Friday, 19 November 2021


19.11.2021  // தேர்வுகள் // அவசரம்// தனிகவனம்//

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு, EMIS இல்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்கள்  மற்றும் விவரங்களை பதிவு செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ளவாறு தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மாணவர்கள் விவரங்களையும் EMIS PORTAL இல் சென்று சரிபார்த்து, திருத்தம் செய்யும் பணியினை மேற்கொள்ளுதல் வேண்டும். மேலும், பெயர்பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால், இப்பணியினை தலைமை ஆசிரியர் தமது நேரடி கவனத்தில் மிகுந்த பொறுப்புடனும், சிரத்தையுடனும், மேற்கொள்ள வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட மாணாக்கர்களின் விவரங்களில் தவறுகள் ஏதும் ஏற்படின் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும்.மேலும், பதிவேற்றம் செய்த விவரங்களை சரிபார்த்து, இடைநிலை மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு தேவைப்படும் கூடுதல் விவரங்களான மொழிப்பாட விலக்கு, செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள், விருப்ப மொழிப் பாடத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் போன்ற பணிகளை அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மேற்கொள்வதற்கான செய்திகள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இணைப்பு