Saturday, 30 May 2020

30.05.2020  அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2019 - 2020 ம் கல்வி ஆண்டில் 30.04.2020 வரை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் கீழ்கண்ட சான்றுகளை அலுவலகத்தில் ஒப்படைத்து பணி விடுவிப்பு ஆணை பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்

1. SSA - 2019 - 2020 வரை தடையில்லா சான்று
2. RMSA - 2019 - 2020 வரை தடையில்லா சான்று
3. ஆசிரியர் சிக்கன நாணய கூட்டுறவு கடன் சங்கம் தடையில்லா சான்று
4. ARF  - படிவம்
5. பொறுப்புகள் ஒப்படைத்த விவரம்

30.05.2020 அனைத்து வகை அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

VPRC மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஆகஸ்ட் - 2019 முதல் மார்ச் - 2020 வரையுள்ள மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிய விவரம் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களுடன் வங்கி கணக்கு  புத்தக முதல் பக்க நகல் மற்றும் CREDIT  & DEBIT பக்க நகல் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையும் இரு நகல்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் சுகாதார பணியாளர்கள் நியமன விவரம் மற்றும் ஜீன் - 2019 முதல் மார்ச் - 2020 வரை அவர்கள் ஊதியம் பெற்றமைக்கான சான்று ஆகியவற்றை இரு நகல்களிலும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

Thursday, 28 May 2020

28.05.2020  அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தேர்வுகள் – முகாம் பணி – மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 – மேல்நிலை மைய மதிப்பீட்டு முகாம் ONLINE MARK ENTRY பணி  –  கீழ்கண்ட  இணைப்பில் உள்ள ஆசிரியர்களை ONLINE MARK ENTRY முகாம் பணிக்காக 29-05-2020பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT,- 

Wednesday, 27 May 2020

27.05.2020   // தேர்வுகள் அவசரம்//
 பத்தாம் வகுப்பு தேர்வு மைய தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
JUNE -2020 ( மார்ச் 2020 ) - இல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கூடுதலாக அகல துணி வேய்ந்த காகித உறைகள் மற்றும் கோடிட்ட, கோடிடப்படாத  வெற்று கூடுதல் விடைத்தாட்கள் கீழ்கண்ட நாளில் பெற்றுச் செல்ல   தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் / உதவி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT 

 இடம் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி , திருப்பத்தூர்
 நாள்  :  01.06.2020
நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை 

Tuesday, 26 May 2020

26.05.2020  தேர்வு மையத் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

நடைபெற்று முடிந்த மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வின் வருகைப் பதிவேடு பட்டியல் (Hall Wise Attendance Sheet) மற்றும் பெயர்பட்டியல் (Naminal Roll) ஆகியவற்றை தொகுத்து  காட்பாடி கல்புதூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநரகத்தில் 28.05.2020 க்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளதால் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT

Friday, 22 May 2020

22.05.2020  அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தேர்வுகள் – முகாம் பணி – மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 – மேல்நிலை மைய மதிப்பீட்டு முகாம் பணி – ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குதல் –  கீழ்கண்ட  இணைப்பில் உள்ள ஆசிரியர்களை முகாம் பணிக்காக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT,- 1   ATTACHMENT- 2

Thursday, 21 May 2020

21.05.2020 // தேர்வுகள் அவசரம் //
அனைத்து அரசு / நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்/ முதல்வர்களின் கவனத்திற்கு
அரசு / அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும்  பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோவிட் - 19 ஊரடங்கு உத்திரவு காரணமாக வெளி மாநிலம் அல்லது வெளி மாவட்டத்தில்  எவரேனும் தங்கி இருந்தால் அதன் விவரத்தினை இத்துடன்  இணைக்கப்பட்டுள்ள  EXCEL  படிவத்தில் பூர்த்தி செய்து  நாளை (22.05.2020) காலை 11.00 மணிக்குள்  இவ்வலுவலக ( deottr@nic.in )  என்ற  மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்பிவைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
 மேலும் மேற்காணும் தகவல்கள் திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 23.05.2020 க்குள் பணிந்தனுப்ப கோரப்பட்டுள்ளதால் இப்பொருளில் தனிகவனம் செலுத்தி அனுப்புமாறும் , படிவங்களில் எண்ணிக்கை மட்டுமே கோரப்பட்டுள்ளதால் காலதாமதம் தவிர்த்து  அனுப்ப அனைத்து அரசு / அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் மீளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இது மிகவும் அவசரம் 

