Wednesday, 30 June 2021

01.07.2021     // தனி கவனம்//

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

E-SR Update 09.07.2021  அன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பணிப்பதிவேட்டினை Update செய்யாத தலைமை ஆசிரியர்கள் அலுவலகத்தில் பணிப்பதிவேட்டினை பெற்று E-SR Update  உரிய நேரத்திற்குள் முடித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பணிப்பதிவேடு பெற்று சென்ற தலைமை ஆசிரியர்கள் E-SR  பணி முடித்திருப்பின் திரும்ப அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 30.06.2021  

அனைத்து அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்களின் கவனத்திற்கு 

எதிர் வரும் 06.07.2021 முதல் 10.07.2021 வரை திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் 2019 -2020  மற்றும் 2020 -2021 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் பொருட்டு தேர்ச்சி பதிவேடு மற்றும் சேர்க்கை நீக்கல் பதிவேடுகளை (A,B,C&D பதிவேடு உட்பட) முழுமையாக பூர்த்தி செய்து ஒப்புதல் பெற தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

குறிப்பு . இடம் , பங்கேற்கும் பள்ளிகளின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் 

Monday, 28 June 2021

 28.06.2021            //மிக அவசரம் //

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி பெற வேண்டி பணிவரன்முறை செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத பணியாளர்கள் விவரம் இணைப்பில் கண்ட படிவத்தினை பூர்த்தி செய்து  நாளை காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக  அ1 பிரிவில் 2 நகல்களில் நேரில் சமர்ப்பிக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இணைப்பு - 1 இணைப்பு-2 

குறிப்பு:  பெயர் விடுபட்டு பின்னர் கண்டறியப்பட்டால் அதற்கு சார்ந்த பணியாளர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரே பொறுப்பு ஆகும் 

 28.06.2021  

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

இணைப்பில் உள்ள கடிதங்களின் படி பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள ஆன் லைன்  படிவத்தில்  (29.06.2021 ) அன்று மாலை 5.00 மணிக்குள்  உள்ளீடு செய்ய   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET

இணைப்பு  

குறிப்பு . இன்மை அறிக்கை  எனினும்  ஆன் லைன் படிவத்தில் உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Sunday, 27 June 2021

 28.06.2021     அனைத்து அரசு நிதியுதவி  பள்ளித் தாளாளர் மற்றும்  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்    கவனத்திற்கு,

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் நிதியுதவி பெறும் பள்ளிகள் சார்பான 2020 - 2021 புள்ளியியல் கையேடு தயாரிப்பதால் இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து 29.06.2021 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ2 பிரிவில்  நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு நிதியுதவி  பள்ளித் தாளாளர் மற்றும்  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 


Wednesday, 23 June 2021

 24.06.2021        //அவசரம் // தனிகவனம் //

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்ற அனைத்து வகை (SSA, RMSA, கட்டிடம், PTA, தனிகட்டணம்)  வங்கி கணக்கு விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆன் லைன் படிவத்தில் இன்று (24.06.2021) 2.00 மணிக்குள்  உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்  வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் 31.03.2021 அன்றைய நிலவரப்படி இருப்பு உள்ள பக்கத்தின் புகைப்பட நகலுடன் இணைத்து  24.06.2021  பிற்பகல்  03.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்கண்ட விவரங்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்   அவசரமாக கோரியுள்ளதால் தனிகவனம் செலுத்தி எவ்வித காலதாமதமும்  இன்றி செயல்பட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது                    ONLINE SHEET 

குறிப்பு . எந்த காரணத்தை கொண்டும் ஆன் லைன் படிவத்தில் விவரங்களை மட்டும் உள்ளீடு செய்யுவும்  DELETE  செய்யவேண்டாம்

எற்கனவே உள்ளீடு செய்த பள்ளிகள் அனைத்தும் மீண்டும் உள்ளீடு செய்யுமாறு  அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.  

 23.06.2021        //அவசரம் // தனிகவனம் //

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்ற அனைத்து வகை (SSA, RMSA, கட்டிடம், PTA, தனிகட்டணம்)  வங்கி கணக்கு விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் முழு வடிவில் பூர்த்தி செய்து வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் 31.03.2021 அன்றைய நிலவரப்படி இருப்பு உள்ள பக்கத்தின் புகைப்பட நகலுடன் இனைத்து நாளை 24.06.2021  முற்பகல்  11.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்கண்ட விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அவசரமாக கோரியுள்ளதால் தனிகவனம் செலுத்தி எவ்வித காலதாமதமும்  இன்றி செயல்பட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கம் தெரிவிக்கலாகிறது. இணைப்பு   

Friday, 18 June 2021

 18.06.2021  // கொரோனா நிவாரண நிதி ஒரு நாள் ஊதியம் பிடித்தம் //

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று (கோவிட் 19) பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களது ஒருநாள்  அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான உதியத்தினை வழங்க விரும்பும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்  அதற்கான தங்களது விருப்பத்தினை சம்பந்தப்பட்ட ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு எழுத்து பூர்வமாக அளிக்க வேண்டும் 

