12.09.2022 // மிகவும் அவசரம் // தனிகவனம் //
அனைத்து வகை அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தமிழ்நாடு வரவு செலவுத்திட்ட நடைமுறைகளின் கீழ் 31.07.2022 நிலையிலான பணியிடங்கள் அடிப்படையில் எண்வகைப்பட்டியல் தயார் செய்து 2022 - 2023 திருத்த மதிப்பீடு மற்றும் 2023 - 2024 திட்ட மதிப்பீடு பணிகளுக்காக அரசுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு, IFHRMS - இல் எண்வகைப்பட்டியல் தயார் செய்து பெறுதல் சார்பான அறிவுரைகள் பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 049890/பி1/இ1/2022, நாள். 23.08.2022, 26.08.2022 மற்றும் 30.08.2022 - இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14.09.2022 அன்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் எண்வகைப் பட்டியல் சமர்ப்பிக்கப்படாத பள்ளிகள் நாளை 13.09.2022 காலை 10.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இதில் காலதாமதம் ஏற்படின் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர்களே பொறுப்பு என தெரிவிக்கலாகிறது.