Wednesday, 20 May 2020


20.05.2020
அனைத்து வகை அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

சர்வதேச உயிரிப்பல்வகைமை தினம் - மே 22 2020  - கொண்டாடும் வகையில் இணைய வழி கட்டுரை போட்டி நடத்துதல் சார்பாக இணைப்பில் கண்ட கடிதத்தில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களிடையே கட்டுரைப் போட்டி நடத்தி கட்டுரைகள் அனைத்தும் 30 மே 2020 மாலை 5.00 மணிக்குள் secy.tnbb@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

Monday, 18 May 2020

19.05.2020
 இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் / முதல்வர்களின் கவனத்திற்கு 
ஆதிதிராவிடர் நலம் - ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் - 2019 -2020 ஆம் கல்வியாண்டில் 9 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியுடைய அனைத்து  SC /ST/ SCC  மாணாக்கர்களுக்கு ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்  ஆகிய இரண்டு திட்டங்களிலும் இது நாள் வரை இணைய வழியில்  விண்ணப்பிக்காத இணைப்பில் உள்ள  பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்காததிற்கான  காரணத்தை எழுத்து வடிவில் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் , மேலும் தகுதியுடைய அனைத்து   SC /ST/ SCC மாணாக்கர்களுக்கு உடனடியாக விண்ணப்பிற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT  ATTACHMENT 

Saturday, 16 May 2020

16.05.2020    //தேர்வுகள் அவசரம் //

2020 இடைநிலை பொதுத்தேர்வு - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்த பள்ளியில் நடைபெற உள்ளதால் சார்ந்த பள்ளியில்  வகுப்பறைகள் மற்றும் Desk and Bench  தேவையான அளவு உள்ளதா ?  என்பதை கீழே உள்ள  Excel online sheet - ல் இன்று (16.05.2020 )  பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ONLINE SHEET 

Friday, 15 May 2020

15.05.2020
 அனைத்து வகை அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 
1. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்திரவின் பெயரில் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு ஜமாபந்தி முறையில் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் ( சாதி/ வருமானம் / இருப்பிடம் ) வருவாய்  துறையின் மூலம் வழங்கப்பட்டுவருகிறது. ஜமாபந்தி நடைபெறும் மையங்களில் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து மாணவர்களுக்கு மேற்கண்ட சான்றிதழை பெற்று தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2. அனைத்து வகை அரசு  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
2020 -2021 ஆம் கல்வியாண்டிற்கான மின்கட்டண தேவை பட்டியல் விவரத்தினை  இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

Friday, 8 May 2020

08.05.2020
அனைத்து அரசு / நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
ஏப்ரல் 2020 -க்கான ஊதியப்பட்டியல்கள் - IFHRMS - மூலம் வில்லை எண்கள் சார் கருவூலத்தில் சமர்ப்பிப்பது  சார்பான இணைப்பில் உள்ள  திருப்பத்தூர் உதவி கருவூல அலுவலர் அவர்களின்  செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT  ATTACHMENT 

Monday, 27 April 2020

27.04.2020
 அனைத்து   வகை நர்சரி மற்றும் மெட்ரிக்  / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளின் முதல்வர்கள் / தாளாளர்களின் கவனத்திற்கு 
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி சென்ற கல்வி ஆண்டு மாணவர்களின் பெற்றோர்களால் செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ள கல்விக்கட்டணம் மற்றும் வரும் கல்வி ஆண்டிற்கான கல்விக்கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் வNலிக்க நிர்பந்திப்பதாக புகார் பெறப்பட்டுள்ளதின் அடிப்படையில் தற்போதைய அசாதாரன Nல்நிலைவயில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்விக்கட்டணம் நிலுவை மற்றும் வரும் கல்வி ஆண்டிற்கான கல்விக்கட்டணங்கள் வNலிப்பது நிறுத்திவைக்க எற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தும் ஒருசில தனியார் பள்ளி நிர்வாகிகள் கல்விக்கட்டணம் செலுத்த பெற்றோர்களை நிர்பந்திப்பதாக புகார் மூலம் தெரியவருகிறது. எனவே திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசிடமிருந்து மறு’உத்திரவு வரும் வரை நிலுவை கல்வி கட்டணம் மற்றும் வரும் கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணம் வNலிக்கக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது மேலும் அவ்வாறு எவரேனும் வNலிப்பது சார்பாக புகார் பெறப்படின் தங்கள்  பள்ளிக்கான அங்கீகாரத்தினை இரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. .மேலும் செயல்முறை கடிதம்  பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புதலை இவ்வலுவலகத்திற்கு பணிந்தனுப்பிவைக்க தாளாளர்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

