27.08.2019 - மிக மிக அவசரம் - தனிகவனம் - அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
அரசாணை எண் 47-இன்படி சிறப்பு காலமுறை ஊதிய துப்புறவாளர்களாக பணிநியமனம் பெற்று அரசாணை எண் 50-இன் படி முறையான ஊதியத்தில் துப்புறவாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களை தவிர்த்து பிற அடிப்படைப் பணியாளர்களான அலுவலக உதவியாளர்/துப்புரவாளர்/பெருக்குபவர் /நீர்கொணர்பவர்/தோட்டக்காரர் ஆகிய பணியாளர்களில் இருந்து இரவு காவலராக பணிமாறுதல் கோருபவர்கள் தங்களது விருப்ப கடிதத்தினை மூன்று (3) நகல்களில் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் இன்று மாலை 04.30 மணிக்குள் தனிநபர் மூலமாக திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இரவு காவலராக பணிமாறுதலில் விருப்பம் இல்லாத பணியாளர்கள் தங்கள் விருப்பமின்மை கடிதத்தினை மூன்று (3) நகல்களில் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் இன்று மாலை 04.30 மணிக்குள் தனிநபர் மூலமாக திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.