11.06.2020
அனைத்து அரசு/நிதியுதவி / மெட்ரிக் / உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு
பள்ளிக் கல்வி - 2019 /2020 ஆம் கல்வியாண்டு - 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்தது - அனைத்து அரசு /அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ( சிபிஎஸ்சி பள்ளிகள் தவிர) மாணவர்களின் வருகை பதிவேட்டினை இணைப்பில் உள்ள ஒன்றியம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களிடம் நாளை 11.06.2020 காலை 10.00 மணி முதல் திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வருகை பதிவேட்டினை ஒப்படைத்தமைக்கு ஒப்புகைசீட்டு நேர்முக உதவியாளர் / பள்ளித் துணை ஆய்வரிடம் கையொப்பம் பெற்று செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ATTACHMENT - 1 ATTACHMENT - 2 ATTACHMENT - 3 படிவம் (2 நகல்களில்)
குறிப்பு - 1.வருகைப் பதிவேட்டினை ஒவ்வொரு பக்கத்தையும் பூர்த்தி செய்து சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்பந்தத்துடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2. மாத வாரி வருகை சுருக்கம் 2 நகல்கள்