விலையில்லா நலத்திட்டங்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்குதல் சார்ந்த தகவல்  இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில் மாணாக்கர்களுக்கு நலத்திட்டங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Tuesday 9 November 2021

 10.11.2021      //தேர்வுகள்//

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஜனவரி - 2022 ஆம் ஆண்டு தேசிய திறனாய்வுத் தேர்விற்கு பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையதளம் மூலம் 08.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத் தொகை ரூபாய் 50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்போது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் தேதி 20.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை  தெரிவிக்கிலாகிறது. இணைப்பு

 

09.11.2021           //மிக அவசரம் //தேர்வுகள்//

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,     

நவம்பர் - 2021 தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கனமழை காரணமாக 08.11.2021 மற்றும் 09.11.2021 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத் தேர்வுகள் மட்டும் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் வரும் நாட்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதால் 10.11.2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவுள்ள கணிதம், அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. தேர்வுகளுக்கான புதிய தேர்வு கால அட்டவணை தேர்வுத்துறையினால் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கலாகிறது.

Monday 8 November 2021

 09.11.2021            //தேர்வுகள்//

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,       

செப்டம்பர் 2021 மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வு முடிவுகளை, தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Result என்ற பகுதிக்குச் சென்று மதிப்பெண் பட்டியலாக  இன்று (09.11.2021) காலை 11.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக  Result என்ற பகுதிக்கு பதிலாக Latest Notification about Examinations என்ற தலைப்பிற்கு கீழ் உள்ள Higher Secondary Examination என்ற வாசகத்தை click செய்து, அப்பக்கத்தில் உள்ள Hr Sec FIRST YEAR SEP 2021 - Provisional certificate download என்பதை click செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அல்லது  இணையதளத்தின் இடது பக்கத்தில் உள்ள Result Analysis என்ற வாசகத்தை தேர்வு செய்து Hr sec and SSLC - Results என்ற வாசகத்தை click செய்தும் தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கலாகிறது.

 09.11.2021  

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு  விலையில்லா நலத்திட்டங்கள் மாணவ மாணவியர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட ஒவ்வொரு நலத்திட்டத்திற்கும் புகைப்படச் சான்று தலா இரண்டினை கீழ்கண்ட பள்ளிகள் காலதாமதத்திற்கு இடமின்றி 10.11.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில்  ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. இராமகிருஷ்ணா மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

2. அரசு பூங்கா உ.நி.பள்ளி, திருப்பத்தூர்.

3. அரசு மே.நி.பள்ளி, குனிச்சி.

4. அரசு உ.நி.பள்ளி, தோரணம்பதி.

5. அரசு பெண்கள் மே.நி.பள்ளி, ஜோலார்பேட்டை.

6. அரசு உ.நி.பள்ளி, நெக்குந்தி.

7. அரசு உ.நி.பள்ளி, பீ.நாயக்கனூர்.

8. அரசு உ.நி.பள்ளி, கொத்தக்கோட்டை.

9. அரசு பெண்கள் மே.நி.பள்ளி, மடவாளம்.

10. அரசு உ.நி.பள்ளி, மிட்டூர்.




 08.11.2021  

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு  விலையில்லா நலத்திட்டங்கள் மாணவ மாணவியர்களுக்கு பெற்று வழங்கப்பட்டதற்கான பயனீட்டுச் சான்றினை  பூர்த்தி செய்து 10.11.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில்  ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

 08.11.2021          //தேர்வுகள்// 

அனைத்து வகை அரசு அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 08.11.2021 முதல்    12.11.2021 வரை நடைபெறவிருந்தது தற்சமயம் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 08.11.2021 மற்றும் 09.11.2021 அன்று நடைபெற வுள்ள தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது இதர தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். ஒத்தி வைக்கப்பட்டுள்ள தேர்விற்கான தேர்வு தேதிகள் தேர்வுத் துறையினால்  பின்னர் அறிவிக்கப்படும்.

