08.12.2020 ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு (Trust Exam) ஜனவரி 2021இல் நடைபெறவுள்ளது. அத்தேர்வு எழுத விருப்பம் உள்ள 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் பெற்று அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) உள்ளீடு செய்வது தொடர்பான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டி விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. ஊரகப் பகுதிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர், அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு