Thursday, 22 October 2020

 22.10.2020  

அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் அரசினர் தொழில் பயிற்சி நிலையம் வானியம்பாடியில் 2020 -2021  ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இடை நின்றவர்கள், தற்போது 10 வகுப்பு துனணத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்  மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இடை நின்றவர்கள் பயன்பெறும் வகையில் இணைப்பில் கண்ட கடிதத்தினை பள்ளி தகவல் பலகையில்  ஒட்டவேண்டும். மேலும்  மாணவர்களின் பெயர் மற்றும் முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வாணியம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வருக்கு நேரடியாக அனுப்பி விட்டு அதன் நகலை திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தனி நபர் மூலம்  ஒப்படைக்குமாறு அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT