Tuesday, 8 September 2020

 08.09.2020   அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவி /மெட்ரிக் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

INSPIRE AWARD - 2020 - 2021 ஆம் ஆண்டிற்குரிய புத்தாக்க - மானக் அறிவியல் ஆய்வு விருதிற்காக திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை பள்ளிகளும் இணைய தளத்தில் 30.09.2020 க்குள் பதிவு செய்திட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT-1, ATTACHMENT - 2, ATTACHMENT - 3

 08.09.2020         நினைவூட்டல் - 1    // தனிகவனம்  //  

அரசு /அரசு நிதியுதவி பெறும்  உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

NMMSS - 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கு உதவித் தொகை பெற தேர்ச்சி பெற்ற தற்போது 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ /மாணவிகளின் விவரங்களை உடனடியாக பெற்று NSP இணைய தளத்தில் (கடைசி தேதி: 15.09.2020)  விண்ணப்பிக்குமாறு  01.09.2020 அன்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இதுநாள் வரை 9 மாணவ /மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தத்தக்கது. கால அவகாசம் மிக குறைவாக உள்ளதால் இப்பொருள் மீது தனி கவனம் செலுத்தி மாணவ /மாணவிகள் எவரும் விடுபடாமல் 15.09.2020 மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்திட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் NMMSS தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களின் விவரங்களை இணைய தளத்தில் புதுப்பிக்கவும், தெரிவிக்கப்படுகிறது.  ATTACHMENT


Monday, 7 September 2020

 07.09.2020  அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் அரசினர் தொழில் பயிற்சி நிலையம் வானியம்பாடியில் 2020 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இடை நின்றவர்கள் மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இடை நின்றவர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களின் பெயர் மற்றும் முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வாணியம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வருக்கு நேரடியாக அனுப்பி விட்டு அதன் நகலை திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்குமாறு அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT  

Friday, 4 September 2020

 04.09.2020

 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - அரசு / மாநகராட்சி/ நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டத்தின் கீழ் பள்ளி மேலான்மை வளர்ச்சிக் குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை 2019-2020 ஆம் அண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளல்   - அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் தயார் நிலையில் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT ATTACHMEN

Thursday, 3 September 2020

 04.09.2020     // அவசரம் // 

  அரசு /நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

 04.09.2020  அன்று நடைபெறும்  6 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆன் - லைன்  தாளில் இன்று பிற்பகல் 02.30 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ONLINE SHEET 

 04.09.2020

அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2019 -2020  ஆம் கல்வியாண்டில் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு பயின்ற SC/ST/SCC  மாணவர்கள் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பயிற்சி ஆணை மற்றும் வழங்கப்பட்ட வருகை சான்றின் அடிப்படையில் இணைப்பில் காணும் படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனி நபர் மூலம் நேரடியாக ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேற்கண்டவாறு  கற்றல் கற்பித்தல் பயிற்சி பள்ளிகளில் மாணவர்களால் மேற்கொள்ளாமல் இருப்பின் இன்மை அறிக்கையினை இணைப்பில் காணும் படிவத்தில்  பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது. ATTACHMENT   FORM 

 04.09.2020

 அனைத்து வகை  அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

செப்டம்பர் 2020 மாதம் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கை சார்பாக பள்ளிகளில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களின் விவரங்கள் இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   

 வடகிழக்கு பருவமழை காரணமாக வெள்ளப்பொருக்கு எற்படும் நிலையில் பள்ளிகளில்  பொது மக்களை தங்க வைக்கும் பொருட்டு பள்ளியின் ஒரு சாவியினை மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கலாகிறது. 

பழங்குடியினர் 

மாணக்கர்களில் எவரேனும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று நாளது தேதி வரை ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைக்க பெறாத மாணவர்கள் சார்பான விவரங்களை  இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.     ATTACHMENT 

 03.09.2020    

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 தேசிய குடற்புழு நீக்குதல் தினம் ( Deworming Day ) - இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதத்தில் உள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

 03.09.2020                                  நினைவூட்டல் -2

 அனைத்து அரசு / நிதியுதவி பெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

ஆதிதிராவிடர் நலம் - கல்வி உதவித்தொகை - 2020 -2021 ஆம் கல்வியாண்டில்   பெண் கல்வி ஊக்குவிப்புத்தொகை வழங்க தகுதியுள்ள அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்களுக்கு வங்கி கணக்கு எண் துவங்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Monday, 31 August 2020

01.09.2020  அரசு /அரசு நிதியுதவி பெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 

NMMSS - 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கு உதவித் தொகை பெற தேர்ச்சி பெற்ற தற்போது  9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ /மாணவிகளின் விவரங்களை உடனடியாக பெற்று NSP  இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் NMMSS தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களின் விவரங்களை இணையதளத்தில் புதுப்பிக்கவும் தெரிவிக்கப்படுகிறது. 15.09.2020 அன்று கடைசி தேதி என்பதால் இப்பொருள் மீது தனி கவனம் செலுத்தி  பதிவேற்றம் செய்திட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT -1, ATTACHMENT - 2, ATTACHMENT - 3

Sunday, 30 August 2020

31.08.2020   // தேர்வுகள்//

 அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள், செப்டம்பர் 2020 - தனித்தேர்வர்களது விண்ணப்பங்களை ஆய்வு செய்தல் - சேவை மையங்களிலிருந்து பெறப்பட்ட தேர்வுக்கட்டணம் மற்றும் ஆன்லைன் கட்டணத்தினை அரசுக்கணக்கில் செலுத்தக்கோருதல்   சார்பான இணைப்பில் கண்ட அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
31.08.2020                // துறைத்தணிக்கை//

அரசு/நிதியுதவி  உயர் / மேல்நிலைப்பள்ளிக்கணக்குகள் தணிக்கை செய்தல் - கோயம்பத்தூர் மண்டல கணக்கு அலுவலக தணிக்கைப்பணியாளர்களின் மாதாந்திர உத்தேச பயணத் திட்டம் மற்றும் தணிக்கை சார்பான தேதி விவரம் இணைப்பில் உள்ள கோவை மண்டல கணக்கு அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Friday, 28 August 2020

28.08.2020  அனைத்து அரசு  / அரசு நிதியுதவி  /சுயநிதி உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் கண்ட படிவம்  2 ல் 2020-21 ஆம் கல்வியாண்டில் புதியதாக சேர்க்கப்பட்ட அனைத்து வகுப்பு  மாணவர்களின் விவரத்தினையும், படிவம்  3 ல் மாதிரிப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையினையும், படிவம் 4 ல் - +1 வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் விவரத்தினை  Groupwise  மற்றும் Mediumwise வாரியாக இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deottr@nic.in) 29.08.2020 அன்று 11.00 மணிக்குள் (இது மிக மிக அவசரம்) அனுப்ப  தெரிவிக்கலாகிறது. ATTACHMENT

Wednesday, 26 August 2020

26.08.2020

 2019 -2020  ஆம் கல்வியாண்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு பயின்ற SC/ST/SCC  மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பயிற்சி தொடர்பாக வழங்கப்பட்ட பயிற்சி ஆணை மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை  ஆசிரியரால் வழங்கப்பட்ட வருகை சான்றின் அடிப்படையில் இணைப்பில் கண்ட படிவத்தினை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
26.08.2020

அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
ஆதிதிராவிடர் நலம் - 2019 -2020  ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் மாணக்கர்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த வாய்பினை பயன்படுத்தி கீழ்காணும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளது வரை விண்ணப்பிக்காதற்கான காரணத்தை எழுத்து வடிவில் 3 நகல்களில் 28.08.2020 அன்று நடைபெறும் தலைமை ஆசிரியர் கூட்டத்தில்  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட்  மெட்ரிக் விண்ணப்பிக்காத பள்ளிகள் விவரம்

1 .
தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
2 .
ஏகலைவா உண்டி உறைவிட பள்ளி , அதணாவூர்

 
தாமதத்திற்கான விளக்க கடிதம் அளிக்காத பள்ளிகள் விவரம்

1.
அரசு உயர்நிலைப்பள்ளி கோணாப்பட்டு

2 .
தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்

3 .
வனத்துறை உயர்நிலைப்பள்ளி நெல்லிவாசல்

26.08.2020     // அவசரம் // 
  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

 26.08.2020 இன்று 6 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆன் - லைன்  தாளில் இன்று பிற்பகல் 02.30 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT ON LINE SHEET 
26.08.2020
 அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

28.08.2020 அன்று திருப்பத்தூர் அரசு (மீனாட்சி) மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறயுள்ளதால்  கோவிட் -19 வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்றி கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

1 . 2020  - 2021  ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள்  சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு பாட பிரிவு வாரியாக கடைபிடிக்க வேண்டிய  நெறிமுறைகள் பதிவிறக்கம் செய்து பெற்று கொண்டமைக்கு ஒப்புதல் கடிதம் இரு நகல்களில்    ATTACHMENT 

2 . தன்சுத்தம் சுகாதாரம் விழிப்புணர்வு போட்டிகள் சார்பான பரிசு தொகை மற்றும் 6 ஆம் வகுப்பு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகளுக்கு உதவி தொகை வரவு வைக்க பள்ளியின் உதவி தொகை வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு பெயர் ,  IFSC CODE , MICR CODE ,  வங்கி பெயர் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் வங்கி புத்தகம்  2 நகல்களில் ஒப்படைக்குமாறு இதுநாள் வரை சமர்ப்பிக்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
3. PTA 5%  சந்தா செலுத்தாத பள்ளிகள் தலைமை ஆசிரியர் கூட்டத்தில் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ள  தெரிவிக்கலாகிறது. 
4 . CUG BSNL  SIM  க்கான தொகை   ரூ 1400/- கட்டாத தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் எடுத்து வர தெரிவிக்கலாகிறது.
5 .   நலத்திட்டங்கள் சார்பான விவரங்களை வழங்க - இணைப்பில் உள்ள படிவங்களை தேவையான அளவிற்கு நகல் எடுத்துக்கொள்ளவும்   ATTACHMENT 
6. 2019 -2020  ஆம் கல்வியாண்டிற்கான 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற  SC / ST  மாணவிகளுக்கு பெண் கல்வி உதவித்தொகை வழங்கியமைக்கான பயனீட்டு சான்று (  UTILISATION CERTIFICATE )   மற்றும் பற்றொப்பம் (  ACQUITTANCE)  இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Tuesday, 25 August 2020

25.08.2020
 அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

01.06.2020 நிலவரப்படி நிரப்ப தகுந்த சிறுபான்மை பாட ஆசிரியர்களின்   மொழி ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் (Minority language & Minority Subject )  காலிப்பணியிட விவரம் நாளை பிற்பகல் 01.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலிப்பணியிடம் எதுவும் இல்லை எனில்  இணைப்பில் உள்ள படிவத்திலேயே இன்மை  அறிக்கை அனுப்புமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT 
25.08.2020
                                       மாற்றுப்பணி 

இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

இணைப்பில் கண்ட திருப்பத்தூர்  முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி இளநிலை உதவியாளர்களை மாற்றுப்பணி செய்யும் பொருட்டு  திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு 26.08.2020  காலை 10.00 மணிக்கு விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
25.08.2020   // மிக மிக அவசரம் //

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2020 - 2021  ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு பாட பிரிவு வாரியாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் இணைப்பில் கண்டவாறு அனுப்பப்பட்டது. அனைத்து பள்ளிகளும் செயல்முறைகள் ஆணையினை பதிவிறக்கம் செய்து பெற்று கொண்டமைக்கான ஒப்புதலினை 20.08.2020 பிற்பகல் 01.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. ஆனால் நாளது தேதி வரை இரண்டு பள்ளிகளிடமிருந்து மட்டுமே பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளிலிருந்து பெறப்படாதது வருந்தத்தக்க நிகழ்வாகும் எனவே அவசரம் கருதி இன்று மாலை 04.00 மணிக்குள் தனி நபர் மூலம் 2 நகல்களில் இவ்வலுவலக ஆ2 பிரிவில் மறு நினைவூட்டிற்கு இடமின்றி ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT