Thursday, 6 May 2021

 06.05.2021    // COVID -19  தனிகவனம் //

அனைத்து வகை அரசு / நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.சி / தொடக்க / நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு


பள்ளி ஆசிரியர்கள் தினமும் தங்கள் மாணவர்களிடம் கனிவாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கோ/ அவர்களின் குடும்பத்திற்கோ அல்லது அந்த ஊரில் உள்ள நபர்களுக்கோ/ கோவிட் -19 தொடர்பான நோய் அறிகுறி தென்பட்டாலோ அல்லது மருத்துவ உதவிகள் ஏதாவது தேவைப்படுமாயின் கீழ்கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொண்டு தேவைப்படும் உதவிகளை கோரி பெறலாம்.

மேற்கண்ட விவரங்களை தங்கள் பள்ளியின் வகுப்பாசிரியர்களுக்கு   தெரிவித்து தங்கள் பள்ளி மாணவ பெற்றோர்களுக்கு  உரிய வழிகாட்டுதல் செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோவிட் -19 பெரும்  தொற்றிலிருந்து மாணவர்களையும் பிறரையும் காப்பது  நமது சமுதாய கடமை என்பதை அனைத்து ஆசிரியர்களுக்கும் வலியுறுத்துமாறு  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இத்தகவல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தெரிவிப்பதால்  திங்கள் , புதன் மற்றும் வெள்ளி  பிற்பகல் 12.00 மணிக்குள்   ஆன்லைன் படிவத்தில் உள்ளீடு செய்யவும்  ONLINE SHEET 

தொடர்பாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்.

1 . மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி எண்.04179-222111

2 . சி. தமிழரசன் - 9942839031

3 . டி.வி. சுதாகர் - 9789152870