29.04.2022
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
பள்ளிக்கல்வி 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்தமை உபரிப்பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தமை கூடுதல் தேவையுள்ள பணியிடங்களுக்கு பணிநிரவல் ஆணை பெற்றவர்கள் IFHRMS மூலம் ஊதியம் வழங்க அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் காலதாமதம் ஏதுமின்றி இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும் 30.04.2022 அன்று பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு பணிந்து அனுப்பவேண்டியுள்ளதால் இந்நேர்வில் காலதாமதம் இல்லாமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மீள தெரிவிக்கலாகிறது. இணைப்பு1 இணைப்பு2