Monday, 27 April 2020

27.04.2020
 அனைத்து   வகை நர்சரி மற்றும் மெட்ரிக்  / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளின் முதல்வர்கள் / தாளாளர்களின் கவனத்திற்கு 
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி சென்ற கல்வி ஆண்டு மாணவர்களின் பெற்றோர்களால் செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ள கல்விக்கட்டணம் மற்றும் வரும் கல்வி ஆண்டிற்கான கல்விக்கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் வNலிக்க நிர்பந்திப்பதாக புகார் பெறப்பட்டுள்ளதின் அடிப்படையில் தற்போதைய அசாதாரன Nல்நிலைவயில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்விக்கட்டணம் நிலுவை மற்றும் வரும் கல்வி ஆண்டிற்கான கல்விக்கட்டணங்கள் வNலிப்பது நிறுத்திவைக்க எற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தும் ஒருசில தனியார் பள்ளி நிர்வாகிகள் கல்விக்கட்டணம் செலுத்த பெற்றோர்களை நிர்பந்திப்பதாக புகார் மூலம் தெரியவருகிறது. எனவே திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசிடமிருந்து மறு’உத்திரவு வரும் வரை நிலுவை கல்வி கட்டணம் மற்றும் வரும் கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணம் வNலிக்கக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது மேலும் அவ்வாறு எவரேனும் வNலிப்பது சார்பாக புகார் பெறப்படின் தங்கள்  பள்ளிக்கான அங்கீகாரத்தினை இரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. .மேலும் செயல்முறை கடிதம்  பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புதலை இவ்வலுவலகத்திற்கு பணிந்தனுப்பிவைக்க தாளாளர்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்