Thursday, 30 September 2021

 

01.10.2021  // தேர்வு //

அனைத்து வகை  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

மார்ச் 2021 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (ORIGINAL MARK CERTIFICATES)  அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் 04.10.2021 (திங்கள் கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல்  மாணவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  

    மேலும், கோவிட் - 19 தடுப்பு சம்பந்தமான அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடித்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணிகளை  மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இணைப்பு 

  30.09.2021   // NMMS    FRESH AND RENEWAL  // மிக மிக அவசரம் ( நினைவூட்டல் - 3)

அரசு/அரசு நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் – தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் திறன் தேர்வில் (National Means-cum-Merit Scholarship Scheme) தேர்ச்சி பெற்று NMMSS கல்வி உதவித் தொகை பெறத்தகுதியான மாணவ/மாணவியர்களின் விண்ணப்பங்கள் (2020-2021 Fresh & தற்போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Renewal) ஆன்லைன் மூலம் NSP (National Scholarship Portal) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை இன்று 01.10.2021 காலை 11.00 மணிக்குள் இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி செய்து முடித்து அன்றை தினமே Institute Verification முடித்து விண்ணப்பங்களை ஆண்டுவாரியாக தொகுத்து 2 நகல்களில்  திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ5 பிரிவுல் தனிநபர்மூலம் ஒப்படைக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1  இணைப்பு2

1. NMMS Result - இல் உள்ள படியே விண்ணப்பத்திலும் பெயர் இருத்தல் வேண்டும்.

2. Scholarship என்ற கலத்தில் Prematric -  யையும்  Scheme Type என்ற கலத்தில் Scholarship  யையும் தேர்வு செய்ய வேண்டும். Father Occupation - இல் Other  என்று Select செய்ய வேண்டும்.

3. ஆதார் அட்டை மற்றும் NMMS Result  ஒரே மாதிரியான பெயர் இருந்தால் மட்டுமே ஆதார் அட்டை Upload செய்யப்பட வேண்டும். 

4. இல்லையெனில் NMMS  RESULT  இல் உள்ளபடி கட்டாயமாக ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்யவேண்டும். 

5. ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்த பின்பு மாணவரின் APPLICATION ID  இல் சென்று பதிவு செய்யவும்.

6. Community - இல் Sc /St / General மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

7. Previous  year - 2021 & Competitive Exam Year - 2020  என Enter செய்ய வேண்டும்.

8.Renewal Application ஒரு போதும் Withdraw செய்தல் கூடாது. Correction இருந்தால் Defect  மட்டுமே கொடுக்க வேண்டும்.

Wednesday, 29 September 2021

 30.09.2021  // தேர்வுகள் //

 அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் /  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின்  கவனத்திற்கு 

 திருப்பத்தூர் கல்வி மாவட்ட பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களுக்கான மார்ச் 2021 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நாளை(01.10.2021) காலை 10.00 மணி முதல் வழங்கப்படவுள்ளது. எனவே, சார்ந்த பள்ளி ஆசிரியர்கள் அல்லது பணியாளர் ஒருவரை அறிமுக கடிதத்துடன் வந்து பெற்றுச்செல்லுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்    கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 மேலும், மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் 

 30/09/2021   // தேர்வு அவசரம்//

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு

2020 -2021 ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற மாணாக்கர்களின் மதிப்பெண் பட்டியல்கள் (STATEMENT OF MARKS)  மற்றும் பள்ளிக்குரிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) ஆகியவற்றை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளுவதுடன்  இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு

Saturday, 25 September 2021

 26.09.2021  

அனைவருக்கும் வணக்கம்!                                                                        

 உள்ளாட்சித் தேர்தல்கள்-2021                                                                                                         

                    நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு 24.09.2021 அன்று -6 மையங்களில் நடந்து முடிந்தன. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளாத தொடக்க/ நடுநிலைப்பள்ளி, மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திருப்பத்துார் மாவட்ட ஆட்சியரால் ”விளக்கம் கேட்கும் அறிவிக்கை”  show cause notice  வரப்பெற்றுள்ளன. 

