27/11/2020 // மிக மிக அவசரம் //
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தங்கள் பள்ளிகளில் கடந்த இரண்டு நாட்களில் நிவர் புயலின் தாக்கத்தால் பள்ளி சுற்றுச்சுவர் , பள்ளிக்கட்டிடங்கள் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருப்பின் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக மூன்று நகல்களில் சேதப் பகுதியின் புகைப்படத்துடன் இன்று நண்பகல் 01.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ4 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை பணிந்து அனுப்ப உள்ளதால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.