08.07.2019 - அனைத்துவகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நாளை 09.07.2019 மதியம் 02.00 மணிக்கு பெற்றுக்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளி தலைமையாசிரியர்கள் மாணாக்கர்கள்/தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டிய நாள் மற்றும் நேரம் : 10.07.2019 காலை 10.00 மணி.
குறிப்பு:- மேலும் மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர்கள்/தனித்தேர்வர்கள் அனைவருக்கும் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்குமாறு சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.