08.12.2020
அனைத்து அரசு / நிதியுதவி / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்களின் கவனத்திற்கு
MASSIVE OPEN ONLINE COURSES CONDUCTED BY NCERT - CREATING AWARENESS BY STUDENTS AND TEACHERS
08.12.2020 ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு (Trust Exam) ஜனவரி 2021இல் நடைபெறவுள்ளது. அத்தேர்வு எழுத விருப்பம் உள்ள 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் பெற்று அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) உள்ளீடு செய்வது தொடர்பான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டி விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. ஊரகப் பகுதிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர், அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு
08.12.2020 அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
01.01.2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பாக இணைப்பில் காணும் தமிழ்நாடு பள்ளிகல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு தகுதி வாய்ந்தவர்கள் சார்பாக கருத்துருக்கள் 3 நகல்களுடன் பணிப்பதிவேட்டுடன் இவ்வலுவலக ஆ2 பிரிவில் 15.12.2020 க்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகுதிவாய்ந்தவர்கள் இல்லை எனில் இன்மை அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
01.01.2019 நிலவரப்படி வெளியிடப்பட்ட முன்னுரிமைப்பட்டியலில் எஞ்சிய 701 முதல் உள்ள ஆசிரியர்களின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. அவர்களது பணி விவரங்கள் சரியாக உள்ளனவா என்பது குறித்தும் பணி ஓய்வு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளவர்கள் விவரங்களை நீக்கம் செய்வது குறித்தும் சேர்க்கை /நீக்கல் விவரங்களை இத்துடன் இணைத்துள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பணிப்பதிவேட்டுடன் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1, இணைப்பு - 2
07.12.2020 அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
கபீர்புரஸ்கார் விருது - 2021 - இணைக்கப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிகளின்படி திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைப்பில் உள்ள மாதிரி படிவத்தில் பூர்த்தி செய்து 08.12.2020 காலை 11.00 மணிக்குள் 3 நகல்களில் தமிழ் & ஆங்கிலத்தில் தனித்தனியாக) இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை deotpt2015@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1, இணைப்பு - 2 இணைப்பு - 3 இணைப்பு - 4
07.12.2020 நினைவூட்டல் - 1 // தேர்வுகள் // மிக மிக அவசரம் //
அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
நடைபெற்று முடிந்த மார்ச் 2020 இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொது தேர்வு தேர்வு எழுதிய பள்ளி மாணாக்கர்களில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழி பயிலும் ( INCLUDING ENGLISH MEDIUM) SC/ ST/SS/ MBC/DNC/BC/OB இனத்தை சார்ந்த (BC/OB இனத்தை சார்ந்த மாணாக்கர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் ) மாணாக்கர்களின் இன வரியான எண்ணிக்கையினை இத்துடன் இணைத்துள்ள ஆன் லைன் படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 04.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET
குறிப்பு .
1). தமிழ் வழி பயிற்று மொழி மட்டும் கொண்ட பள்ளிகள் தங்கள் பள்ளிக்கு எதிரே உள்ள கலங்களில் "0" என்று உள்ளீடு செய்யவும்.
