Monday, 24 February 2020

25.02.2020  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் சாரண சாரணீய இயக்கத்தின் நிறுவனர் பேடன் பவல் அவர்களின் பிறந்த நாள்  “ உலக சிந்தனை நாள் ” ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே சாரண சாரணீய மாணவர்களின் “உலக சிந்தனை நாள்” பேரணி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் துவக்கி வைக்கப்பட உள்ளது. எனவே திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் இப்பேரணியில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. சாரண சாணீய மாணவர்கள் மற்றும் சாரண ஆசிரியர்கள் முழு சீருடையில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

நாள்                                                : 27.02.202  வியாழக்கிழமை

நேரம்                                             : காலை 8 மணி

பேரணி புறப்படும் இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர்

வழி                                                  : தூய நெஞ்சக் கல்லூரி

பேரணி வந்து சேருமிடம் : அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.