                           தற்போது, திருப்பத்துார் மாவட்டக்கல்வி அலுவலகம் மற்றும் அந்தந்த வட்டாரக்கல்வி அலுவலகங்களில் ”விளக்கம் கேட்கும் அறிவிக்கை” வழங்கப்பட்டு வருகின்றன. இதனை பெற்றுக்கொள்வதுடன் திருப்பத்துார் துாய நெஞ்கச்கல்லுாரியில் 27.09.2021 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள சிறப்பு தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் பயிற்சியில் கலந்துகொள்ளாமைக்கான விளக்கக்கடிதத்தினையும் திருப்பத்துார் மாவட்டக்கல்வி அலுவலகம் மற்றும் அந்தந்த வட்டாரக்கல்வி அலுவலகங்களில் 27.09.2021  காலை 10.00 மணிக்குள் சமர்பிக்கப்படவேண்டும்.  

                                  விளக்கமளிக்க தவறினாலோ சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தவறினாலோ கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்ற விவரமும் சார்ந்த ஆசிரியர் பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.       இனைப்பு                                                                                                                                                                                                                                                                                                                                                                             

                                                                      / மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி/                                                                                                  

                                                                                   மாவட்டக்கல்வி அலுவலர்,        

                                                                                                     திருப்பத்துார்.

Thursday, 23 September 2021

 22/09/2021// கூடுதல் மின்கட்டணம் தேவை விவரம்//

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

2021-2022 ஆம் கல்வியாண்டில் 2202 02 109AA என்ற கணக்கு தலைப்பில் மின்கட்டணம் (2021 -2022)பெற்றது  போக கூடுதல்  மின்  கட்டணம்  தேவைப்படும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய படிவத்தில்  பூர்த்தி செய்து  27.09.2021 அன்று மாலைக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  படிவம்


Tuesday, 21 September 2021

 21.09.2021   // தேர்தல்அவசரம் // 

                       //ஊரக உள்ளாட்சித்தேர்தல்//

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

நடைபெறவுள்ள ஊரக  உள்ளாட்சி தேர்தல் 2021 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிக்கான ஆணைகள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்டுள்ளது. பள்ளியின் ஆசிரியர் / அலுவலக  பணியாளர் ஒருவரை இன்று பிற்பகல் 2.00 மணி முதல் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைத்து ஆணையினை பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  மேலும், ஒப்புகை சீட்டினை இன்று மாலைக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கலாகிறது.

Monday, 20 September 2021

 20.09.2021         நினைவூட்டல் 

அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2021 - 2022 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சத்துணவு உண்ணும் மாணவர்களின் எண்ணிக்கையினை ஆண் / பெண் வாரியாக தெரிவிக்கும்படி 31.08.2021  அன்று இவ்வலுவலக இணையதளத்தில் படிவங்கள் பதிவிடப்பட்டது. ஆனால் இன்று வரை கீழ்கண்ட பள்ளிகள் இவ்விவரங்களை வழங்காமையால் உரிய நேரத்தில் அரசின் விலையில்லா நலத்திட்டங்கள் பெறுவதில் காலதாமதம்  ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் ஒரு நினைவூட்டலுக்கு இடமின்றி   கோரப்பட்டுள்ள தகவல்களை  விரைந்து வழங்கும்படி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மேல்நிலைப்பள்ளிகள்

1. பூங்குளம்

2. மிட்டூர்

3. கிரிசமுத்திரம்

4. ஆலங்காயம் (ஆண்கள்)

5. வெலக்கல்நத்தம்

6. பொன்னேரி

7. மல்லப்பள்ளி

8. புதுப்பேட்டை (ஆண்கள்)

9. சுந்தரம்பள்ளி

10. பெரியகண்ணாலப்பட்டி

11. பேராம்பட்டு

12. நத்தம்

13. குரும்பேரி

14. குனிச்சி

15. கெஜல்நாயக்கன்பட்டி (பெண்கள்)

16. ஏகலைவா உ ண்டு உறைவிட பள்ளி

17. வடுகமுத்தம்பட்டி

18. பொம்மிகுப்பம்

19. ஸ்ரீமீனாட்சி மகளிர் திருப்பத்தூர் 

20. மடவாளம் ம(பெண்கள்)

21. திருப்பத்தூர் (ஆண்கள்)

22. தோமினிக் சாவியோ திருப்பத்தூர்

23. மேரிஇமாக்குலேட் திருப்பத்தூர்.

24. TMS  திருப்பத்தூர்.

25. உபைபாஸ்  (பெண்கள்) திருப்பத்தூர்

26. உஸ்மானியா திருப்பத்தூர்.

27. செயின்ட் சார்லஸ் அத்தனாவூர்.

28. செயின்ட் ஜோசப் ஜோலார்பேட்டை

29. நெல்லிவாசல் நாடு 

உயர்நிலைப்பள்ளிகள் 

1. பெரியகுரும்பத்தெரு

2. கொல்லகுப்பம்

3. ADW,  ஆலங்காயம்

4. கோணாப்பட்டு

5. அசோக் நகர்

6. சந்திரபுரம்

7. குன்னத்தூர்

8. நெக்குந்தி

9. அக்ராகரம்

10. திரியாலம்

11. பெரியகரம்

12. செவ்வாத்தூர்

13. கசிநாயக்கன்ப்பட்டி

14. எலவம்பட்டி

15. அங்கநாத வலசை

16. கொடுமாம்பள்ளி

17. ஜம்மனபுதூர் பூங்குளம்

18. அண்ணான்டப்பட்டி



Sunday, 19 September 2021

 20.09.2021   // NMMS    FRESH AND RENEWAL  // மிக மிக அவசரம் ( நினைவூட்டல் - 2)

அரசு/அரசு நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் – தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் திறன் தேர்வில் (National Means-cum-Merit Scholarship Scheme) தேர்ச்சி பெற்று NMMSS கல்வி உதவித் தொகை பெறத்தகுதியான மாணவ/மாணவியர்களின் விண்ணப்பங்கள் (2020-2021 Fresh & தற்போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Renewal) ஆன்லைன் மூலம் NSP (National Scholarship Portal) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை இன்று 20.09.2021 பிற்பகல் 2.00 மணிக்குள் இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி செய்து முடித்து அன்றை தினமே Institute Verification முடித்து விண்ணப்பங்களை ஆண்டுவாரியாக தொகுத்து 2 நகல்களில்  திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ5 பிரிவுல்  ஒப்படைக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1  இணைப்பு2

1. NMMS Result - இல் உள்ள படியே விண்ணப்பத்திலும் பெயர் இருத்தல் வேண்டும்.

2. Scholarship என்ற கலத்தில் Prematric -  யையும்  Scheme Type என்ற கலத்தில் Scholarship  யையும் தேர்வு செய்ய வேண்டும். Father Occupation - இல் Other  என்று Select செய்ய வேண்டும்.

3. ஆதார் அட்டை மற்றும் NMMS Result  ஒரே மாதிரியான பெயர் இருந்தால் மட்டுமே ஆதார் அட்டை Upload செய்யப்பட வேண்டும். 

4. இல்லையெனில் NMMS  RESULT  இல் உள்ளபடி கட்டாயமாக ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்யவேண்டும். 

5. ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்த பின்பு மாணவரின் APPLICATION ID  இல் சென்று பதிவு செய்யவும்.

6. Community - இல் Sc /St / General மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

7. Previous  year - 2021 & Competitive Exam Year - 2020  என Enter செய்ய வேண்டும்.

8.Renewal Application ஒரு போதும் Withdraw செய்தல் கூடாது. Correction இருந்தால் Defect  மட்டுமே கொடுக்க வேண்டும்.

