Tuesday 26 July 2022

 26.07.2022

அனைத்து அரசு /நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் கண்டுள்ள NMMS - 2022 தேர்வில் தேர்ச்சி பெற்ற 8 ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் சரிபார்த்து தயார்நிலையில் வைத்துக்கொள்ளுமாறு அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு -1 இணைப்பு - 2

 26.07.2022        // தேர்வுகள் அவசரம் //தனி கவனம் //

நடைபெற்ற மே - 2022, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவின் மீது மறுகூட்டல் பதிவெண்கள் பட்டியல்  27.07.2022 (புதன்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படும்.  www.dge.tn.gov.in  என்ற இணையதளத்திற்குள் சென்று  MAY 2022 RETOTAL RESULT" என்ற வாசகத்தினை CLICK  செய்த பின்னர், தோன்றும் பக்கத்தில் மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மதிப்பெண் மாற்றங்களுடன் 27.07.2022  பிற்பகல் www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்த கொள்ளலாம். 

மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இப்பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது. இணைப்பு

Monday 25 July 2022

26.07.2022

அனைத்து  வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர்  நலம் - திருப்பத்தூர் மாவட்டம் - போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை  - 2022 - 2023   பெற இணைப்பில் கண்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றி  கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கப்படும் மாணவர்கள் விவரங்களை தயாரித்து அதன் நகலினை 11.08.2022 அன்று மாலைக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து  வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு


Friday 22 July 2022

 22.07.2022       // தனிகவனம் //  மிக அவசரம் //

அனைத்து வகை அரசு /நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது.

07.06.2022 நாளிட்ட ..எண்.000606 /எப்2/2022 இலக்கமிட்ட சென்னை , பள்ளிக்கல்வி ஆணையரக நிதி கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் இத்துடன்  அனுப்பலாகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ACCOUNT NUMBER NOT MATCHED  என குறிப்பிட்டுள்ள EXCEL  படிவத்தில் தெரிவித்துள்ள வங்கிக்கணக்குகளின் விடுபட்டுள்ள  தொடர்புடைய பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மட்டும் வங்கிக்கணக்கு புத்தகத்துடன் கணக்கு எண் சரிபார்த்து  EXCEL   படிவம்  (F) இல் சரியான வங்கிக்கணக்கு எண் குறிப்பிட்டு தலைமையாசிரியர் ஒப்பத்துடன் இரு நகல்களில் தனி நபர்மூலம் 23.07.2022 மாலை 4.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு-1  இணைப்பு -2

 22.07.2022

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்புதலுக்கான 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தலுக்கான தகுதி வாய்ந்த அரசு உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் 3 நகல்களில் முழு வடிவில் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 25.07.2022 மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் காணும் செயல்முறைகள் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றுக்கு அனுப்பப்படுகிறது. பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள். இணைப்பு

Thursday 21 July 2022

21.07.2022                   // மிகவும் அவசரம் தனி கவனம் //

அனைத்து நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு,

இணைப்பில் உள்ள CPS ERROR படிவத்தில் தங்கள் பள்ளி ஆசிரியர் மற்றும் பணியார்களின் CPS NO சார்ந்த விவரங்கள் சரியான முறையில் உள்ளனவா என  சரிபார்த்து அதில் உள்ள திருத்தங்களை சரிசெய்து  அதனை மாவட்டக்  கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து நிதியுதவி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . இணைப்பு

 21.07.2022                            // தனிகவனம் //மிக அவசரம்//

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் கண்டுள்ள கூடுதலாக தேவைப்படும் வகுப்பறை /கழிவறை / ஆய்வகங்கள் / சுற்றுச்சுவர் சார்பான விவரங்களை ONLINE SHEET - இல் இன்று மாலை 04.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET 

Wednesday 20 July 2022

 21.07.2022

ஆலங்காயம் ஒன்றிய அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

சதுரங்க விளையாட்டுப் போட்டி -  22.07.2022 அன்று காலை 10.00 மணி முதல் நடுவர்களை கொண்டு ஆலங்காயம் ராஜலட்சுமி திருமண மஹாலில் சதுரங்க விளையாட்டு போட்டி நடக்கவிருப்பதால் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு உயர் / மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள தலைமையாசிரியர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு உரிய பாதுகாப்புடன் அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 

20.07.2022      // தேர்வுகள் – தனிகவனம் – 

அனைத்து வகை உயர் / மேல் நிலை / மெட்ரிக் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு  ஆகஸ்ட் 2022 – தனித்தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டுகளை அரசுத் தேர்வுகள் இணையதளம் மூலம் 22.07.2022 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு தெரியபடுத்திட தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இணைப்பு

 20.07.2022                                    // தேர்வுகள் அவசரம்//

ஜூலை/ஆகஸ்ட் 2022, பத்தாம் வகுப்பு /மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

 02.08.2022 முதல் 08.08.2022 வரை நடைபெறவுள்ள ஆகஸ்ட் 2022, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் (ம) 25.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெறவுள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகளுக்கான  – முதன்மை விடைத்தாட்கள் முகப்புத்தாட்களுடன் தைப்பதற்கான இணைப்பில் உள்ள அரசுதேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி முகப்புத்தாட்களுடன் தைத்து துணைத்தேர்வுகளுக்கு தயார் நிலையில் வைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு -1, இணைப்பு - 2, இணைப்பு -3


Monday 18 July 2022

 18.07.2022           // மிக மிக அவசரம் // தனி கவனம் //

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

மத்திய அரசின் தேசிய பெண் குழந்தைகளுக்கான  இடைநிலைக்கல்வி ஊக்கத் தொகை திட்டம் (NSIGSE) 2017 -2018 ஆம் ஆண்டிற்கான திட்டம் சார்பாக  இணைப்பில் உள்ள  ONLINE SHEET இல் காலியாக உள்ள கலத்தில் நாளை 19.07.2022 - காலை 11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும், அதன் 2 நகலினை  இவ்வலுவலக அ5 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே மூன்று முறை நினைவூட்டியும் இது வரை பெறப்படாமைக்கு தாங்களே பொறுப்பு ஏற்க நேரிடும் என அறிவுறுத்தியும் இது நாள் வரை பெறப்படவில்லை எனவே இது வருத்தத்திற்குரிய செயலாகும் இனியும் காலந்தாழ்த்தாமல் மேற்குறிப்பிட்ட காலகெடுக்குள் அனுப்பப்படவேண்டும் என சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   ONLINE SHEET   இணைப்பு 

Friday 15 July 2022

 15.07.2022                                    // தேர்வுகள் அவசரம்//

அனைத்து வகை உயர் / மேல் நிலை / மெட்ரிக் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

நடைபெறவுள்ள ஆகஸ்ட்  2022 பத்தாம் வகுப்பு துணை பொதுத் தேர்வுக்காக அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட  செய்முறை வகுப்புகள்  திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் ஞாயிற்றுக்கிழமை 17.07.2022 அன்று காலை 10.00 மணிமுதல் துவங்கப்படவுள்ளது. எனவே. இத்தகவலினை தங்கள் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு தெரிவித்து செய்முறை வகுப்பில் கலந்துக்கொள்ள அறிவுறுத்துமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


Thursday 14 July 2022

 14.07.2022

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள்  கவனத்திற்கு,

இணைக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் உள்ள பணியாளர்கள் பகுதி நேர துப்புரவாளர் / இரவு காவலர் தற்போதைய நிலை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 15.07.2022 மாலை 5.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது.

குறிப்பு. W.P.No.24410 / அரசாணை எண். 111/ 247 பள்ளிக் கல்வித் துறை நாள். 03.10.2012 இன் படி முறையான நியமனம் பெற்றவர்கள் மட்டும். இணைப்பு-1, இணைப்பு - 2

Friday 8 July 2022

 08.07.2022    // மிக அவசரம் //

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.

ஊதியமில்லா  இனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் IFHRMS  இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை பதிவிறக்கம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளை  சரியான தலைப்புகளில் 7 மாதங்களுக்குள் காலாண்டு வரையறைக்குட்பட்டு  செலவினம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பள்ளிகளின்  மின் கட்டணத்தில் செலவினம் மேற்கொண்டது போக நாளது வரை நிலுவையில் உள்ள கூடுதல் மின் கட்டண தேவைப் பட்டியலினை மூன்று நகல்களில் தலைமை ஆசிரியர்களின் கையொப்பத்துடன்  13.07.2022 அன்று மாலைக்குள் ஆ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.      இணைப்பு

Thursday 7 July 2022

 07.07.2022                  //  தேர்வுகள் அவசரம்  // 


அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

மே  2022  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல் சார்பு.

பள்ளி மாணவர்களது பெயர் பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பு அளித்தும் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரி கடிதம் பெறப்படுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது.

மாணவர்களது நலன் கருதி பிழைகள் அற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக தற்போது வழங்கப்படும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்யக்கோரி இவ்வலுவலகத்தில் மனுக்கள் பெறப்படின் அரசின் நிதி செலவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என்ற அறிவிப்போடு அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் மே 2022 பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 08.07.2022 முதல் 16.07.2022 வரை இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பிழை இல்லா விவரங்களுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday 6 July 2022

 06.07.2022 

அனைத்து அரசு  / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் பாடநூல்கள் தேவை இருப்பின் தேவைப்பட்டியலுடன் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் மேலும், பாடநூல்கள்  இருப்பு இருப்பின் அவ்விவரத்தினை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 06.07.2022     // மிக மிக அவசரம் //

திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் அலுவலகப் பணியினை மேற்கொள்ளும் பொருட்டு கீழ்கண்ட பணியாளர்களை பணியிலிருந்து விடுவிக்குமாறு சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

1. திரு.வினோத்குமார்  ஆ.உ.  அ.மே.நி.பள்ளி, நத்தம்

2. திரு.சௌகத்ஹலி  ஆ.உ. அ.மே.நி.பள்ளி, பெரியகண்ணாலப்பட்டி.

3. திரு.சரவணன் ஆ.உ. அ.உ.நி.பள்ளி, ஆதியூர்.


 06.07.2022

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை காலை  10.00 மணிமுதல் வழங்கப்படவுள்ளது தேவைப்பட்டியலுடன் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

07.07.2022  - காலை  10 மணி முதல் 1.00 மணி வரை - ஆலங்காயம்

                     பிற்பகல்  2.00  மணி முதல் 5.00 மணி வரை - ஜோலார்பேட்டை

08.07.2022  - காலை  10 மணி முதல் 1.00 மணி வரை - கந்திலி

                     பிற்பகல்  2.00  மணி முதல் 5.00 மணி வரை - திருப்பத்தூர் 


Tuesday 5 July 2022

 05.07.2022

திருப்பத்தூர், கந்திலி மற்றும் ஜோலார்பேட்டை  ஒன்றியத்திற்குபட்ட அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120- ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் வருகின்ற 17.07.2022 ஞாயிறன்று நடைபெற உள்ள விழாவினை முன்னிட்டு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகள்  05.07.2022   அன்று  நடைபெற உள்ளதால் தங்கள் பள்ளி மாணவ /மாணவிகளை தலைமை ஆசிரியர் பாதுகாப்பான முறையில் கலந்துக் கொள்ள முன்னேற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு 

Monday 4 July 2022

04/07/2022        //  நினைவூட்டல்  // தேர்வுகள் அவசரம் // 

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

நடைபெற்று முடிந்த மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத /வருகை புரியாத தேர்வர்கள் மற்றும் மே 2022 பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்களுக்கும் 02.08.2022 முதல் 08.08.2022 வரை ஆகஸ்ட்  2022 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு நடைபெறவுள்ளத. அத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பம் தேர்வர்கள் ஆன் - லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு  27.06.2022 (திங்கட்கிழமை) முதல் 04.07.2022 (திங்கட்கிழமை)  வரையும், சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் நாட்கள் (தக்கல்) 05.07.2022 முதல் 07.07.2022 வரையும், பள்ளிகள் மற்றும் சேவை மையங்கள் ( Service Centre)  சென்று பதிவு செய்யுமாறு தேர்வர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பள்ளிகள் மாணாக்கர் / தனித் தேர்வர்களுக்கு கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு ஆன் - லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறைகள் இணைப்பில்உள்ளவாறு பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1, இணைப்பு - 2  இணைப்பு - 3, இணைப்பு - 4