Tuesday, 8 March 2022


08.03.2022             // தேர்வுகள் அவசரம் //

அனைத்து  வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

நடைபெறவுள்ள மே - 2022 பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு பொதுத்தேர்வு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏற்கனவே நேரடித் தனித் தேர்வராக மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) தேர்வு எழுதி பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற/தேர்ச்சி பெறாத/வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வு எழுதுவதற்கும் முதலாம் ஆண்டு (+1) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்

மே - 2022, பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், 09.03.2022 (புதன்கிழமை) முதல் 16.03.2022 (புதன்கிழமை) வரையிலான நாட்களில்) 13.03.2022  (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை  திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியிலும், வக்கணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.

தட்கல் சிறப்பு அனுமதி முறையில்  விண்ணப்பிப்பதற்கான நாட்கள்

மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 18.03.2022 (வெள்ளிக்கிழமை) முதல் 21.03.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (20.03.2022 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுத்துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக  ரூ.1000/-  (மேல்நிலை) / ரூ.500/- (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தட்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பொதுவான அறிவுரைகள்  (கொரோனா தடுப்பு  சார்ந்து)

1.தனித்தேர்வர்கள் மே - 2022 பொதுத் தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பிக்க, சேவை மையங்களுக்கு வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும்.

2. போதிய சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

3.அரசின் வழிகாட்டுதல் முறையினை பின்பற்றவும் தெரிவிக்கப்படுகிறது.