11.10.2021 // புதிய தேர்வு மையங்கள் // மிக மிக அவசரம் //
அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
2021 - 2022 கல்வியாண்டு இடைநிலைப்பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (10 ஆம் வகுப்பு) பொதுத் தேர்விற்கு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பான கருத்துருக்களை இணைப்பில் குறிப்பிட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதத்தின் படி இவ்வலுவலகத்திற்கு 20.10.2021 புதன்கிழமைக்குள் 5 நகல்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: மார்ச் 2020 - ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்காக ஓராண்டிற்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வு மையமாக செயல்பட (சென்ற ஆண்டு வழங்கப்பட்ட ஆணைகள் குறிப்பிட்டுள்ள நிபந்தனை/நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்பட்டிருப்பின்) அதன் நகல்களை இவ்வலுவலகத்திற்கு 20.10.2021 க்குள் 5 நகல்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு