Sunday 31 January 2021

 01.02.2021 

    தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் ( மேல்நிலைக் கல்வி) செயல்முறைள் ந.க.எண். 6451/W3/S1/2021  நாள். 29.01.2021 இன் படி, பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்களுக்கு 2%  முதுகலை ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்கிட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இப்பட்டியலில் காணும் திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சுப் பணியாளர்கள் இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் திருப்பத்தூர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வந்து தங்களின் விபரங்களை சரிபார்த்து ஒப்பமிடவேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் பட்டியலில் பெயர் விடுபட்ட அமைச்சுப் பணியாளர்கள் தங்களின் விபரங்களை உரிய படிவத்தில் நிறைவு செய்து 2 நகல்களில் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தத்தமது அலுவலக பணியாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1, இணைப்பு - 2, இணைப்பு - 3

Thursday 28 January 2021

 29.01.2021   // பவானி சாகர் பயிற்சி //  அவசரம்//

 அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்/ உதவியளர்களில் (நேரடி நியமனம் மூலம் உதவியாளராக நியமனம் பெற்றவர்கள்) பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பனிவரன்முறை செய்யப்பட்ட பணியாளர்கள் சார்பான விவரம் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து (மருதம் FONT) ல் இன்று 29.01.2021  மாலைக்குள் இவ்வலுவலகத்தில் அ1 பிரிவில் இரு நகல்களில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

 

29.01.2021  // தேர்வுகள்  NR  தயாரித்தல் //

     2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் குறித்த இணைப்பில் காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


Monday 25 January 2021

 25.01.2021  

ஆதிதிராவிடர் நலம் - 2020 - 2021 ஆம் கல்வியாண்டு முதல் போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் அரசு / அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களின் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் புதுப்பித்தல்  பணியை விரைந்து இணையதள வழியில் புதுப்பிக்குமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

மேலும்,  புதிய விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க  இணைப்பில் உள்ள நடைமுறையினை பின்பற்றி தக்க முன்னேற்பாடுகள் செய்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.     இணைப்பு

Sunday 24 January 2021

 25.01.2021    // மிக மிக அவசரம்// நினைவூட்டுதல் -2

 இணைப்பில் கண்டுள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி - சிறப்பு  ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2019- 2020 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் - மாணவ / மாணவியரின் விவரங்கள் - மீளவும் சரிசெய்து அனுப்பக் கோரியது -  சார்பாக இந்நாள் வரை ஒப்படைக்காத  இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் மட்டும் 25.01.2021 மாலை 02.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு - 1  இணைப்பு - 2 

 

Friday 22 January 2021

 22.01.2021   // தேர்தல் -2021 //

அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் / தாளாளர்களின் கவனத்திற்கு 

இணைப்பிலுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி பள்ளிகளில் 25.01.2021 அன்று 11.30 மணியளவில் 11 வது தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதன் விவரத்தை அறிக்கையாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT ATTACHMENT

 22.01.2021   

அனைத்து அரசு உயர்/ மேல்நிலை/ மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு 

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு (Initial learning level Assessment ) EMIS  இணையதளம் மூலம் நடத்துதல்  சார்பாக இணைப்பில் காணும்  தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்   படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் அனைத்து வகை உயர்/ மேல்நிலை/ மெட்ரிக் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT

 22.01.2021 

அனைத்து அரசு / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

STUDENT POLICE CADET -மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ 50,000/- க்கான பயனீட்டு சான்று இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டவாறு ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT ATTACHMENT 

Thursday 21 January 2021

 22/01/2021  // மிக மிக அவசரம்//

தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 - மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரியும் அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் திருப்பத்தூர் மாவட்டம் திரு. பி.எஸ் . சீனிவாசன் என்பார் கோரியுள்ள தகவலை  உடன் அனுப்பி அதன் நகலினை முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் இவ்வலுவலகம் அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

 22.01.2021    // மிக மிக அவசரம்// நினைவூட்டுதல் -1

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி - சிறப்பு  ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2019- 2020 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் - மாணவ / மாணவியரின் விவரங்கள் - மீளவும் சரிசெய்து அனுப்பக் கோரப்படுவது -  சார்பாக இணைப்பில் கண்ட  செயல்முறை கடிதத்தை பின்பற்றி அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு - 1  இணைப்பு - 2

குறிப்பு:  இணைப்பு - 2 இல் கண்டுள்ள பள்ளிகள் மட்டும்  22.01.2021 அன்று மாலை 02.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday 20 January 2021

 21.01.2021       //NMMS தேர்வுகள்//

    அனைத்து வகை உயர்/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

    பிப்ரவரி 21 இல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் (NMMS) தேர்விற்கு விண்ணப்பிக்க  கடைசி தேதி 20.01.2021 இல் முடிவடைந்ததால்   பதிவேற்றம்  செய்யப்பட்ட விண்ணப்பங்களின்  SUMMARY REPORT  இரண்டு நகல் மற்றும்  CANDIDATE DETAILS REPORT  நகலையும் ( ஒரு தேர்வர்க்கு ரூ.50 வீதம்)  சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் அ3 பிரிவு அலுவலரிடம் 22.01.2021 அன்று 03.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு  அனைத்து வகை தலைமையாசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

  

குறிப்பு . NMMS பதிவேற்றம்  செய்யப்பட்ட விண்ணப்பங்களின்  SUMMARY REPORT  இரண்டு நகல் மற்றும்  CANDIDATE DETAILS REPORT  நகலை ஒப்படைக்க தவறும் பட்சத்தில் வேலூர் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வங்கி வரைவோலையாக ஒப்படைக்க நேரிடும்  என்பதனை  அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. 

  

 21.01.2021     // TRUST  தேர்வுகள்//

   TRUST  தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு 

24.01.2021  அன்று நடைபெறவுள்ள ஊரகத்திறனாய்வுத் தேர்வு மையத்தில் கடைபிடிக்கவேண்டிய  நெறிமுறைகள், OMRSHEET - களை கட்டுக்களாக கட்டி அனுப்பவேண்டிய முறைகள் மற்றும் படிவங்கள்  இணைப்பில் காணும்  அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு சார்ந்த தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT1 , ATTACHMENT2 ATTACHMENT 3

குறிப்பு. FORMAT 1 AND 2   இரண்டு நகல் ஒப்படைக்கப்படவேண்டும்  

 21.01.2021       நினைவூட்டல் - 1      //மிக மிக அவசரம் //

                         // விளையாட்டு உபகரணங்கள் தேவை பட்டியல் //

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்காக உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.25,000/-  வீதம் மத்திய கல்வி அமைச்சகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாரியாக ( 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ) கொள்முதல் செய்யப்பட வேண்டிய விளையாட்டு உபகரணங்களின் பட்டியல் அடங்கிய ( GUIDELINE) அனுப்பப்படுகிறது. எனவே இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் மட்டும் GOOGLE  படிவத்தை இன்று 21.01.2021 மாலை 2.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.    ONLINE SHEET 

 20.01.2021  // TRUST EXAM// 

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 24.01.2021  அன்று நடைபெறவுள்ள ஊரகத்திறனாய்வுத்தேர்விற்கு  (TRUST EXAM)  அறைக்கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை  பணியிலிருந்து விடுவித்து சார்ந்த தேர்வு மையத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ள ஏதுவாக அனுப்புமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு . அறைக்கண்காணிப்பாளர்களின்  ஆணை தபால் மூலம் பள்ளிக்கு  அனுப்பப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கலாகிறது.

Tuesday 19 January 2021

 20.01.2021   //  தேர்தல் //

   இணைப்பில் உள்ள   பள்ளி தலைமை ஆசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு 

தேர்தல் -2021 எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் - வாக்கு சாவடி நிலையங்களில் அடிப்படை வசதிகள் இன்றி இணைப்பில் உள்ள பள்ளிகளில் குறைப்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. குறைப்பாடுகளை 31.01.2021 க்குள் சரிசெய்து  இவ்வலுவலகத்தில் அறிக்கை சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.  

குறிப்பு . மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மண்டல தேர்தல் அலுவலர் அவர்களுக்கு அறிகையாக சமர்பிக்கவேண்டியுள்ளதால் விரைந்து முடிக்க  சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் / தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT 

 19.01.2021                       //மிக மிக அவசரம் //

 // விளையாட்டு உபகரணங்கள் தேவை பட்டியல் //

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்காக உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.25,000/-  வீதம் மத்திய கல்வி அமைச்சகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாரியாக ( 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ) கொள்முதல் செய்யப்பட வேண்டிய விளையாட்டு உபகரணங்களின் பட்டியல் அடங்கிய ( GUIDELINE) அனுப்பப்படுகிறது. எனவே பள்ளிகளுக்கு தேவையான ஏற்கனவே உள்ள விளையாட்டு உபகரணங்களை தவிர்த்து GUIDELINE  இல் கொடுக்கப்பட்டுள்ளவாறு அந்தந்த நிலைக்கேற்ற கொள்முதல் செய்யப்பட வேண்டிய உபகரணங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை விவரங்கள் அடங்கிய  GOOGLE  படிவத்தை 19.01.2021 ற்குள்  உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் GUIDELINE . ONLINE SHEET

Monday 18 January 2021

 18.01.2021 // மிக அவசரம் // 

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி கழிவறைகளை பராமரிக்க  VPRC / PLF வெளிநிறுவனங்கள் மூலம் நியமனம் செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு 2020 - 2021 க்கு  நிதி ஒதுக்கீடு செய்ய பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள ONLINE SHEET -  இல் நாளை 19.01.2021 காலை 11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET

 18.01.2021  அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி - சிறப்பு  ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2019- 2020 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் - மாணவ / மாணவியரின் விவரங்கள் - மீளவும் சரிசெய்து அனுப்பக் கோரப்படுவது -  சார்பாக இணைப்பில் கண்ட  செயல்முறை கடிதத்தை பின்பற்றி அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1  இணைப்பு - 2

குறிப்பு:  இணைப்பு - 2 இல் கண்டுள்ள பள்ளிகள் மட்டும்  20.01.2021 அன்று மாலை 03.00 மணியளவில் இவ்வலுவலக ஆ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

 18.01.2021 //TRUST EXAM//

அனைத்து அரசு /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 

24.01.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரகத் திறனாவுத் தேர்வு (TRUST EXAM ) தொடர்பான மாணவர்களின் பெயர் பட்டியல்  மற்றும் தேர்வு நுழைவுச் சீட்டுக்களை 18.01.2021 பிற்பகல் முதல்   பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அனைத்து அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

  18.01.2021   ( நினைவூட்டல் - 01)

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் உள்ள கடிதங்களின் படி பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து இன்று ( 18.01.2021) மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக  மின்னஞ்சல் முகவரிக்கு  (deotpt2015@gmail.com)  அனுப்புமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1  இணைப்பு - 2 

குறிப்பு:  இன்மை அறிக்கை எனினும் மின்னஞ்சல் அனுப்பப்பட வேண்டும். 

 18.01.2021  அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்காக உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.25,000/-  வீதம் மத்திய கல்வி அமைச்சகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாரியாக ( 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ) கொள்முதல் செய்யப்பட வேண்டிய விளையாட்டு உபகரணங்களின் பட்டியல் அடங்கிய ( GUIDELINE) அனுப்பப்படுகிறது. எனவே பள்ளிகளுக்கு தேவையான ஏற்கனவே உள்ள விளையாட்டு உபகரணங்களை தவிர்த்து GUIDELINE  இல் கொடுக்கப்பட்டுள்ளவாறு அந்தந்த நிலைக்கேற்ற கொள்முதல் செய்யப்பட வேண்டிய உபகரணங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை விவரங்கள் அடங்கிய  GOOGLE  படிவத்தை 19.01.2021 ற்குள் பூர்த்தி செய்து அனுப்பிட அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு - 1இணைப்பு - 2.

Tuesday 12 January 2021

  13.01.2021     நினைவூட்டல்  - 2  //NMMS தேர்வுகள்//

    அனைத்து வகை உயர்/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

    பிப்ரவரி 21 இல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் (NMMS) தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்களின் விண்ணப்பப் படிவங்களை இணைப்பில் காணும் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

PROCEDURES  APPLICATION  REGISTRATION PROCESS 

குறிப்பு1 : பதிவேற்றம் முடிந்தவுடன் SUMMARY REPORT  இரண்டு நகல் மற்றும்  CANDIDATE DETAILS REPORT  நகலையும் ( ஒரு தேர்வர்க்கு ரூ.50 வீதம்)  சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் அ3 பிரிவு அலுவலரிடம் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

குறிப்பு 2 : தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் (NMMS) தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தவறிய தலைமை ஆசிரியர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 12.01.2021   // மிக மிக அவசரம்//

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 திருப்பத்தூர் மாவட்டம் சட்டமன்ற தேர்தல் - 2021  பணிக்காக திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணி புரியும் இணைப்பில் உள்ளஆசிரியரல்லாத பணியாளர்களை   18.01.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  பணி ஏற்கும் வகையில்   உடனடியாக விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விடுவித்தல் அறிக்கையினை மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் ஆகியோருக்கு தவறாமல் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Monday 11 January 2021

 12.01.2021  

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் /  மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

 

 வருகின்ற 19.1.2021 அன்று முதல்  10 ஆம்  மற்றும் 12 ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவது சார்ந்து, ஆய்வுக்கூட்டம் இன்று        12.01.2021 செவ்வாய்க்கிழமை பிற்பகல் சரியாக 4.00 மணி அளவில் திருப்பத்தூர்,அரசு மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி  கூட்ட அரங்கில் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளதால்அனைத்து தலைமை  ஆசிரியர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமாய் தெரிவிக்கப்படுகிறது

மேலும் தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ள ஆங்கிலம் (16 பக்கங்கள்) மற்றும் தமிழில் வெளியிட்டுள்ள Corona -19 (STANDARD OPERATING PROCEDURES ) நகல்கள் கண்டிப்பாக எடுத்து வரவேண்டும்.

இக்கூட்டத்தில் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

/திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவுபடி/

ஆய்வுக் கூட்டம்  நடைபெறும் நாள்- .12.01.2021

     இடம்    -    மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.

     நேரம்     -    பிற்பகல் 04.00 மணி 

மாவட்ட கல்வி அலுவலர்  திருப்பத்தூர்.

 11.01.2021      //அவசரம் //

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

01.01.2011  முதல் 31.12.2020 வரை பணி நியமனம் பெற்று பணியில் சேர்ந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை விவரம்  நாளை காலை 11.00 மணிக்குள் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் தகவல்களை எவ்வித தவறுமின்றி பதிவிடுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ONLINE SHEET 

 11.01.2021  அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் உள்ள கடிதங்களின் படி பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து இன்று ( 11.01.2021) மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக  மின்னஞ்சல் முகவரிக்கு  (deotpt2015@gmail.com)  அனுப்புமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1  இணைப்பு - 2 

Sunday 10 January 2021

 11.01.2021     நினைவூட்டல்  - 1  //NMMS தேர்வுகள்//

    அனைத்து வகை உயர்/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

    பிப்ரவரி 21 இல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் (NMMS) தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்களின் விண்ணப்பப் படிவங்களை இணைப்பில் காணும் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

PROCEDURES  APPLICATION  REGISTRATION PROCESS 

குறிப்பு: பதிவேற்றம் முடிந்தவுடன் SUMMARY REPORT  இரண்டு நகல் மற்றும்  CANDIDATE DETAILS REPORT  நகலையும் ( ஒரு தேர்வர்க்கு ரூ.50 வீதம்)  சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் அ3 பிரிவு அலுவலரிடம் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

 11.01.2021   அனைத்து மெட்ரிகுலேசன் உயர் / மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் கண்ட படிவத்தை Vanavil Avvaiyar  தமிழில் தட்டச்சு செய்து இன்று மாலை 2.00 மணிக்கு இவ்வலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிட்டு கையொப்பம் இட்ட நகலினை இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்கப்பட வேண்டும் என அனைத்து மெட்ரிகுலேசன் உயர் / மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Thursday 7 January 2021

 08.01.2021  

அனைத்து அரசு / அரசு நிதியுதவி தொடக்க / நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் மார்கழி மாதத்தில்  திருப்பாவையும் திருவெம்பாவையும் பாடப்படுவதாகவும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ / மாணவியர்கள் கலந்து கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு திருப்பாவை திருவெம்பாவை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகளை  நடத்த தற்போதுள்ள கொரானா நோய்தொற்றினை தொடர்ந்து அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கருத்திற்கொண்டு பாவை விழா 11.01.2021 அன்று இணையவழி மூலம் நடத்தப்படும். இதில் மாணவ மாணவியர்கள்  கலந்து கொள்ள சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு தெரியப்படுத்தி இணைக்கப்பட்டுள்ள லிங்க் (LINK) னை பயன்படுத்தி மாணவ மாணவியர்கள் தங்களது பெயர் , தகப்பனார் பெயர் (SMART PHONE) கைப்பேசி எண்மற்றும் பள்ளி விவரங்களை இணைப்பில் உள்ள லிங்க்னை பயன்படுத்தி 10.01.2021 அன்று பிற்பகல் 01.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 11/01/2021 அன்று நடைபெறும் மாணவ / மாணவியர்களுக்கு பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு LINK அனுப்பிவைக்கப்படும் எனவே உரிய நேரத்தில் போட்டியில் பங்குகொள்ளும் விதமாக மாணவர்களை தயார்படுத்துமாறு அனைத்து  தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

1 . லிங்க் (link) https://forms.gle/jjGwgpRXGV5UUJhd8


08.01.2021     //கடைசி  நினைவூட்டல்// 


இணைப்பில் உள்ள அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

    VPRC மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும்  பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஆகஸ்ட் - 2019 முதல் மார்ச் - 2020 வரையுள்ள மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிய விவரம் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களுடன் வங்கி கணக்கு  புத்தக முதல் பக்க நகல் மற்றும் CREDIT  & DEBIT பக்க நகல் இவ்வலுவலக அ5 பிரிவில் 11.01.2021 அன்று காலை 11.00 மணிக்குள்  சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
    VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையும் இரு நகல்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பராமரிப்பு செலவு மட்டும் பெறும் பள்ளிகளும் அறிக்கை இரு நகல்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

    மேலும் சுகாதார பணியாளர்கள் நியமன விவரம் மற்றும் ஜீன் - 2019 முதல் மார்ச் - 2020 வரை அவர்கள் ஊதியம் பெற்றமைக்கான சான்று ஆகியவற்றை இரு நகல்களிலும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

1. VPRC - ஊதியம் வழங்கப்பட்ட விவர அறிக்கை வழங்க வேண்டிய பள்ளிகள்.

1. அ.மே.நி.பள்ளி  குரும்பேரி,
2. அ.மே.நி. பள்ளி குனிச்சி,
3.  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆலங்காயம்,
4. அ.மே.நி.பள்ளி, கேத்தாண்டப்பட்டி,

2.  இன்மை அறிக்கை வழங்க வேண்டிய பள்ளிகள்

1. அ.உ.நி.பள்ளி, பெரியகரம்,
2. அ.ம.மே.நி.பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி,
3. அ.ம.உ.நி.பள்ளி, மிட்டூர்,
4. அ.ஆ.மே.நி.பள்ளி, திருப்பத்தூர்,
5. வனத்துறை அ.உ.பள்ளி , நெல்லி வாசல்,
6. அ.உ.பள்ளி, பி.நாயக்கனூர்,
7. வனத்துறை அ.மே.நி.பள்ளி புதூர் நாடு ,
8.அ.உ.நி.பள்ளி, கோணப்பட்டு,


 07.01.2021       

ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலம் –பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2020 – 2021 ஆம் கல்வியாண்டு  -   ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து  3 நகல்களில்  சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று (இணைப்பில் உள்ள பள்ளிகள் ) 11.01.2021 காலை 11 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதி வாய்ந்த மாணவியர் இல்லை எனில் இன்மை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  ATTACHMENT - 1ATTACHMENT - 2,  ATTACHMENT - 3  ATTACHMENT - 4

குறிப்பு : -  1.மாணவிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் - 1 நகல்  மற்றும் சாதி சான்றிதழ் / வருமான சான்றிதழ் தயார் நிலையில் வைத்துக்ககொள்ளவும்.

