Tuesday, 21 June 2022

 

21/06/2022  // தேர்வுகள் அவசரம் // 

 அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

மே 2022 பத்தாம் வகுப்பு/மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள்/ மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் /விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் சார்பாக.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்/மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்:

24.06.2022 முற்பகல் 11.00 மணி முதல் மே 2022, பத்தாம் வகுப்பு/பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் வழியாகவும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்/மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், 24.06.2022 முற்பகல் 11.00 மணி முதல் பள்ளி மாணவர்கள்/தனித்தேர்வர்கள் தங்களுக்கென தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்/மதிப்பெண் பட்டியலை தங்களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பத்தாம் வகுப்பு தேர்வர்கள்-மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

மே 2022, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தாம் தேர்வு எழுதிய எந்தவொரு  பாடத்திற்கும் பள்ளி மாணவர்கள்/தனித்தேர்வர்கள் மறுகூட்டலுக்கு (RETOTALLING) விண்ணப்பிக்கலாம்.

மே 2022 பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி விடைத்தாள்களில் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 22.06.2022(புதன்கிழமை) காலை 10.00 மணி முதல் 29.06.2022(புதன்கிழமை) மாலை 5.00 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பு: மறுகூட்டலுக்காண கட்டணம் செலுத்தும் முறை, மறுகூட்டலுக்கான  கட்டணம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வர்கள்- விடைத்தாள் நகல் /மறு கூட்டலுக்கு-I விண்ணப்பிக்கும் முறை,விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறை ஆகியவை இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் வழிகாட்டுதல்படி பின்பற்றுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இனைப்புஇணைப்பு 2 இணைப்பு3 இணைப்பு4