17.06.2022
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு எதிர் வரும் 21.06.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டடத்தினை திறந்து வைத்தல்.பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் சார்பாக வருகை புரியவதால் வருகையின் போது பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் தணிக்கை செய்ய வாய்ப்பு உள்ளதால் அனைத்து வகை பள்ளிகளும்,அலுவலகங்களும் (தொடக்கக் கல்வி உட்பட) நல்ல சுகாதாரமான நிலையில் இயங்குவதையும், சுற்றுப்புறத் தூய்மை, கழிப்பட வசதிகள்,குடிநீர் வசதிகள்(சுகாதாரமான முறையில் குடிநீர் தொட்டிகள் (Water Tank) , மாணவர்கள் நல்ல நிலையில் உள்ள கட்டடங்களில் பயில்வதையும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.