06.07.2021
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
கொரோனா தொற்றால் உயிரிழந்த ஆசிரியர்கள் பற்றிய விவரம், தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிக்கு இடம் பெயர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை வகுப்பு வாரியாக மற்றும் 2021 -2022 ஆம் கல்வியாண்டில் ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களின் விவரத்தினை இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் தனித்தனியாக முன்று (3) படிவங்களில் 07.07.2021 மாலை 02.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கோரப்பட்ட தகவல்கள் அடங்கிய படிவங்களில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களின் கையொப்பத்துடன் இரு நகல்களில் தனி நபர்மூலம் ஒப்படைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இப்பொருள் தொடர்பாக தொகுப்பறிக்கை திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலத்திற்கு உடன் அனுப்பவேண்டி இருப்பதால் தனிகவனம் செலுத்தி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு : ONLINE படிவத்தில் தங்களிடம் கோரப்படும் விவரங்கள் அடங்கிய படிவத்தினை இனி வரும் காலங்களில் நீக்கம்(DELETE) செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.