24.07.2020 நினைவூட்டல் -1
அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிய விவரத்தினை கொடுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் வழங்குமாறு ஏற்கனவே பலமுறை நினைவூட்டியும் இணைப்பில் உள்ள சில பள்ளிகள் இதுநாள் வரை ஒப்படைக்கவில்லை. இதனால் முதன்மைக் கல்வி அலுவலருக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே மறுநினைவூட்டலுக்கு இடமளிக்காமல் ஊதியம் வழங்கிய விவரத்தினை கொடுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து வழங்குமாறு இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT
குறிப்பு:
1. பராமரிப்பு தொகை பெறும் பள்ளிகளும் படிவத்தில் பூர்த்தி செய்து வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2. ஊதியம் மற்றும் பராமரிப்பு தொகை பெறாத பள்ளிகள் இன்மை அறிக்கை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.