Sunday 31 October 2021

 

 01.11.2021

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் /மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கு அரசு விலையில்லா நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுவருகிறதுஇதில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா காலேந்தி மற்றும் காலுறை, (SHOE & SOCKS) புத்தகப்பை (SCHOOL BAG )  தர பரிசோதனை முடிவுக்கு ஏற்ப (Testing Report)  அனைத்து பள்ளிகளுக்கும் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. இதன் படி சென்ற கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பயின்ற  10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை அழைத்து அவர்களுக்கு உரிய நலத்திட்டங்களை வழங்கி அதற்கான நலத்திட்ட பதிவேட்டில்  கையொப்பம் பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


01.11.2021       //மிக அவசரம் // 

அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணர்கள் 01.11.2021 (இன்று) வருகை பதிவு விவரத்தினை CEO Website இல் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறதுமேலும் உடன் தனி கவனம் செலுத்தி 11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.


Friday 29 October 2021

 29.10.2021  // தேர்வுகள் // 

அனைத்து வகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நவம்பர் 2021 தேர்வு மையங்களுக்குக்கான  பெயர்பட்டியல் வருகைதாள், இருக்கை திட்டம், பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

குறிப்பு  அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ளவாறு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு  அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

  29.10.2021  // விலையில்லா  அரசு நலத்திட்டம்//

அனைத்து வகை அரசு /  அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2020 -2021 ஆம் கல்வியாண்டிற்கான புத்தகப்பை மற்றும் காலேந்தி மற்றும் காலுறை பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை 30.10.2021 காலை 10.00 மணி முதல்  வழங்கப்படவுள்ளதால்  திருப்பத்தூர் மற்றும் கந்திலி   ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகள் பெற்றுசெல்லும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 கந்திலி                  :-     காலை 10 .00 மணி முதல் 01.00 மணி வரை 

திருப்பத்தூர்      :-        மதியம் 01.00  மணி முதல் 04.00 மணி வரை 


Thursday 28 October 2021

 29.10.2021   // தூய்மைப்பணி முகாம்//

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக்/ உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

 அனைத்து ஊரக மற்றும் நகர்புறப்பகுதிகளில் மாபெறும் தூய்மைப்பணி முகாம் மூலம் கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் திட்டம், தொடர்பான  இணைப்பில் உள்ள அரசு கூடுதல் தலைமை செயலாளரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு 

 29.10.2021  // வெண்புள்ளி நோய் விழிப்புணர்வு //

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2023 - இல் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கான மாணவர்கள் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை சந்திக்க  தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 28.10.2021  // விலையில்லா  அரசு நலத்திட்டம்//

அனைத்து வகை அரசு /  அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2020 -2021 ஆம் கல்வியாண்டிற்கான புத்தகப்பை மற்றும் காலேந்தி மற்றும் காலுறை பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை 29.10.2021 காலை 10.00 மணி முதல்  வழங்கப்படவுள்ளதால்  ஆலங்காயம்  ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகள் பெற்றுசெல்லும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Wednesday 27 October 2021

 27.10.2021  // விலையில்லா  அரசு நலத்திட்டம்//

அனைத்து வகை அரசு /  அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2020 -2021 ஆம் கல்வியாண்டிற்கான புத்தகப்பை மற்றும் காலேந்தி மற்றும் காலுறை பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை 28.10.2021 காலை 10.00 மணி முதல்  வழங்கப்படவுள்ளதால் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகள் பெற்றுசெல்லும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Tuesday 26 October 2021

 26.10.2021  // பாடநூல்கள் //

அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

     திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு  2022 - 23 ஆம் கல்வி ஆண்டிற்கான உத்தேச பாடநூல்கள்  தேவைப்பட்டியல்  இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  28. 10. 2021  அன்று மாலை 4.00 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவலகம்   ஆ3  பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு 

Monday 25 October 2021

 25.10.2021  // மிக மிக அவசரம்//

அனைத்து மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மற்றும்  வட்டாரக்கல்வி அலுவலர்களின்  கவனத்திற்கு

6 ஆம் வகுப்பு   மற்றும் 11 ஆம் வகுப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக தற்போது 6 மற்றும் 11 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் வட்டாரத்திற்கு 3 மாணவர்கள்  வீதமும், மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிக்கு  ஒரு மாணவனும் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் விரும்பும் நற்பெயர் பெற்ற பள்ளியில் பயில்விக்கவும் தேவையான வசதிகளை செய்து தரவும் அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு ஒன்றியத்திற்கு 3 மாணவர்கள் / மேல்நிலைப்பள்ளிக்கு ஒருவர்  வீதமும் தேர்வு செய்து  இணைப்பில் உள்ள படிவத்தில்  விவரங்களை  பூர்த்தி செய்து நாளை (26.10.2021) மாலைக்குள் மாவட்டக்கல்வி அலுவலகத்தில்  தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இணைப்பு 

Thursday 21 October 2021

 22.10.2021   // மெட்ரிக் பாடநூல் //

அனைத்து மெட்ரிக்  உயர் / மேல்நிலைப்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு 

2022 -2023 ஆம் கல்வியாண்டிற்கான பாடநூல்கள் மலையாளம், தெலுங்கு , உருது , கன்னடம்,குஜராத்தி, இந்தி,பிரஞ்சு மற்றும் அரபிக் பாடநூல்கள் தேவை இருப்பின் 31.10.2021 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ3 பிரிவில் தேவைப்பட்டியலை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 21/10/2021      //மிக மிக அவசரம் // தேர்வுகள் //

அனைத்து  வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின்  கவனத்திற்கு

நடைபெற்ற ஆகஸ்ட் 2021, மேல்நிலை இரண்டாமாண்டு துணை பொதுத்தேர்வு  எழுதி, மறுகூட்டல் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு (Revaluation ) கோரி விண்ணப்பித்தவர்களுள் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது தேர்வெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in  என்ற  இணையதளத்தில் 22.10.2021 அன்று முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இடம்பெறாத தேர்வெண்களுக்குரிய (Roll No) தேர்வர்களின் விடைத்தாட்களில் எவ்வித  மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
    மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் மேற்காண் இணையதளத்தில் தங்களது தேர்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதி (Date of Birth ) ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.





Wednesday 20 October 2021

 20.10.2021  // மிக மிக அவசரம்//

அனைத்து அரசு / அரசு உதவிபெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

2021-2022 ஆம் கல்வியாண்டில் கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு தங்கள் பள்ளிகளில் முன்று முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இன மாணவியர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள  படிவம்1 மற்றும் படிவம்2 ஆகிய படிவத்தில் பூர்த்தி செய்து நாளை (21.10.2021) மாலை 5.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1  இணைப்பு2

Tuesday 19 October 2021

 20.10.2021  // மிக மிக அவசரம் //  

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

அரசு  / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பேணப்படும் திட்டம் சார்ந்தவை உட்பட அனைத்து வகையான துறை சார்ந்த வங்கிக் கணக்குகள் சார்ந்த விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்ல் முகவரிக்கு (deottr@nic.in) 20.10.2021  மாலை 04.00 மணிக்குள்  அனுப்பிவிட்டு அதன் நகலினை  05.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது இணைப்பு1                   இணைப்பு 2

Monday 18 October 2021

 18.10.2021  

அனைத்து அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் அனுமதிக்கப்பட்ட விவரத்தினை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com)  அனுப்பிவிட்டு அதன் நகலினை தனிநபர் மூலம் இன்று மாலை (18.10.2021) 4.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு

Monday 11 October 2021

 11.10.2021  //  புதிய தேர்வு மையங்கள் // மிக மிக அவசரம் //

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கவனத்திற்கு,

2021 - 2022 கல்வியாண்டு  இடைநிலைப்பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (10 ஆம் வகுப்பு)  பொதுத் தேர்விற்கு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பான கருத்துருக்களை இணைப்பில் குறிப்பிட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதத்தின் படி இவ்வலுவலகத்திற்கு  20.10.2021 புதன்கிழமைக்குள் 5 நகல்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

