Friday, 7 May 2021

 07.05.2021  அனைத்து வகை அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளிகளில்  2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் இயக்குநர் அலுவலகத்திற்கு தொகுப்பு அறிக்கையாக அனுப்ப வேண்டியுள்ளதால் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் இணைப்பில் கண்ட விவரங்களை இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு

Thursday, 6 May 2021

 07.05.2021 

தொடக்கக்கல்வி - 2 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உருவாக்கப்பட்ட பயிற்சி புத்தகம் ( Work Book) சார்பான காணொலிகள் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுவது தொடர்பாக ஒளிபரப்பு நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காண்பதற்கு நடவடிக்கை எடுத்தல் சார்பாக இணைப்பில் கண்ட ஒளிபரப்புக் கால அட்டவணைப்படி மாணவர்களை தயார்செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

 07.05.2021     //  COVID - 19  //   தனிகவனம் //

அனைத்து வகை அரசு / நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.சி / தொடக்க / நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு


பள்ளி ஆசிரியர்கள் தினமும் தங்கள் மாணவர்களிடம் கனிவாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கோ/ அவர்களின் குடும்பத்திற்கோ அல்லது அந்த ஊரில் உள்ள நபர்களுக்கோ/ கோவிட் -19 தொடர்பான நோய் அறிகுறி தென்பட்டாலோ அல்லது மருத்துவ உதவிகள் ஏதாவது தேவைப்படுமாயின் கீழ்கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொண்டு தேவைப்படும் உதவிகளை கோரி பெறலாம்.

மேற்கண்ட விவரங்களை தங்கள் பள்ளியின் வகுப்பாசிரியர்களுக்கு   தெரிவித்து தங்கள் பள்ளி மாணவ பெற்றோர்களுக்கு  உரிய வழிகாட்டுதல் செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோவிட் -19 பெரும்  தொற்றிலிருந்து மாணவர்களையும் பிறரையும் காப்பது  நமது சமுதாய கடமை என்பதை அனைத்து ஆசிரியர்களுக்கும் வலியுறுத்துமாறு  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இத்தகவல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தெரிவிப்பதால்  திங்கள் , புதன் மற்றும் வெள்ளி  பிற்பகல் 12.00 மணிக்குள்   ஆன்லைன் படிவத்தில் உள்ளீடு செய்யவும்  ONLINE SHEET 

தொடர்பாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்.

1 . மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி எண்.04179-222111

2 . சி. தமிழரசன் - 9942839031

3 . டி.வி. சுதாகர் - 9789152870  

 06.05.2021    // COVID -19  தனிகவனம் //

அனைத்து வகை அரசு / நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.சி / தொடக்க / நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு


பள்ளி ஆசிரியர்கள் தினமும் தங்கள் மாணவர்களிடம் கனிவாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கோ/ அவர்களின் குடும்பத்திற்கோ அல்லது அந்த ஊரில் உள்ள நபர்களுக்கோ/ கோவிட் -19 தொடர்பான நோய் அறிகுறி தென்பட்டாலோ அல்லது மருத்துவ உதவிகள் ஏதாவது தேவைப்படுமாயின் கீழ்கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொண்டு தேவைப்படும் உதவிகளை கோரி பெறலாம்.

மேற்கண்ட விவரங்களை தங்கள் பள்ளியின் வகுப்பாசிரியர்களுக்கு   தெரிவித்து தங்கள் பள்ளி மாணவ பெற்றோர்களுக்கு  உரிய வழிகாட்டுதல் செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோவிட் -19 பெரும்  தொற்றிலிருந்து மாணவர்களையும் பிறரையும் காப்பது  நமது சமுதாய கடமை என்பதை அனைத்து ஆசிரியர்களுக்கும் வலியுறுத்துமாறு  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இத்தகவல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தெரிவிப்பதால்  திங்கள் , புதன் மற்றும் வெள்ளி  பிற்பகல் 12.00 மணிக்குள்   ஆன்லைன் படிவத்தில் உள்ளீடு செய்யவும்  ONLINE SHEET 

தொடர்பாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்.

1 . மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி எண்.04179-222111

2 . சி. தமிழரசன் - 9942839031

3 . டி.வி. சுதாகர் - 9789152870  

Thursday, 29 April 2021

  30.04.2021  //  மிக மிக அவசரம்// நினைவூட்டல் - 1 //

அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் உயர்/  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

 2020 -2021 ஆம் ஆண்டிற்கான MBC 6 ஆம் வகுப்பு பயிலும் பெண்கல்வி ஊக்கத்தொகை நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தங்கள் பள்ளி வங்கி கணக்கு புத்தகம் நகல் மற்றும் அசல் ( வங்கி கணக்கு எண் சரிப்பார்க்க ) இன்று (28.04.2021) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் சில பள்ளிகள் இது வரை வங்கி கணக்கு எண் சரிபார்க்க அலுவலகத்தில் ஒப்படைக்காத காரணத்தால் உரிய தொகையினை வங்கி கணக்கில் ECS பற்று வைக்கஇயலாத நிலை உள்ளதால் இது வரை சமர்ப்பிக்காத பள்ளிகள் இனியும் தாமதிக்காமல் இன்று(30.04.2021) மதியம் 12.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  வங்கி கணக்கு எண் வழங்காத பள்ளிகளுக்கான பெண்கல்வி ஊக்கத்தொகையினை மீளவும் அரசுக்கணக்கிற்கு அனுப்பப்படும் என்ற விவரமும் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.