    மேலும் JUNE 2021   நிகர ஊதியத்தினை அடிப்படையாக கொண்டு  IFHRMS ல் உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி பணியாளர்களின் ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தினை பிடித்தம் செய்ய  அனைத்து வகை தலைமையாசிர்களும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு 

Wednesday, 16 June 2021

 16.06.2021

 அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

 கருவூல கணக்குத்துறை ஆணையர் அவர்களின் VIDEO CONFERENCE செய்தியின் படி பணிப்பதிவேடு - E-Service Register IFHRMS  ல் 18.06.2021 க்கு முன் முடிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு1 

Sunday, 13 June 2021

 14.06.2021- தேர்வுகள் - தனிகவனம். 

    அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

        2020-2021 கல்வியாண்டில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாக்கர்களின் பொதுத் தேர்வு பெயர்ப் பட்டியலினை (NR) 14.06.2021 அன்று பிற்பகல் முதல் 17.06.2021 மாலை 4.00 மணி வரை  உள்ள நாட்களில் DGE வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களை கவனமாக சரிபார்த்து, பின்னர் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் பள்ளி அளவிலேயே தங்களுக்கு வழங்கப்பட்ட User ID & Password - ஐ கொண்டு திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Thursday, 10 June 2021

 10.06.2021

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 

செய்முறை தேர்வு ஏப்ரல் 2021  - மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறை  பொதுத்தேர்விற்கான உழைப்பூதியத் தொகை (ECS)  மின்னணு பரிவர்த்தன முறையில் தலைமையாசிரியர் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கலாகிறது-

இணைப்பு 1 இணைப்பு 2 

Tuesday, 8 June 2021

 08.06.2021  அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளின் படி அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தேசிய நல்லாசிரியர் விருது - 2021 பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 20.06.2021 - க்குள் உரிய இணையதள முகவரியில் நேரிடையாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு -1 இணைப்பு -2, இணைப்பு -3 

Friday, 7 May 2021

 07.05.2021  அனைத்து வகை அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளிகளில்  2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் இயக்குநர் அலுவலகத்திற்கு தொகுப்பு அறிக்கையாக அனுப்ப வேண்டியுள்ளதால் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் இணைப்பில் கண்ட விவரங்களை இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு

Thursday, 6 May 2021

 07.05.2021 

தொடக்கக்கல்வி - 2 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உருவாக்கப்பட்ட பயிற்சி புத்தகம் ( Work Book) சார்பான காணொலிகள் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுவது தொடர்பாக ஒளிபரப்பு நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காண்பதற்கு நடவடிக்கை எடுத்தல் சார்பாக இணைப்பில் கண்ட ஒளிபரப்புக் கால அட்டவணைப்படி மாணவர்களை தயார்செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

 07.05.2021     //  COVID - 19  //   தனிகவனம் //

அனைத்து வகை அரசு / நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.சி / தொடக்க / நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு


பள்ளி ஆசிரியர்கள் தினமும் தங்கள் மாணவர்களிடம் கனிவாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கோ/ அவர்களின் குடும்பத்திற்கோ அல்லது அந்த ஊரில் உள்ள நபர்களுக்கோ/ கோவிட் -19 தொடர்பான நோய் அறிகுறி தென்பட்டாலோ அல்லது மருத்துவ உதவிகள் ஏதாவது தேவைப்படுமாயின் கீழ்கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொண்டு தேவைப்படும் உதவிகளை கோரி பெறலாம்.

மேற்கண்ட விவரங்களை தங்கள் பள்ளியின் வகுப்பாசிரியர்களுக்கு   தெரிவித்து தங்கள் பள்ளி மாணவ பெற்றோர்களுக்கு  உரிய வழிகாட்டுதல் செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோவிட் -19 பெரும்  தொற்றிலிருந்து மாணவர்களையும் பிறரையும் காப்பது  நமது சமுதாய கடமை என்பதை அனைத்து ஆசிரியர்களுக்கும் வலியுறுத்துமாறு  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இத்தகவல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தெரிவிப்பதால்  திங்கள் , புதன் மற்றும் வெள்ளி  பிற்பகல் 12.00 மணிக்குள்   ஆன்லைன் படிவத்தில் உள்ளீடு செய்யவும்  ONLINE SHEET 

தொடர்பாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்.

1 . மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி எண்.04179-222111

2 . சி. தமிழரசன் - 9942839031

3 . டி.வி. சுதாகர் - 9789152870  

 06.05.2021    // COVID -19  தனிகவனம் //

அனைத்து வகை அரசு / நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.சி / தொடக்க / நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு


பள்ளி ஆசிரியர்கள் தினமும் தங்கள் மாணவர்களிடம் கனிவாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கோ/ அவர்களின் குடும்பத்திற்கோ அல்லது அந்த ஊரில் உள்ள நபர்களுக்கோ/ கோவிட் -19 தொடர்பான நோய் அறிகுறி தென்பட்டாலோ அல்லது மருத்துவ உதவிகள் ஏதாவது தேவைப்படுமாயின் கீழ்கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொண்டு தேவைப்படும் உதவிகளை கோரி பெறலாம்.

