20.10.2020
2019 -2020 ஆம் கல்வியாண்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு பயின்ற SC/ST/SCC மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பயிற்சி தொடர்பாக வழங்கப்பட்ட பயிற்சி ஆணை மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்ட வருகை சான்றின் அடிப்படையில் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டக்கொள்ளப்பட்டது. ஆனால் சில பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளிடமிருந்து எந்த ஒரு அறிக்கையும் வரப்பெறாதது மிகவும் வருத்தத்தக்கது. இனியும் காலந்தாழ்த்தாமல் இணைப்பில் உள்ள படிவத்தில் கோரிய தகவல்களை பூர்த்தி செய்து 2 நகல்களில் வருகைச் சான்று மற்றம் பயிற்சி ஆணை 2 நகல்களுடன் 21.10.2020 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
கோரும் தகவல்கள் எதுவாயினும் இன்மை அறிக்கை எனில் 2 நகல்களில் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதனை கருத்திற்கொள்ளுமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.