2.) 12, 11 மற்றும் 10 ஆகிய வகுப்புகளுக்கு தனித்தனி தாள்களில் (SHEET) உள்ளீடு செய்யுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
05.12.2020
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த இடைநிலை , உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான விவரப்பட்டில் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 20.12.2020 க்குள் 3 நகல்களில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அ5 பிரிவில் தனி நபர் மூலம் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அதன் நகலினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT ATTACHMENT FORMT
04/12/2020 //NTSE தேர்வுகள் - 1//
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்களின் கவனத்திற்கு
2020 - 2021 டிசம்பர் 27 இல் நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத்தேர்விற்கு பத்தாம் வகுப்பு மாணாக்கர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 25.11.2020 பிற்பகல் முதல் 04.12.2020 வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது அதனை நாளை (05.12.2020) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் காணும் அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை முழுமையாக படித்து செயல்படுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT. NEW SCHOOL REG METHOD
குறிப்பு . 1 விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் காலம் . 25.11.2020 - 05.12.2020
2 . விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கடைசி நாள். 05.12.2020
3 . SUMMARY REPORT / FEES RECEIPT - ஐ உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டி கடைசி நாள். 10.12.2020
04.12.2020 // தேர்வுகள் // மிக மிக அவசரம் //
அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
நடைபெற்று முடிந்த மார்ச் 2020 இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொது தேர்வு தேர்வு எழுதிய பள்ளி மாணாக்கர்களில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழி பயிலும் ( INCLUDING ENGLISH MEDIUM) SC/ ST/SS/ MBC/DNC/BC/OB இனத்தை சார்ந்த (BC/OB இனத்தை சார்ந்த மாணாக்கர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் ) மாணாக்கர்களின் இன வரியான எண்ணிக்கையினை இத்துடன் இணைத்துள்ள ஆன் லைன் படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 04.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET
குறிப்பு . தமிழ் வழி பயிற்று மொழி மட்டும் கொண்ட பள்ளிகள் தங்கள் பள்ளிக்கு எதிரே உள்ள கலங்களில் "0" என்று உள்ளீடு செய்யவும்.
04.12.2020 //அவசரம் //
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
16.02.2017 முதல் 30.11.2020 வரை புதியதாக பணியில் சேர்ந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரம் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் இன்று மாலை 04.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ONLINE SHEET
03.12.2020
அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
01) இரண்டாம் கட்ட வீடியோ பாடங்கள் பதிவேற்றம் செய்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மடிக்கணினியில் பதிவேற்றம் செய்த விவரம் இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக அனுப்பவும். ONLINE SHEET
02) இதுவரை தங்கள் பள்ளியைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்க கோரப்பட்டுள்ள Annexure 1 & Annexure 2 , NON OMMISION CERTIFICATE CONSOLIDATION FORM படிவங்கள் இன்று(03.12.2020) 05.00 மாலைக்குள் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
03) ஆறாம் வகுப்பு எம்பிசி மாணவியர்களுக்கான உதவித்தொகை பெற்று வழங்கியதற்கான படிவங்கள் சார்ந்த தலைமையாசிரியர் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் கையொப்பத்துடன் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் 04.12 20 காலை 10.00 மணிக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர், திருப்பத்தூர்
03/12/2020 நினைவூட்டல் - 1 // தேர்தல் 2021 அவசரம் //
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தின் படி திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 இல் பணியாற்றிட அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரம் இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து இரு நகல்களில் 04.12.2020 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு . www.nvsp.in என்ற இணையதளத்தில் Search in Electoral roll கிளிக் செய்து தங்களின் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
அளவுகோல் பதிவேடு மற்றும் வருகை பதிவேடு நகல் சமர்பிக்கவும்
ATTACHMENT1. FORM . NOC
03.12.2020 // தனிகவனம்//
சிறுபான்மையினர் நலம் - சிறுபான்மையின மதத்தை சார்ந்த தகுதியான மாணவ / மாணவியர்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை பெற வேண்டி இன்னும் NSP(NATIONAL SCHOLARSHIP PORTAL) இணையத்தில் INSTITUTION KYC (REGISTRATION ) முடிக்கப்படாமல் உள்ள இணைப்பில் கண்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சென்னை இயக்குநகரத்தில் இருந்து பெறப்பட்ட தகவல் படி 05.12.2020 க்குள் வேலூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்திற்கு சென்று இப்பணியை முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் KYC முடித்ததற்கான அறிக்கை TIRUPATTUR, DBCWO மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு
குறிப்பு: உரிய காலத்திற்குள் முடிக்கப்படாமல் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
02.12.2020 // தனிகவனம்//
பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து ஆய்வக உதவியாளர் பதவி உயர்வுக்காக தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு தகுதிவாய்ந்த பதிவறை எழுத்தர்களின் விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தை பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் அசல் கல்விச்சான்றுகள் மற்றும் பணிப்பதிவேட்டுடன் 04.12.2020 க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டுமாய் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT
01/12/2020 //கடைசி நினைவூட்டல் //
அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2020-2021 ஆம் ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புதொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கேட்பு பட்டியல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.11.2020 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டது .ஆனால் 51 பள்ளிகள் மட்டுமே அறிக்கை சமர்ப்பித்துள்ளது- கீழ்கண்ட இணைப்பில் உள்ள பள்ளிகள் 02.12.2020 காலை 11.00 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வழங்குமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் 02.12.2020 க்கு பின்னர் கேட்பு பட்டியல் இவ்வலுவலகத்தில் பெறப்படமாட்டது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT 1 ATTACHMENT 2
01/12/2020
01.12.2019 நிலவரப்படி அலுவலக உதவியாளர் / இரவு காவலர் / துப்புரவாளர் / பெருக்குபவர் பதவியிலிருந்து பதிவு எழுத்தர் மற்றும் ஆய்வக உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பணியாளர்கள் தங்களின் பணிப்பதிவேடு மற்றும் அசல் கல்விசான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை 07.12.2020 க்குள் இவ்வலுவலகத்திற்கு கொண்டுவந்து சரிபார்த்து தேர்ந்தோர் பட்டியலில் கையொப்பம் இடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
01/12/2020 // தேர்தல் 2021 அவசரம் //
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தின் படி திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 இல் பணியாற்றிட அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரம் இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து இரு நகல்களில் 02.12.2020 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு . www.nvsp.in என்ற இணையதளத்தில் Search in Electoral roll கிளிக் செய்து தங்களின் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
அளவுகோல் பதிவேடு மற்றும் வருகை பதிவேடு நகல் சமர்பிக்கவும்
ATTACHMENT1. FORM . NOC
27/11/2020
அனைத்து அரசு / அரசு நிதியுதவி / நகராட்சி/ மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு
மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகள் 9 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவிகளுக்கு இணைப்பில் காணும் போட்டிகள் 01.12.2020 காலை 10.00 மணி முதல் வேலூர் மாவட்ட திட்ட அலுவலகம் , காந்தி நகர் , காட்பாடியில் நடைபெறும் . போட்டிகள் ONLINE மூலம் நடைபெறுவதால் பங்கேற்பாளர்கள் தங்களின் படைப்புகளை குறுந்தகட்டில்(CD) பதிவு செய்து 01.12.2020 அன்று காலை 10.00 மணிக்குள் மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைத்து தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT ATTACHMENT
27/11/2020 // மிக மிக அவசரம் //
அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
நிவர் புயல் காரணமாக பள்ளி கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை இணைப்பில் உள்ள ஆன் லைன் சீட்டில் உடன் இன்று 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ON LINE SHEET
27/11/2020 // மிக மிக அவசரம் //
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தங்கள் பள்ளிகளில் கடந்த இரண்டு நாட்களில் நிவர் புயலின் தாக்கத்தால் பள்ளி சுற்றுச்சுவர் , பள்ளிக்கட்டிடங்கள் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருப்பின் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக மூன்று நகல்களில் சேதப் பகுதியின் புகைப்படத்துடன் இன்று நண்பகல் 01.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ4 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை பணிந்து அனுப்ப உள்ளதால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
24.11.2020
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு
அண்ணா விருது - அரசு ஊழியர்கள் வீர தீர செயல் புரிந்திருந்தால் அவர்களின் பெயர் உரிய படிவத்தில் வீர தீர செயல் புரிந்தமைக்கான சான்றுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மூன்று நகல்களில் இவ்வலுவலகத்தில் 25.11.2020 மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும் இன்மை அறிக்கை எனில் deotpt2015@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் 25.11.2020 காலை 11.00 மணிக்குள் அனுப்புமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT1 ATTACHMENT 2