19.03.2021 // தேர்தல் அவசரம்//
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தோ்தல் 2021 திருப்பத்தூர் மாவட்டம் - வாக்குச்சாவாடி அமைந்துள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் / உயர் / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 22.03.2021 மற்றும் 23.03.2021,27.03.2021 முதல் 02.04.2021 ,03.04.2021,05.04.2021 ஆகிய தேதிகளில் வெப்கேமரா பொருத்தும் பணி நடைபெற உள்ளதால் மேற்கண்ட தேதிகளில் பள்ளிகளை திறந்துவைக்குமாறு அனைத்து வகை பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து வகை தொடக்க / நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு உரிய அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் (திருப்பத்தூர் கல்வி மாவட்டம் ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் துறை உயர் அலுவலர்கள் அவ்வப்போது வாக்குச்சாவடிகளை பார்வையிட வருகைப்புரிய உள்ளதால் வாக்குசாவடிஅமைந்துள்ள அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் முழு நேரமும் பள்ளியை திறந்து வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்,மேலும் தலைமை ஆசிரியர் தமது கைபேசி எண் மற்றும் இதர விவரங்களை பள்ளி அறிவிப்புப்பலகையில் எழுதிவைக்கவும் கைப்பேசியினை உயர் அலுவலர்கள் /வருவாய் துறையினர் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உடனடியாக சரியான விவரங்களை தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு 1