Wednesday 6 January 2021

 

07.01.2021  // மிக மிக அவசரம்//


 அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் மற்றும்  மெட்ரிக் / சி.பி.எஸ்.சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி உயர் / / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும்  மெட்ரிக் / சி.பி.எஸ்.சி பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் சார்பான அறிவுரைகள் . கருத்துக்கேட்பு கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து படிவம் 1 மற்றும் 2 ஐ நிறைவு செய்து , பெற்றோர்களின் கையொப்பம் பெற்று அதை தொகுத்து அறிக்கையாக 02 நகல்களில் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஆ5 பிரிவில்  இன்று  (07.01.2021)  மாலை 04.00 மணிக்குள்  தவறாமல் ஒப்படைக்க வேண்டும் என அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT 

 06.01.2021   

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

உடற்கல்வி , ஓவியம், தையல்ஆசிரியர், இசை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட அரசாணை எண், நாள் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com  என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை 07.01.2021 பிற்பகல் 01.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

Tuesday 5 January 2021

 

05.01.2021  // மிக மிக அவசரம்//


 அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் மற்றும்  மெட்ரிக் / சி.பி.எஸ்.சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி உயர் / / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும்  மெட்ரிக் / சி.பி.எஸ்.சி பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் சார்பான அறிவுரைகள் . கருத்துக்கேட்பு கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து படிவம் 1 மற்றும் 2 ஐ நிறைவு செய்து , பெற்றோர்களின் கையொப்பம் பெற்று அதை தொகுத்து அறிக்கையாக திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 07.01.2021 அன்று மாலைக்குள் தவறாமல் ஒப்படைக்க வேண்டும் என அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Monday 4 January 2021

 05.01.2020     // தனி கவனம் //  மிக அவசரம் //

அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

 திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் இணைப்பில் உள்ள சில தலைமை ஆசிரியர்கள்/பள்ளி உதவி ஆசிரியர்கள்  மற்றும் பணியாளர்களுக்கு IFHRMS இல் ஊதியம் பெற்று வழங்கப்பட வில்லை என உதவிக் கருவூல அலுவலரால் பள்ளிகளின் பெயர் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே இணைப்பில் உள்ள பள்ளிகளில் ஊதியம் பெற்று வழங்கப்படாமைக்கான காரணம் மற்றும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் நகலினை சார் கருவூலத்தில் இன்றே ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.   இணைப்பு


 05.01.2021   அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 

IFHRMS வரவு செலவுத் திட்டம் – 2020 –  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு 2020-2021-ஆம் நிதியாண்டிற்கான பண்டிகை முன்பணம்/மின்கட்டணம்/பயணப்படி / அஞ்சல் வில்லை/ அலுவலக செலவினம் நிதி ஒதுக்கீடு IFHRMS இல் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இச்செலவினங்களை 31.03.2021 க்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு 

 05.01.2021  

அனைத்து அரசு நிதியுவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2017,2018,2019  நிதியாண்டுகளில்  வருமான வரி ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த விவரம் (schedule)  நகல் மற்றும் வருமான வரி E.FILLING  செய்த விவரம் ஆகியவற்றின் நகல்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இன்று (05.01.2021) மாலை 04.00 மணிக்குள் ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

குறிப்பு . அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மட்டும் 

 04.01.2021 //NMMS தேர்வுகள்//

    அனைத்து வகை உயர்/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

    பிப்ரவரி 21 இல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் (NMMS) தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்களின் விண்ணப்பப் படிவங்களை இணைப்பில் காணும் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

PROCEDURES  APPLICATION  REGISTRATION PROCESS 

 04.01.2021    அனைத்து மெட்ரிக் பள்ளித் தாளாளர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் கல்வி மாவட்ட ஆளுகைக்குட்பட்ட அனைத்து மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லா பணியாளர்கள் தேர்தல் - 2021 படிவத்தினை பூர்த்தி செய்து 06.01.2021 க்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் இரு நகல்களில் நேரில்  ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு