Tuesday, 9 April 2019

10.04.2019- அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

      VPRC - மூலம் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு ஜனவரி -19 மற்றும் பிப்ரவரி -19 மாத ஊதியம் வழங்கிய விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியும் அது சார்பான விவரம்  இந்நாள் வரையில் ஒப்படைக்காமல் இருப்பதால் இயக்குநருக்கு இப்பொருள் சார்பான தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது.  எனவே ஜனவரி -19 மற்றும் பிப்ரவரி-19 மாத ஊதியம் வழங்கிய விவரத்தினை அளிக்காத  பள்ளிகள் இன்று (10.04.2019) பிற்பகல் 3.00 மணிக்குள் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இது சார்பான விவரங்களை வழங்காத பள்ளிகளின் பெயர்பட்டியல்  வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.  மேலும் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையினை சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது.  ATTACHMENT