Wednesday, 28 April 2021

 29.04.2021  // மிக மிக அவசரம் தேர்வு பணிக்காக // நினைவூட்டல் -1// 

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

அரசுத்தேர்வுகள்  உதவி இயக்குநர் அலுவலகம், தேர்வு தொடர்பான தகவல்களை பள்ளிகளிடமிருந்து பெறவும் உண்மைத்தன்மை சார்ந்த சான்றிதழ்களை அனுப்ப உரிய பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பவேண்டியுள்ளதாலும், மேலும் 10 ,11மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான முக்கிய தகவல்களை பள்ளிகளிடமிருந்து பெற இணைப்பில் காணும் படிவத்தினை பூர்த்தி செய்து தனிநபர் மூலம்  அ3 பிரிவில் இன்று பிற்பகல் 03.00 மணிக்கள்  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   ATTACHMENT  FORM . ONLINE FORM

குறிப்பு . 

1 . EXCEL படிவத்தினை பூர்த்தி செய்து அதன் நகலினை சமர்ப்பிக்கவேண்டும்.

2 . ஆன்லைன் படித்தில் (ஆங்கிலத்தில்)   உள்ளீடு செய்யவேண்டும்


 28.04.2021  

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு 

தொடக்கக்கல்வி AWP&B  2021-2022 ஆம் ஆண்டுக்கு திட்டமிட ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (TEACHER QUARTERS) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் அனுப்பி வைத்திடஏதுவாக இணைப்பில் காணும் படிவத்தில் விவரங்களை  பூர்த்தி செய்து நாளை (29.04.2021) பிற்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலக (deotpt2015@gmail.com) மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 இணைப்பு2  படிவம் 

 28/04/2021   // நீட் தேர்வு //

அனைத்து  அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான நீட் பயிற்சியில்  கலந்து கொண்டுள்ள மாணாக்கர்களில் அனைத்து பள்ளிகளில் இருந்தும்  முதல் இரு இடங்களை பிடிக்கும்  தகுதிவாய்ந்த  மாணவர்களின்  பெயர் பட்டியல் இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் உள்ளீடு செய்து விட்டு அதன் நகலினை  29.04.2021 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINESHEET  , படிவம் 

குறிப்பு . எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை சமர்ப்பிக்கவும் 

 28.04.2021  //  மிக மிக அவசரம்//

அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் உயர்/  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

 2020 -2021 ஆம் ஆண்டிற்கான MBC 6 ஆம் வகுப்பு பயிலும் பெண்கல்வி ஊக்கத்தொகை நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தங்கள் பள்ளி வங்கி கணக்கு புத்தகம் நகல் மற்றும் அசல் ( வங்கி கணக்கு எண் சரிப்பார்க்க மட்டும்) இன்று (28.04.2021) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  மற்றும் இதில் தனிகவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 


Tuesday, 27 April 2021

 28.04.2021  

அனைத்து வகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

அரசு கடிதத்தின் படி கோவிட் -19  பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கை முறைகளை பின்பற்றுமாறு அனைத்து மாணாக்கர்களுக்கும்  அறிவுறுத்தும்மாறு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 27.04.2021 // மிக மிக அவசரம் // 

அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி பெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.25155/அ1/இ4/2021, நாள்.20.04.2021 ற்கு இணங்க அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தங்கள் பள்ளி அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தினை இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் இன்று 04.00 மணிக்குள்  உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ONLINESHEET 

 27.04.2021  // PTA கட்டணம் செலுத்தாத பள்ளிகள் // நினைவூட்டல் -2 


 PTA  5%  மற்றும்   இணைப்பு கட்டணம்  இந்நாள் வரை செலுத்தாத பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு // 

2019 - 2020 மற்றும் 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் கழக PTA 5% மற்றும் ணைப்பு கட்டணத்தொகையில்  இணைப்பு கட்டணத்தொகையை இவ்வலுவலக ஆ1 பிரிவு எழுத்தரிடமும்,  PTA 5% தொகையினை அரசு மேல்நிலைப்பள்ளி நத்தம் தலைமை ஆசிரியர் அவர்களிடமும் வழங்கி இரசீதினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் இணைப்பில் உள்ள  பள்ளிகள் இந்நாள்வரை செலுத்தவில்லை எனவே PTA 5% மற்றும் இணைப்பு கட்டணம்   செலுத்தாத பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதல்வர்கள்  28.04.2021 பிற்பகல் 2.00 மாலைக்குள்   கட்டணம் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ளுமாறு   தெரிவிக்கலாகிறது.    இணைப்பு 