குறிப்பு: அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ளவாறு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு

Wednesday 3 November 2021

 03.11.2021

அனைத்து வகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் உள்ள பள்ளியின் தூய்மை பணியாளர்கள் சார்பான விவரங்களை Excel படிவத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து  இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டு அதன் பிரதியை 2 நகல்களில்  மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இணைப்பு 

 

03.11.2021

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி / மெட்ரிக் / உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

சிறுபான்மையினர் நலம் - அனைத்து வகை பள்ளிகளில் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், பார்கி, ஜெயின் மற்றும் புத்தமதத்தினர் சேர்ந்த மாணவர்களுக்கு 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு பள்ளி படிப்பு உதவித் தொகையும் 11 ஆம் வகுப்பு முதல் பள்ளி மேற்படிப்பு உதவித் தொகையும் பெறுவதற்கு மாணவர்களிடையே விண்ணப்பங்கள் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை www.scholarship.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட இணைப்பில் உள்ள ஆணையின் படி செயல்பட அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு

03.11.2021

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

தீபாவளி - 2021  -  தீபாவளி பண்டிகையின்போது தீப்பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தல் - தொடர்பாக இணைப்பில் கண்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Tuesday 2 November 2021

 03.11.2021      //தேர்வுகள்//

அனைத்து வகை அரசு /அரசு உதவி பெறும்  மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2021 - 2022 கல்வி ஆண்டில் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை கணக்கிட்டு வழங்கும் முறை பற்றிய அறிவுரைகளை அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ளவாறு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு

Monday 1 November 2021

02.11.2021   

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அரசு விலையில்லா நலத்திட்டங்கள் ( பாடநூல்கள், நோட்டுப்புத்தகம், சீருடைகள் (நான்கு இணை), புத்தகப்பை, காலேந்திகள் மற்றும் காலுறைகள், புவியியல் வரைபடம், கணிதஉபகரணப்பெட்டி, மலைவாழ் மாணாக்கர்களுக்கான மழைக்கோட்டு, ஆங்கிள் பூட், கம்பளி சட்டை) வழங்கப்பட்டுள்ளன. இதில் ஏதேனும் பள்ளிகள் பெறப்படாமல் இருப்பின் அப்பள்ளிகள் 02.11.2021, 03.11.2021  ஆகிய நாட்களில் மாவட்டக் கல்வி அலுவலகத்தை தொடர்புகொண்டு  தேவைப்படும் நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தகவலுக்காக, 

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு  பணிந்தனுப்பலாகிறது.

 01.11.2021  // பாடநூல்கள் //

அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

     திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு  2022 - 23 ஆம் கல்வி ஆண்டிற்கான உத்தேச பாடநூல்கள்  தேவைப்பட்டியல்  கோரப்பட்டிருந்தது ஆனால் கீழ்கண்ட பள்ளிகள் இதுநாள் வரை வழங்கப்படவில்லை என்பதை   தெரிவிக்கலாகிறது. 

1. அரசு மேல்நிலைப்பள்ளி, பூங்குளம்.

2. அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல்நத்தம்,

3. அரசு மேல்நிலைப்பள்ளி, அத்தனாவூர்,

5. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை,

6. அரசு மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்டு,

7. அரசு மேல்நிலைப்பள்ளி, மட்றப்பள்ளி,

8. அரசு மேல்நிலைப்பள்ளி, கொரட்டி,

9. அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டியப்பனூர்,

10. உபைபாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்,

11. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்,

12. அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்,

13. அரசு உயர்நிலைப்பள்ளி, குன்னத்தூர்,

14.அரசு உயர்நிலைப்பள்ளி, தோரணம்பதி,


01.11.2021    // தேர்வுகள் // 

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளி /சிபிஎஸ்சி  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2022 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய திறனாய்வு தேர்வுக்கு (NTSE) விண்ணப்பிக்க விரும்பும் பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவங்களை 08.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பு அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ளவாறு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இணைப்பு