27.01.2019 - அவசரம் தனிகவனம் - அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - நடைபெற்று வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள்/ஆசிரியரல்லாத பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பதிலியாக தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் தற்காலிக நியமனம் மேற்கொள்ளுமாறு அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கான மாதிரி படிவம் இணைக்கப்பட்டுள்ளது. இப்படிவத்தில் விவரங்கள் பூர்த்தி செய்து உரிய கல்வி தகுதி சான்றிதழ்களை இணைப்புடன் பெற்று கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது. இதில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காவண்ணம் செயல்படுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.