19.11.2020 நினைவூட்டல் - 2 // மிக அவசரம் // திருத்தம் //
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2020-2021 ஆம் ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கேட்பு பட்டியல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.11.2020 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்நாள் வரை மிகக் குறைந்த அளவிலான பள்ளிகளிடமிருந்தே படிவங்கள் பெறப்பட்டது. இப்படிவங்களை மாவட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் அலுவலகத்திற்கு தொகுத்து அனுப்ப வேண்டியுள்ளதால் 19.11.2020 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் நேரில் 3 நகல்களில் ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
குறிப்பு .
1. மாணவிகளின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 72000/ மிகாமல் இருக்கவேண்டும்
2 . கிராமபுற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு மட்டுமே ஊக்க தொகை வழங்கப்படும்
3. சாதிசான்று நகல் மற்றும் வருமான சான்று தவறாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்