Monday, 26 April 2021

 27.04.2021  // மிக மிக அவசரம் தேர்வு பணிக்காக //

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

அரசுத்தேர்வுகள்  உதவி இயக்குநர் அலுவலகம், தேர்வு தொடர்பான தகவல்களை பள்ளிகளிடமிருந்து பெறவும் உண்மைத்தன்மை சார்ந்த சான்றிதழ்களை அனுப்ப உரிய பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பவேண்டியுள்ளதாலும், மேலும் 10 ,11மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான முக்கிய தகவல்களை பள்ளிகளிடமிருந்து பெற இணைப்பில் காணும் படிவத்தினை பூர்த்தி செய்து தனிநபர் மூலம்  அ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   ATTACHMENT  FORM . ONLINE FORM

குறிப்பு . 

1 . EXCEL படிவத்தினை பூர்த்தி செய்து அதன் நகலினை சமர்ப்பிக்கவேண்டும்.

2 . ஆன்லைன் படித்தில் (ஆங்கிலத்தில்)   உள்ளீடு செய்யவேண்டும்


 27.04.2021    //  மிக மிக அவசரம் // நினைவூட்ட்ல் -1//

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

பார்வை:-  திருப்பத்தூர் மாவட்டக்முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறை கடிதம் ந.க.எண்.780/அ5/2021 நாள்.12.04.2021.

2011 -2012  ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021 ஆம் கல்வியாண்டு வரை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை தொடராத இடையில் நின்ற மாணவ , மாணவியர்களின் எண்ணிக்கையை இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் (10 படிவம் ) வருடம் வாரியாக தனித்தனியாக  இது வரை உள்ளீடு செய்யாத பள்ளிகள்  இன்று  பிற்பகல் 02.00 மணிக்குள்  உள்ளீடு செய்யுமாறு அனைத்து வகை பள்ளி  தலைமையாசிரியர்களும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.              ONLINE SHEET 

 26.04.2021      //  மிக மிக அவசரம் //

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் மாற்றுப் பணியில் பணிபுரியும் பொருட்டு 27.04.2021 அன்று காலை 10.00 மணிக்கு இணைப்பில் கண்டுள்ள   பணியாளர்களை விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு



 26.04.2021  

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

 தங்கள் பள்ளி / அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளர் / தட்டச்சர்களில் சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் -1 ல் 10.03.2020 க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்கள் இணைப்பில் உள்ள கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 

 26.04.2021    //  மிக மிக அவசரம் //

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

பார்வை:-  திருப்பத்தூர் மாவட்டக்முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறை கடிதம் ந.க.எண்.780/அ5/2021 நாள்.12.04.2021.

2011 -2012  ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021 ஆம் கல்வியாண்டு வரை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை தொடராத இடையில் நின்ற மாணவ , மாணவியர்களின் எண்ணிக்கையை இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் (10 படிவம் ) வருடம் வாரியாக தனித்தனியாக  இன்று மாலை 05.00 மணிக்குள்  உள்ளீடு செய்யுமாறு அனைத்து வகை பள்ளி  தலைமையாசிரியர்களும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.              ONLINE SHEET 

Wednesday, 21 April 2021

  22.04.2021    //  +2தேர்வுகள் //  நினைவூட்டல் -1-//

மே -2021 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (INTERNAL MARK)  இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் இணைப்பில் காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு  அனைத்து  அரசு / நிதியுதவி / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 

குறிப்பு:-

               பூர்த்தி செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியல்களுடன்,  இணைப்பில் காணும் சான்றிதழ்   ஆகியவற்றை உரிய  உறைகளில் வைத்து மேலும் தலைமையாசிரியர் முகப்பு கடிதம் மற்றும் சான்றிதழ் தனியாக   26.04.2021 அன்று காலை 11.00 மணிக்குள் அ3 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 21.04.2021  // 

 அனைத்து அரசு /அரசு உதவி பெறும் பள்ளி  தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

 இணைப்பு பாட பயிற்சி கட்டகம்( BRIDGE COURSE ) மற்றும் பயிற்சி புத்தகம் (WORK BOOKS )        மாணவர்களுக்கு காணொலிகள் தயாரித்து கல்வித் தொலைக்காட்சியில்  22.04.2021 முதல் இணைப்பில் உள்ள காலஅட்டவணையின் படி  ஒளிபரப்புவதால் , அனைத்து மாணாக்கர்களும் காணொலிகளை பார்த்து பயன் பெறுவதை உறுதி செய்திட அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.  இணைப்பு 

 21.04.2021  //  மிக மிக அவசரம் // 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.25155/1/4/2021, நாள்.20.04.2021-ற்கு இணங்க அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் (தொடக்கக்கல்வி உட்பட) வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்கள் பள்ளி அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தினை முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் உள்ள ஆன்லைன் படிவத்தில் இன்று மாலை 04.00மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.