மேற்கண்ட விவரங்களை தங்கள் பள்ளியின் வகுப்பாசிரியர்களுக்கு   தெரிவித்து தங்கள் பள்ளி மாணவ பெற்றோர்களுக்கு  உரிய வழிகாட்டுதல் செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோவிட் -19 பெரும்  தொற்றிலிருந்து மாணவர்களையும் பிறரையும் காப்பது  நமது சமுதாய கடமை என்பதை அனைத்து ஆசிரியர்களுக்கும் வலியுறுத்துமாறு  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இத்தகவல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தெரிவிப்பதால்  திங்கள் , புதன் மற்றும் வெள்ளி  பிற்பகல் 12.00 மணிக்குள்   ஆன்லைன் படிவத்தில் உள்ளீடு செய்யவும்  ONLINE SHEET 

தொடர்பாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்.

1 . மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி எண்.04179-222111

2 . சி. தமிழரசன் - 9942839031

3 . டி.வி. சுதாகர் - 9789152870  

Thursday, 29 April 2021

  30.04.2021  //  மிக மிக அவசரம்// நினைவூட்டல் - 1 //

அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் உயர்/  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

 2020 -2021 ஆம் ஆண்டிற்கான MBC 6 ஆம் வகுப்பு பயிலும் பெண்கல்வி ஊக்கத்தொகை நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தங்கள் பள்ளி வங்கி கணக்கு புத்தகம் நகல் மற்றும் அசல் ( வங்கி கணக்கு எண் சரிப்பார்க்க ) இன்று (28.04.2021) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் சில பள்ளிகள் இது வரை வங்கி கணக்கு எண் சரிபார்க்க அலுவலகத்தில் ஒப்படைக்காத காரணத்தால் உரிய தொகையினை வங்கி கணக்கில் ECS பற்று வைக்கஇயலாத நிலை உள்ளதால் இது வரை சமர்ப்பிக்காத பள்ளிகள் இனியும் தாமதிக்காமல் இன்று(30.04.2021) மதியம் 12.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  வங்கி கணக்கு எண் வழங்காத பள்ளிகளுக்கான பெண்கல்வி ஊக்கத்தொகையினை மீளவும் அரசுக்கணக்கிற்கு அனுப்பப்படும் என்ற விவரமும் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.

Wednesday, 28 April 2021

 29.04.2021  // மிக மிக அவசரம் தேர்வு பணிக்காக // நினைவூட்டல் -1// 

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

அரசுத்தேர்வுகள்  உதவி இயக்குநர் அலுவலகம், தேர்வு தொடர்பான தகவல்களை பள்ளிகளிடமிருந்து பெறவும் உண்மைத்தன்மை சார்ந்த சான்றிதழ்களை அனுப்ப உரிய பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பவேண்டியுள்ளதாலும், மேலும் 10 ,11மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான முக்கிய தகவல்களை பள்ளிகளிடமிருந்து பெற இணைப்பில் காணும் படிவத்தினை பூர்த்தி செய்து தனிநபர் மூலம்  அ3 பிரிவில் இன்று பிற்பகல் 03.00 மணிக்கள்  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   ATTACHMENT  FORM . ONLINE FORM

குறிப்பு . 

1 . EXCEL படிவத்தினை பூர்த்தி செய்து அதன் நகலினை சமர்ப்பிக்கவேண்டும்.

2 . ஆன்லைன் படித்தில் (ஆங்கிலத்தில்)   உள்ளீடு செய்யவேண்டும்


 28.04.2021  

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு 

தொடக்கக்கல்வி AWP&B  2021-2022 ஆம் ஆண்டுக்கு திட்டமிட ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (TEACHER QUARTERS) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் அனுப்பி வைத்திடஏதுவாக இணைப்பில் காணும் படிவத்தில் விவரங்களை  பூர்த்தி செய்து நாளை (29.04.2021) பிற்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலக (deotpt2015@gmail.com) மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 இணைப்பு2  படிவம் 

 28/04/2021   // நீட் தேர்வு //

அனைத்து  அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான நீட் பயிற்சியில்  கலந்து கொண்டுள்ள மாணாக்கர்களில் அனைத்து பள்ளிகளில் இருந்தும்  முதல் இரு இடங்களை பிடிக்கும்  தகுதிவாய்ந்த  மாணவர்களின்  பெயர் பட்டியல் இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் உள்ளீடு செய்து விட்டு அதன் நகலினை  29.04.2021 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINESHEET  , படிவம் 

குறிப்பு . எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை சமர்ப்பிக்கவும்