04/07/2022 // நினைவூட்டல் // தேர்வுகள் அவசரம் //
அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
நடைபெற்று முடிந்த மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத /வருகை புரியாத தேர்வர்கள் மற்றும் மே 2022 பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்களுக்கும் 02.08.2022 முதல் 08.08.2022 வரை ஆகஸ்ட் 2022 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு நடைபெறவுள்ளத. அத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பம் தேர்வர்கள் ஆன் - லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு 27.06.2022 (திங்கட்கிழமை) முதல் 04.07.2022 (திங்கட்கிழமை) வரையும், சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் நாட்கள் (தக்கல்) 05.07.2022 முதல் 07.07.2022 வரையும், பள்ளிகள் மற்றும் சேவை மையங்கள் ( Service Centre) சென்று பதிவு செய்யுமாறு தேர்வர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பள்ளிகள் மாணாக்கர் / தனித் தேர்வர்களுக்கு கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு ஆன் - லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறைகள் இணைப்பில்உள்ளவாறு பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1, இணைப்பு - 2 இணைப்பு - 3, இணைப்பு - 4