Friday, 17 April 2020

17.04.2020 - அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கவனத்திற்கு - ஏப்ரல் 2020 மாத சம்பள பட்டியல் epayroll மற்றும் IFHRMS  சம்பளம் பட்டியலுக்கு இணையான சம்பள பட்டியலுக்கு மட்டுமே வில்லை எண் வழங்கப்படும். அதோடு மார்ச் மாத IFHRMS சம்பளம் பட்டியல் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதிக்குள் சமர்பிக்கபடுவதாக கடிதம் கொடுந்திருந்தும் நாளது தேதி வரை IFHRMS சம்பள பட்டியல் சமர்பிக்கபடவில்லை. எனவே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்திற்கு ஏற்ப மார்ச் மாத IFHRMS சம்பளம் பட்டியல் தயார் செய்து வில்லை எண்ணோடு சமர்பிக்கப்படும் ஏப்ரல் மாத சம்பளம் பட்டியலுக்கு மட்டுமே வில்லை எண் வழங்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். Attachment

இப்படிக்கு
சார்நிலைக் கருவூல அலுவலர்
திருப்பத்தூர்   

Wednesday, 8 April 2020

09.04.2020     //மிக மிக அவசரம்//
அனைத்து அரசு / நிதியுதவி  பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி   தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு 
COVID 19 -  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை நிவாரண நிதிக்காக தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்க விருப்பமுள்ளவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு  அரசாணை 41 - ஐ பின்பற்றி  இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி  செய்து 2020 ஏப்ரல் மாத ஊதியப் பட்டியல் தயார் செய்த பின்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
09.04.2020     //மிக மிக அவசரம்//
அனைத்து அரசு / நிதியுதவி  பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி   தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு 
COVID 19 -  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை நிவாரன நிதிக்காக தங்களின் ஒரு நாள் ஊதியத்தை  வழங்க விருப்பமுள்ளவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு  அரசாணை 41 - ஐ பின்பற்றி  இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி  செய்து இன்று (  09.04.2020 ) மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலக  மின்னஞ்சல் முகவரிக்கும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக EDWISE VELLORE இணையதளத்தில் உள்ள படிவத்தினையும் (ONLINE SHEET) ல் பதிவிடவும்   ATTACHMENT G.O    ATTACHMENT

Tuesday, 24 March 2020

24.03.2020
 அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கவனத்திற்கு
மார்ச் மாத EPAYROLL   சம்பள பட்டியல் மற்றும் IFHRMS  சம்பளம் பட்டியலுடன் ஒப்பீடு செய்து வரும் 05 APR 2020  க்குள் சரி செய்து தருகிறோம் என்று உறுதி அளிக்கிறேன் , என்ற கடிதத்துடன் சமர்ப்பிக்கப்படும் சம்பளம் பட்டியலுக்கு மட்டுமே வில்லை எண் தரப்படும் என்பதை உதவி கருவூல அலுவலர்   தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவர்களும் மேற்கண்ட சான்றுடன்,  மார்ச் 2020 க்கான சம்பளபட்டியல்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கலாகிறது. 

                                                                                           மாவட்டக்கல்வி அலுவலர்,
                                                                                                         திருப்பத்தூர்.

Monday, 23 March 2020

24.03.2020    G.O.(Ms). No.152
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

Corona Virus Disease (COVID-19) - Infection Prevention and Control - The Epidemic Diseases ACT, 1897 ( Central Act No.3 of 1897) - Regulations - Notification - Issued  ATTACHMENT 
23.03.2020  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

நபார்டு திட்டம் : கடந்த 3 ஆண்டுகளில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களின் விவரம் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில்  பூர்த்தி செய்து இன்று மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
23.03.2020  // மிக மிக அவசரம் //
 அனைத்து அரசு / நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களின்  விவரங்கள்  இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று ( 23.03.2020 )  பிற்பகல் 03.00 மணிக்குள்  இவ்வலுவலகத்தில்  தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT