27.04.2022 // தனி கவனம் // மிக அவசரம்// நினைவூட்டுதல் 1
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2021 - 2022 ஆம் கல்வியாண்டில் மாணவ / மாணவியர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்க தொகை ( POWER FINANCE) வழங்கும் பொருட்டு வங்கி கணக்கு விவரங்களை இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் 26.04.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறும் அதன் நகலினை EXCEL SHEET இல் தட்டச்சு செய்து இரு நகல்கள் இவ்வலுவலக அ4 பிரிவில் 26.04-2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறும் கோரப்பட்டிருந்தது ஆனால் சில பள்ளிகள் தவிர மற்றப்பள்ளிகள் இதுநாள் வரை ஆன் லைன் படிவத்தில் உள்ளீடு செய்யாமல் இருப்பதும் , நகல் இவ்வலுவகத்தில் ஒப்படைக்காமல் உள்ள காரணத்தினால் தொகுப்பறிக்கை செய்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலையில் இருப்பதால் இனியும் காலம் தாழ்த்தாமல் மேற்காண் பொருள் சார்து உடன் நடவடிக்கை எடுத்து உரிய படிவங்களை பூர்த்தி செய்து இருநகல்கள் இவ்வலுவலக அ4 பிரிவில் 27.04.2022 மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. . மேலும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்த விவரங்களை குறுந்தகட்டில் பதிவு செய்து இவ்வலுவகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்விவரப்படிவத்தில் தகுதி வாய்ந்த மாணவர் எவர் பெயரும் விடுபடவில்லை எனவும் யாருடைய பெயரும் இருமுறை பதிவு செய்யப்படவில்லை எனவும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் உறுதி மொழி சான்று அளிக்கவேண்டும் . மேலும் அனைத்து மாணவர்ளின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் எடுத்து உரிய படிவத்துடன் இணைக்கப்படவேண்டும் இணைப்பு1 இணைப்பு2