Friday, 17 September 2021

 17.09.2021           //  தேர்தல் அவசரம்  //

அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இதுநாள் வரை தேர்தல் பணிக்கான படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்காத தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் உடனடியாக படிவத்தை பூர்த்தி செய்து இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக “ அ1” பிரிவில் சமர்ப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பூர்த்தி செய்து வழங்கப்பட்ட படிவத்தில் புகைப்படம் வழங்காதவர்கள் உடனடியாக CPS  மற்றும் GPF  எண்ணுடன் “அ1” பிரிவில் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் சார்பாக ஒத்துழைப்பு வழங்காத ஆசிரியர்கள் பெயர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலருமான மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவதுடன் துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்ற விபரமும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    17.09.2021     நினைவூட்டல்     (திருத்தப்பட்ட படிவம்)

 அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலம் –பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2021 – 2022 ஆம் கல்வியாண்டு  -   ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த    6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்தும், சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம் பெற்றும் 20.09.2021 அன்று  மாலைக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் தனிநபர் மூலம்  ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT -1,ATTACHMENT - 2  ATTACHMENT - 3 

(குறிப்பு : -  
1. மாணவிகளின் பெயரில் மட்டுமே தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் வங்கி கணக்கு இருக்க வேண்டும்.
2 .மாணவிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் - 1 நகல்
3.  படிவம் 1, 2  (3 நகல்கள் )

Wednesday, 15 September 2021

 15.09.2021    // +2  மதிப்பெண் சான்றிதழ்  வழங்குதல் //

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

மே - 2021  மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் மார்ச் - 2020 / செப்டம்பர் - 2020  முதலாம் ஆண்டு தேர்விற்கான மாணாக்கர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் காலை 11.00 மணி முதல் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் தங்கள் பள்ளியில் பயின்ற மாணாக்கர்களின் விவரங்களை முகப்பு கடிதத்துடன் வந்து சான்றிதழ்களை சரிபார்த்து நேரில் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 

குறிப்பு:  தலைமை ஆசிரியர்களை தவிர்த்து மற்ற ஆசிரியர்கள் சான்றிதழ் பெற வரும்பொழுது ஆளறி சான்றிதழ் கட்டாயம் எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


15.09.2021   // NMMS    FRESH AND RENEWAL  // ( நினைவூட்டல் - 1)

அரசு/அரசு நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் – தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் திறன் தேர்வில் (National Means-cum-Merit Scholarship Scheme) தேர்ச்சி பெற்று NMMSS கல்வி உதவித் தொகை பெறத்தகுதியான மாணவ/மாணவியர்களின் விண்ணப்பங்கள் (2020-2021 Fresh & தற்போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Renewal) ஆன்லைன் மூலம் NSP (National Scholarship Portal) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை 16.09.2021-க்குள் இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி செய்து முடித்து அன்றை தினமே Institute Verification முடித்து விண்ணப்பங்களை ஆண்டுவாரியாக தொகுத்து 2 நகல்களில்  திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ5 பிரிவுல்  ஒப்படைக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1  இணைப்பு2

1. NMMS Result - இல் உள்ள படியே விண்ணப்பத்திலும் பெயர் இருத்தல் வேண்டும்.

2. Scholarship என்ற கலத்தில் Prematric -  யையும்  Scheme Type என்ற கலத்தில் Scholarship  யையும் தேர்வு செய்ய வேண்டும். Father Occupation - இல் Other  என்று Select செய்ய வேண்டும்.

3. ஆதார் அட்டை மற்றும் NMMS Result  ஒரே மாதிரியான பெயர் இருந்தால் மட்டுமே ஆதார் அட்டை Upload செய்யப்பட வேண்டும். 

4. இல்லையெனில் NMMS  RESULT  இல் உள்ளபடி கட்டாயமாக ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்யவேண்டும். 

5. ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்த பின்பு மாணவரின் APPLICATION ID  இல் சென்று EID OPTION இல் மாணவரின் ENROLMENT எண்ணை பதிவு செய்யவும்.

