06.05.2022 // பொதுத் தேர்வுகள் மிக அவசரம் //
மே - 2022 இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் பின்வரும் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
1. தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், ஒவ்வொரு தேர்வு நாளன்றும் வருகை புரியாதோர் ( Absentees entry) / மொழிப் பாட விலக்கு பெற்றோர் (Language Exemption) போன்ற விவரங்களை பிற்பகல் 02.00 மணி முதல் 03.00 மணிக்குள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என இணைப்பு - 1 இல் தெரிவிக்கப்பட்டது.
தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், ஒவ்வொரு தேர்வு நாளன்றும் வருகை புரியாதோர் ( Absentees entry) / மொழிப் பாட விலக்கு பெற்றோர் (Language Exemption) போன்ற விவரங்களை பிற்பகல் 1.30 மணிக்குள் தவறாது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் PASSWORD யை பயன்படுத்தி பதிவேற்றம் செய்யவேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் ஏற்படாதவாறு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2. அனைத்து தேர்வர்களும் தேர்வெழுத வருகை புரிந்திருப்பின் இணையதளத்தில் " All Present" என்பதை Click செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இணைப்பு-1 (04.05.2022 நாளிட்ட அரசு தேர்வுகள் இயக்குநரின் கடிதம்) இணைப்பு - 2 (05.05.2022 நாளிட்ட அரசு தேர்வுகள் இயக்குநரின் தொடர்ச்சி கடிதம்)