09.03.2021 இறுதி நினைவூட்டல் // தனி கவனம் // மிக அவசரம் //
அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் ( சுய நிதி வகுப்பு பிரிவு நீங்கலாக) தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2020 - 2021 ஆம் கல்வியாண்டு மாணவ / மாணவியர்களின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் வங்கி கணக்கு விவரங்களை உரிய திருத்தம் செய்யப்பட்ட EXCEL படிவத்தில் பூர்த்தி செய்து இந்நாள் வரை வழங்கப்படாத இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் மட்டும் இன்று மாலை 05.00 மணிக்குள் குறுந்தகட்டில் பதிவு செய்து இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் தனிக் கவனம் செலுத்தி தவறுகள் ஏதும் ஏற்படா வண்ணம் தட்டச்சு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1 இணைப்பு - 2 (பள்ளிகளின் பெயர்) (10 11 12 தனித் தனித் தாளில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் )
குறிப்பு: இன்று மாலை 05.00 மணிக்குள் வழங்கப்படாத பள்ளிகளின் பெயர் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கலாகிறது.