குறிப்பு:  மார்ச் 2020  - ஆம் ஆண்டு 10  ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்காக ஓராண்டிற்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வு  மையமாக செயல்பட (சென்ற ஆண்டு வழங்கப்பட்ட ஆணைகள் குறிப்பிட்டுள்ள நிபந்தனை/நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்பட்டிருப்பின்)  அதன் நகல்களை இவ்வலுவலகத்திற்கு 20.10.2021 க்குள் 5 நகல்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு


Friday 8 October 2021

 

08/10/2021  // தணிக்கை விவரம்//  தனி கவனம்//

தணிக்கை  - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – (இடைநிலை ) அரசு நலத்துறை சார்ந்த உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக பள்ளி மேலாண்மை  வளர்ச்சி குழுவிற்கு 2020 -2021 ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்ட தொகை மாநில பட்டய கணக்காயரின் 13.10.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறும் தணிக்கையில் ஆலங்காயம், திருப்பத்தூர், கந்திலி ,ஜோலார்பேட்டை ஒன்றிய அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்  இணைப்பில் உள்ள  ஆவணங்களுடன் தணிக்கையில் தவறாது கலந்து கொண்டு தணிக்கை ஆவணங்களை முன்னிலை படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் மெத்தனம் காட்டாமல் தனி கவனம் செலுத்துமாறும் ,மேலும் இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து 3 நகல்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.           இணைப்பு1 இணைப்பு2 இணைப்பு3

 08.10.2021  // தேர்வு//

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

நவம்பர் 2021 இல் நடைபெறவிருக்கும் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புபொதுத்தேர்விற்கு தனித் தேர்வர்களிடமிருந்து ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய 01.10.2021 அன்று 12.5 வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் 11.10.2021 முதல் 18.10.2021 வரை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை (14.10.2021 முதல் 17.10.2021 வரையிலான விடுமுறை நாட்கள் நீங்களாக ) இணைப்பில் குறிப்பிட்டுள்ள அரசுத் தேர்வு இயக்குநர்  கடிதத்தின் படி சேவை மையங்களுக்கு (Nodal center) நேரில் சென்று ONLINE மூலம் பதிவு செய்து கொள்ளலாம் மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 20.10.2021 அன்று தட்கல் திட்டத்தில்  ரூ 500/ கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்பதனை 

தங்கள் பகுதியில் உள்ள மாணாக்கர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

NODAL CENTER 

 இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்

அரசு மேல்நிலைப்பள்ளி, வக்கணம்பட்டி

இணைப்பு 

Friday 1 October 2021

 01.10.2021         நினைவூட்டல் - 2

அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2021 - 2022 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சத்துணவு உண்ணும் மாணவர்களின் எண்ணிக்கையினை ஆண் / பெண் வாரியாக தெரிவிக்கும்படி 31.08.2021  அன்று இவ்வலுவலக இணையதளத்தில் படிவங்கள் பதிவிடப்பட்டது. ஆனால் இன்று வரை கீழ்கண்ட பள்ளிகள் இவ்விவரங்களை வழங்காமையால் உரிய நேரத்தில் அரசின் விலையில்லா நலத்திட்டங்கள் பெறுவதில் காலதாமதம்  ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் ஒரு நினைவூட்டலுக்கு இடமின்றி   கோரப்பட்டுள்ள தகவல்களை  விரைந்து வழங்கும்படி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  படிவம்

மேல்நிலைப்பள்ளிகள்

1 ஜோலார்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

2. ஏகலைவா உ ண்டு உறைவிட பள்ளி

3. தோமினிக் சாவியோ திருப்பத்தூர்

4. TMS  திருப்பத்தூர்.

உயர்நிலைப்பள்ளிகள் 

1. பெரியகுரும்பத்தெரு

2. அசோக் நகர்

3. குன்னத்தூர்

4. ஜம்மனபுதூர் பூங்குளம்

5. அண்ணான்டப்பட்டி