6. Community - இல் Sc /St / General மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

7. Previous  year - 2021 & Competitive Exam Year - 2020  என Enter செய்ய வேண்டும்.

8.Renewal Application ஒரு போதும் Withdraw செய்தல் கூடாது. Correction இருந்தால் Defect  மட்டுமே கொடுக்க வேண்டும்.

Tuesday, 14 September 2021

 14.09.2021  

அனைத்து வகை  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசாணை (நிலை) எண்.216 தொடர்பான 01.06.1988 முதல் 31.12.1995 வரை இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்ற இடைநிலை / உடற்கல்வி / ஓவியம் / கைத்தொழில் ஆசிரியர்கள்  விவரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசாணை (நிலை) எண்.216 தொடர்பான 01.06.1988 முதல் 31.12.1995 வரை இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்ற இடைநிலை / உடற்கல்வி / ஓவியம் / கைத்தொழில் ஆசிரியர்கள்  எவரும் இல்லையெனில் இன்மை அறிக்கையினை இத்துடன் இணைத்துள்ள படிவத்தில்  வழங்குமாறு அனைத்து வகை  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 

Monday, 13 September 2021

14.09.2021     (திருத்தம்)

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2021 - 2022 ஆம் கல்வியாண்டில் அரசு விலையில்லா பாடநூல்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுபடாமல் முழுமையாக பாடநூல்கள் வழங்கிடும் வண்ணம்  இருப்பில் உள்ள பாடநூல்கள் மற்றும் தேவைப்படும் பாடநூல்கள் எண்ணிக்கையினை குறித்த  தகவல்களை காலதாமதத்திற்கு இடமின்றி தனிகவனம் செலுத்தி இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 16.09.2021 மாலை 05.00 மணிக்குள் வழங்கிடும்படி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

நகல்,

திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது. 


 14.09.2021    // சிறப்பு தனிகவனம்//

அனைத்து வகை  அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

IFHRMS  இணையதளத்தில் E-SR  UPDATE  மற்றும் NUMBER STATEMENT  15.09.2021 க்குள் சரிபார்க்கப்பட்டு  சார்கருவூலகத்தில் சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது. மேலும், சார் கருவூலரின் செயல்முறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது செயல்முறைகளின் படி செயல்படுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இதில் காலதாமதம் ஏற்படின் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே பொறுப்பு என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு

 14.09.2021  

அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தேசிய குடற்புழு நீக்க நாள்: பொது சுகாதார துறையின் மூலம் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரை 13.09.2021 முதல் 18.09.2021 வரையிலும் மற்றும் இரண்டாவது வாரத்தில் 20.09.2021 முதல் 25.09.2021 வரையிலும்  வழங்க உள்ளதால்  அனைத்து தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் மருத்துவத்துறை ஊழியர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Thursday, 9 September 2021

 09.09.2021  // மிக அவசரம்  //  தனிகவனம் //

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் விவரம் மற்றும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் சார்பான விவரங்களை கல்வி மேலாண்மைத் தகவல் முகமை (EMIS) பதிவுகள்  மேற்கொள்ள இணைப்பில் கண்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 2 நகல்களில் இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1  இணைப்பு - 2 

 09.09.2021    // மிக மிக அவசரம் // 

அனைத்து வகை நர்சரி மற்றும் பிரைமரி, மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளி  தாளாளர் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

                                           Covid - 19 Vaccination Details As On  - 08.09.2021

 இணைப்பில் கண்டுள்ள ஆன் லைன் படிவத்தில் நாளை 10.09.2021 மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அறிக்கை  வழங்க வேண்டி உள்ளதால்  எவ்வித சுணக்கம்  இன்றி உடன்   பதிவிட  அறிவுறுத்தப்படுகிறதுONLINE SHEET

 09/09/2021 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை (செப்டம்பர் 11) போற்றும் வகையில் இந்து தமிழ் இசை நாளிதழ் நடத்தும்  9 முதல் 12 வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு   கவிதைப் போட்டி நடத்துகிறது. இதில் தன்னார்வ  மாணாக்கர்களை கலந்துகொள்ள செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு