20.10.2020 அனைத்து வகை மேல்நிலை / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
மார்ச் 2020 - இல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான செய்திக் குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மேலும் இணைப்பில் காணும் இவ்வலுவலக செயல்முறைக் கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்களின் படி 21.10.2020 அன்று தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலை / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2